Monday, 26 August 2019

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 7

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan  -  Sloka 7

॥  श्री कृष्णाष्टकम्  ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம்  ||

||  ŚRĪ KṚṢṆĀṢṬAKAM  ||

गीतोपदेशबोधाय विश्वरूपप्रकाशिने ।
वेदान्तसारसत्याय वेदनादाय ते नमः ॥ ७॥

கீ³தோபதே³ஶபோ³தா⁴ய விஶ்வரூபப்ரகாஶிநே ।
வேதா³ந்தஸாரஸத்யாய வேத³நாதா³ய தே நம: ॥ 7॥

gītopadeśabodhāya viśvarūpaprakāśine ।
vedāntasārasatyāya vedanādāya te namaḥ ॥ 7॥

गीत-उपदेश-बोधाय  -  கீ³த-உபதே³ஶ-போ³தா⁴ய  -  கீதோபதேசத்தை போதித்தவருக்கு,

विश्व-रूप-प्रकाशिने  -  விஶ்வ-ரூப-ப்ரகாஶினே  -. விச்வரூபமாக பிரகாசித்தவருக்கு,

वेदान्त-सार-सत्याय  -  வேதா³ந்த-ஸார-ஸத்யாய  -. வேதங்கள் முடிவாகக் கூறும் சாரமான உண்மையாக இருப்பவருக்கு,

वेद-नादाय  -  வேத³-நாதா³ய  -. வேத நாதமானவருக்கு,

ते नमः  -  தே நம:  -  உமக்கு நமஸ்காரம்.

பொருள் :

கீதோபதேசத்தை போதித்தவரும், விச்வரூபமாக பிரகாசித்தவரும், வேதங்கள் முடிவாகக் கூறும் சாரமான உண்மையாக  இருப்பவரும், வேத நாதமானவருமான உமக்கு ( ஸ்ரீகிருஷ்ணருக்கு ) நமஸ்காரம்.   7

#  விச்வ ரூபம் என்பது பெரிய்ய்ய்ய்ய்ய ரூபமாக இருக்க வேண்டும் என்பதல்ல. நாம் எதையெல்லாம் விச்வம் ( உலகம் ) என்பதாகக் காண்கிறோமோ,  சிறியது முதல் பெரியது வரை அனைத்தினுள்ளும் இறைவனின் இருப்பை உணர்வது.

No comments:

Post a Comment