Wednesday, 21 August 2019

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 2

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan  -  Sloka 2

॥  श्री कृष्णाष्टकम्  ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம்  ||

||  ŚRĪ KṚṢṆĀṢṬAKAM  ||

देवकीप्रियपुत्राय यशोदालालिताय च ।
वासुदेवाय देवाय नन्दनन्दाय ते नमः ॥ २॥

தே³வகீப்ரியபுத்ராய யஶோதா³லாலிதாய ச ।
வாஸுதே³வாய தே³வாய நந்த³நந்தா³ய தே நம: ॥ 2॥

devakīpriyaputrāya yaśodālālitāya ca ।
vāsudevāya devāya nandanandāya te namaḥ ॥ 2॥

देवकी-प्रिय-पुत्राय  -  தே³வகீ-ப்ரிய-புத்ராய  -   தேவகிக்குப் பிரியமான புத்திரருக்கு,

यशोदा-लालिताय च  -  யஶோதா³-லாலிதாய ச  -  யசோதையால் லாலனை செய்யப்பட்டவருக்கு,

वासुदेवाय  -  வாஸுதே³வாய  -  வஸுதேவரது புதல்வராகிய வாஸுதேவருக்கு,

नन्द-नन्दाय  -  நந்த³-நந்தா³ய  -  நந்தகோபருக்கு ( தன் பாலலீலைகளால் ) மகிழ்ச்சி அளித்தவருக்கு,

देवाय  -  தே³வாய  -  லீலைகள் செய்பவருக்கு,

ते नमः  -  தே நம꞉  -  உமக்கு ( ஸ்ரீகிருஷ்ணருக்கு ) நமஸ்காரம்.

பொருள் :

தேவகிக்குப் பிரியமான புத்திரரும், யசோதையால் லாலனை செய்யப்பட்டவரும், வஸுதேவரது புதல்வராகிய வாஸுதேவரும், நந்தகோபருக்கு ( தன் பாலலீலைகளால் ) மகிழ்ச்சி அளித்தவரும், லீலைகள் செய்பவருமான உமக்கு ( ஸ்ரீகிருஷ்ணருக்கு ) நமஸ்காரம்.   2

#  லாலனை -  அன்பைக் கொட்டி கொட்டி வளர்த்தல்.

No comments:

Post a Comment