Saturday, 26 December 2020

Sri Rama Sloka Pancharatnam - Introduction

Sri Rama Sloka Pancharatnam - Introduction

இந்த ஸ்துதியானது ஶ்ரீராமகர்ணாம்ருதம் என்னும் நூலில், நான்காம் ஆச்வாஸத்தில், 58 முதல் 63 வரையிலான 6 ச்லோகங்களாக அமைந்துள்ளது. இது லக்ஷ்மணருடன் கூடிய இராமரை வணங்குவதாக அமைந்துள்ளது.

|| श्रीराम श्लोक पञ्चरत्नम्  ||

कञ्जातपत्रायतलोचनाय कर्णावतंसोज्ज्वलकुण्डलाय ।
कारुण्यपात्राय सुवंशजाय नमोऽस्तु रामाय सलक्ष्मणाय ॥ १॥

विद्युन्निभाम्भोदसुविग्रहाय विद्याधरैः संस्तुतसद्गुणाय ।
वीरावताराय विराधहन्त्रे नमोऽस्तु रामाय सलक्ष्मणाय ॥ २॥

संसक्तदिव्यायुधकार्मुकाय समुद्रगर्वापहरायुधाय ।
सुग्रीवमित्राय सुरारिहन्त्रे नमोऽस्तु रामाय सलक्ष्मणाय ॥ ३॥

पीताम्बरालङ्कृतमध्यकाय पितामहेन्द्रामरवन्दिताय ।
पित्रे स्वभक्तस्य जनस्य मात्रे नमोऽस्तु रामाय सलक्ष्मणाय ॥ ४॥

नमो नमस्तेऽखिलपूजिताय नमो नमश्चन्द्रनिभाननाय ।
नमो नमस्ते रघुवंशजाय नमोऽस्तु रामाय सलक्ष्मणाय ॥ ५॥

इमानि पञ्चरत्नानि त्रिसन्ध्यं यः पठेन्नरः ।
सर्वपापविनिर्मुक्तः स याति परमां गतिम् ॥ ६॥

इति श्रीरामकर्णामृतान्तर्गतं श्रीरामश्लोकपञ्चरत्नं सम्पूर्णम् ।


|| ஶ்ரீராம ஶ்லோக பஞ்சரத்னம்  ||


கஞ்ஜாதபத்ராயதலோசனாய கர்ணாவதம்ʼஸோஜ்ஜ்வலகுண்ட³லாய .
காருண்யபாத்ராய ஸுவம்ʼஶஜாய நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய .. 1..

வித்³யுன்னிபா⁴ம்போ⁴த³ஸுவிக்³ரஹாய வித்³யாத⁴ரை꞉ ஸம்ʼஸ்துதஸத்³கு³ணாய .
வீராவதாராய விராத⁴ஹந்த்ரே நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய .. 2..

ஸம்ʼஸக்ததி³வ்யாயுத⁴கார்முகாய ஸமுத்³ரக³ர்வாபஹராயுதா⁴ய .
ஸுக்³ரீவமித்ராய ஸுராரிஹந்த்ரே நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய .. 3..

பீதாம்ப³ராலங்க்ருʼதமத்⁴யகாய பிதாமஹேந்த்³ராமரவந்தி³தாய .
பித்ரே ஸ்வப⁴க்தஸ்ய ஜனஸ்ய மாத்ரே நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய .. 4..

நமோ நமஸ்தே(அ)கி²லபூஜிதாய நமோ நமஶ்சந்த்³ரனிபா⁴னனாய .
நமோ நமஸ்தே ரகு⁴வம்ʼஶஜாய நமோ(அ)ஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய .. 5..

இமானி பஞ்சரத்னானி த்ரிஸந்த்⁴யம்ʼ ய꞉ படே²ன்னர꞉ .
ஸர்வபாபவிநிர்முக்த꞉ ஸ யாதி பரமாம்ʼ க³திம் .. 6..

இதி ஶ்ரீராமகர்ணாம்ருʼதாந்தர்க³தம்ʼ ஶ்ரீராமஶ்லோகபஞ்சரத்னம்ʼ ஸம்பூர்ணம் .


|| ŚRĪRĀMA ŚLOKA PAÑCARATNAM ||


kañjātapatrāyatalocanāya karṇāvataṃsojjvalakuṇḍalāya .
kāruṇyapātrāya suvaṃśajāya namo'stu rāmāya salakṣmaṇāya .. 1..

vidyunnibhāmbhodasuvigrahāya vidyādharaiḥ saṃstutasadguṇāya .
vīrāvatārāya virādhahantre namo'stu rāmāya salakṣmaṇāya .. 2..

saṃsaktadivyāyudhakārmukāya samudragarvāpaharāyudhāya .
sugrīvamitrāya surārihantre namo'stu rāmāya salakṣmaṇāya .. 3..

pītāmbarālaṅkṛtamadhyakāya pitāmahendrāmaravanditāya .
pitre svabhaktasya janasya mātre namo'stu rāmāya salakṣmaṇāya .. 4..

namo namaste'khilapūjitāya namo namaścandranibhānanāya .
namo namaste raghuvaṃśajāya namo'stu rāmāya salakṣmaṇāya .. 5..

imāni pañcaratnāni trisandhyaṃ yaḥ paṭhennaraḥ .
sarvapāpavinirmuktaḥ sa yāti paramāṃ gatim .. 6..

iti śrīrāmakarṇāmṛtāntargataṃ śrīrāmaślokapañcaratnaṃ sampūrṇam .

Friday, 25 December 2020

வைகுண்ட ஏகாதசியின் மகிமை

வைகுண்ட ஏகாதசியின் மகிமை ( காமகோடி ப்ரதீபம் )


ஏகாத³ஶ்யாம்ʼ து கர்தவ்யம்ʼ ஸர்வேஷாம்ʼ போ⁴-ஜன த்³வயம்।
ஶுத்³தோ⁴பவாஸ꞉ ப்ரத²ம꞉ ஸத்கதா²ஶ்ரவணம்ʼ தத꞉॥

''ஹே ஜனங்களே! ஸகல பிராணிகளே! ஏகாதசி புண்ணிய காலத்தன்று ஸர்வ பிராணிகளும் செய்ய வேண்டி காரியங்கள் இரண்டு;முதலாவது - சுத்தோபவாஸம்;இரண்டாவது இரவும் பகலும் ஸத்கதா ச்ரவணம்;இந்த இரண்டைத் தவிர மற்றொரு காரியத்தில் அன்று, வேறு காரியத்தில் ஒரு பிராணியும் பிரவிருத்திக்கக் கூடாது. அன்று பகல் இரவு இரு வேளைகளிலும் அன்ன போஜனமும் செய்யக் கூடாது. அப்படிச் செய்தவனுக்கு, சாஸ்திரத்தில் மகாபாவம் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தச் சாஸ்திரத்தை அடியிற் கண்டபடி அறிக.

மாத்ருஹா பித்ருஹா சைவ ப்ராத்ருஹா ததா I

ஏகாதச்யாம் து யோ புங்க்தே பக்ஷயோருபயோரபி II


என்ற மநு வசனமே பிரமாணமாகும்.

சுக்லபக்ஷமோ கிருஷ்ணபக்ஷமோ இரண்டு பக்ஷங்களிலும் ஏற்படும் ஏகாதசி தினத்தில் எந்தப் பிராணி புஜிக்கிறானோ, அவன் தாயைக் கொன்றவனாகவும், தகப்பனைக் கொன்றவனாகவும், சகோதரனைக் கொன்றவனாகவும், தத்துவோபதேசம் செய்த ஆசார்யனைக் கொன்றவனாகவும் ஆகிறான் என்பது மேற்கண்ட சாஸ்திரத்தின் தாத்பரியமாகும்.

இவ்விதம் மஹா கோரமான பாவத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமானால் இரண்டு பஷங்களிலும் ஏகாதசி தினத்தில் உபவாச தினத்தை அநுஷ்டிக்க வேண்டும். உபவாஸம் என்ற சப்தத்தின் பொருளோ 'உப ஸமீபே வாஸயதி இதி உபவாஸ: ' என்ற ஸமாஸத்தை அநுசரித்து, விஷ்ணுவினுடைய ஸமீபத்தில் தன் மனத்தை வஸிக்கும்படி, அதாவது இரவும் பகலுமாக விஷ்வினுடைய கதாச்ரவணமோ, விஷ்ணுவினுடைய நாம ஸங்கீர்த்தனமோ, விஷ்ணுவினுடைய ஸ்வரூப த்யானமோ செய்துகொண்டு அன்று காலத்தைக் கழிக்க வேண்டும்.

'நாத்யச்நதஸ் து யோகோஸ்தி ந சைகாந்தமநச்நத: 'என்ற வாக்கியத்தை அநுசரித்து, அமிதமாக, அளவு கடந்த புஜிப்பவனுக்கோ, ஸர்வ ப்ரகாரத்திலும் ஆஹாரம் செய்யாமலிருப்பவனுக்கோ தியானயோகம் ஸித்திக்காது என்று தெரிகிறபடியால், ஏகாதசி தினத்தன்று விருத்தர்களோ பாலர்களோ, அவர்கள் பழத்தையோ க்ஷீரத்தையோ அல்பமாக உட்கொள்வதனால் தோஷம் ஏற்படாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். ஏகாதசி விரதத்தின் மகிமை மிகவும் உயர்ந்ததாக ஸ்ரீமத் பாகவதாதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸூர்ய வம்சத்தில் அம்பரீஷன் என்ற அரசன் இருந்தான். அந்த ராஜன் விஷ்ணு பக்தர்களுக்குள் பெரிய பக்தனும் ஆவான். அந்த மகாநுபாவன் ஏகாதசி தினத்தன்று சுத்தோபவாஸம் இருந்து, ச்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம் இந்த உபாயங்களால் மகாவிஷ்ணுவை ஸ்வாதீனமாகச் செய்து கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்துவந்தான். பகவானான மகாவிஷ்ணு அவனுடைய மேலான பக்தியைப் பார்த்து, அவனுடைய ராஜாங்கத்தை ரக்ஷிப்பதற்காக,

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா:பர்யுபாஸதேமி

தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்மிமி

என்று தாம் செய்த பிரதிக்கினையை அநுஸரித்து, அந்த ராஜனுடைய அரண்மனை வாசலில், தம் ஸுதர்சன சக்ரத்தைப் பிரதிஷ்டை செய்து அந்த ராஜனை ரக்ஷித்து வந்தார். அதனால் அந்த ராஜனுக்கு ஸாமந்த ராஜாக்கள் மூலமாக ஒருவிதப் பீதியும் ஏற்பட நியாமில்லாமல் ஆகிவிட்டது.

இப்படி இருக்கும் பொழுது ஒரு ஏகாதசியன்று வழக்கம் போல் சுத்தமான உபவாசத்தை அநுஷ்டித்து பகவானான விஷ்ணுவைக் கிரமப்படி ஆராதித்துவிட்டு, மறு தினத்தில் துவாதசி காலபாரணையைச் செய்ய ஸித்தமாக இருந்தான். அன்றைத் துவாதசியோ, மூர்த்தார்தாவாசிஷ்டாயாம் த்வாதச்யாம் பாரணாம் வ்ரதீ என்ற வாக்கியத்தை அநுசரித்து, ஸ¨ரியன் உதித்து ஒரே நாழிகை மட்டும் துவாதசி மீதியாக இருந்தது. ஏகாதசி வ்ரத பல ஸித்தி துவாதசியில் பாரணை செய்தால்தான் பூர்த்தியாகும். த்ரயோதசி வந்தால் பகல்போஜனத்தைத் தர்மசாஸ்திரம் நிஷேதித்திருக்கிறது.

த்ரயோதஸ்யாம் திவாபுக்திர் ப்ரஹ்மஹத்யாஸமா ஸ்ம்ருதா I

ப்ரதோஷ சிவமாராத்ய ராத்ரிபுக்திர் விமுக்கிதா II

என்ற ஸ்ம்ருதி ப்ரகாரம் திரயோதசி திதியில் பகலில் போஜனம் செய்தால், ப்ரமஹத்தி தோஷமும், ஸாயங்காலத்தில் பரமேஸ்வரனைப் பூஜித்துவிட்டு ராத்திரியில் ப்ரதம ஜாமத்தில் போஜனம் செய்வது மோக்ஷம் என்ற பலனைக் கொடுக்கக் கூடியதென்றும் சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. இந்தச் சாஸ்திரத்தை அம்பரீஷ மகாராஜா அறிந்தவனாதலால் ஒரு நாழிகை மட்டும் புச்சம் இருக்கும் துவாதசிக்குள் பாரணை செய்யவேண்டுமென்ற ஆவலுடன், எல்லா அநுஷ்டானங்களையும் அதற்குள் முடித்துக்கொண்டு, பாரணை செய்ய ஸித்தனானான் .

அந்தத் தருணத்தில், துர்வாஸ மகரிஷி தம் சிஷ்யர்களுடன் ராஜனுடைய கிருஹத்தில் போஜனம் செய்ய வேண்டுமென்ற விருப்பமுள்ளவராக அதிதியாக வந்து சேர்ந்தார். ராஜன் பரம பக்தியுடன் துவாதசி புண்ணியகாலத்தில், சிவபக்த அக்ரேஸரரான துர்வாச மஹரிஷி போஜனத்தைக் கருதி வந்தது நமது பெரிய பாக்கியத்தை ஸ¨சிக்கிறது என்று ஆனந்தித்து, மஹரிஷியை வரவேற்று உபசரித்தான். மஹரிஷியோ, தாம் மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்யவேண்டுமென்ற ஆவலுடன் ராஜனிடம் அதைத் தெரிவித்துவிட்டுத் தம் சிஷ்யர்களுடன் ஸரயூ நதிக்குச் சென்றார்.

ராஜன்,''துவாதசி அல்பமாக இருப்பதானால், சீக்கிரம் தங்கள் ஆகமனத்தை எதிர்பார்க்கிறேன்''என்று பிரார்த்தித்தான். மஹரிஷி, ''ஒரு க்ஷணத்திற்குள் வருகிறேன்''என்று சொல்லிவிட்டு நதிக்குச் சென்றார். சொன்னபடி மஹரிஷி துவாதசி முடிவதற்குள் வரவில்லை. ராஜனோ, துவாதசி போய்விடுமே என்று கவலையை அடைந்தான். துவாதசி பாரணை செய்யாமற் போனாலோ, ஏகாதசி வ்ரதபலன் ஸித்திக்காது என்று சொன்னோம். அதற்காக, 'அஶிதம் ச அநஶிதம் ச ப⁴வதி' என்ற சாஸ்திரமானது, ஸாளக்ராம அபிஷேக தீர்த்தத்தை ஒரு உத்தரணி உட்கொண்டால், துவாதசி பாரணை செய்த பலனும் ஸித்திக்கும்;அதிதியை விட்டுப் போஜனம் செய்தான் என்ற தோஷமும் வராது என்ற தாத்பர்யத்தைக் கூறுகிறபடியால் அதை அநுசரித்து ஸாளக்ராம தீர்த்தத்தை ப்ராசனம் செய்து ஏகாதசி விரத பலன் ஸித்திக்கும்படியாகவும் செய்துகொண்டு, அன்ன போஜனத்திற்காகத் துர்வாஸ மஹரிஷியை எதிர்பார்த்துக்கொண்டு வந்தான்.

மஹரிஷி சிஷ்யர்களுடன் சற்று நேரம் கழித்து வந்து, ஸாளக்ராம தீர்த்தத்தை ராஜன் ப்ராசனம் செய்ததற்காக, ''மகா தபஸ்வியான என்னை முதல்முதலில் பூஜிக்கச் செய்யாமல் பாரணை செய்தது தவறு''என்று கோபித்துச் சபிக்க ஆரம்பித்தார்.

ராஜன் எவ்வளவோ அவருடைய காலில் விழுந்து மேற்காட்டிய சாஸ்திர வசனத்தையும் பிரமாணமாக அவரிடம் நிரூபணம் செய்து, ''ஸாளக்ராம தீர்த்தத்தை மட்டும் நான் ப்ராசனம் செய்தேன்; அன்ன போஜனம் நான் செய்யவில்லை;க்ஷமித்துக்கொள்ள வேண்டும்''என்று கெஞ்சிக் கதறியும் துர்வாஸ மஹரிஷி கொஞ்சமேனும் பொறுமையை அடையாமல் பரம கோபத்தை அடைந்து தம்முடைய ஜடையைத் தட்டி அதிலிருந்து ஒரு பிசாசை (பூதத்தை) த் தபோமஹிமையினால் ஸ்ருஷ்டித்து, ராஜனைப் பக்ஷிக்கும்படி ஏவினார். உடனே ராஜனுடைய யோகக்ஷேமத்தை வஹிக்க, பகவானான விஷ்ணுவினால் அரண்மனை வாசலில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த சக்கரம், தான் ராஜனை ரக்ஷிப்பதற்காக ஆக்ரோஷத்தை அடைந்து, துர்வாஸரால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிசாசைத்தான் பக்ஷிப்பதற்கு சப்தித்துக்கொண்டு வெளிக்கிளம்பிற்று. பிசாசோ, துர்வாஸ மஹரிஷியினிடம் சென்று, ''விஷ்ணு பக்தனான அம்பரீஷணிடம் நான் பிரவேசிக்கச் சக்தியற்றவனாகி விட்டேன்;ஸுதர்சன சக்ரம் என்னை விரட்டிக்கொண்டு வருகிறது. அந்தச் சக்கரத்துடன் எதிர்த்துப் போராட எனக்குச் சக்கி இல்லை. என் பசியையோ அடக்கவும் முடியவில்லை. எனக்கு ஆஹாரம் இப்பொழுது தேவையாக இருக்கிறது. உம்மையே நான் பக்ஷிக்கிறேன்''என்று செல்லி, துர்வாஸரையை பலாத்காரம் செய்து பக்ஷிக்க ஆரம்பித்தது.

துர்வாஸ மஹரிஷி தமது தபோமஹிமையால் விஷ்ணு பக்தனைக் கொல்லப் பிசாசை ஸ்ருஷ்டித்தாரே தவிர, அதை உபஸம்ஹாரம் ஹாரம் செய்யச் சக்தியற்றவராக ஆகிவிட்டார். தம் சிஷ்யர்களோடு துர்வாஸ மஹரிஷி பிசாசுக்குப் பயந்து ஓட ஆரம்பித்துவிட்டார். பிசாசோ துர்வாஸரை விரட்டிக்கொண்டு ஓடுகிறது. பிசாசையோ ஸுதர்சன சக்ரம் பக்ஷிக்க விரட்டுகிறது. இவ்வித துர்வாஸ மஹரிஷி ஒரு லோகம் மீதியின்றி ஓடியும், தம் ஆத்மாவைத் தாம் ரக்ஷித்துக்கொள்ளக் கஷ்டப்பட்டும் முடியவில்லை. இந்திரலோகம், பிரம்மலோகம், கைலாஸம் முதலான ஸ்தலங்களுக்குச் சென்று, தம்மைக் காப்பாற்றத் தமக்கு யாராவது உதவி செய்வானோ என்று எதிர்பார்த்தும், ஒருவராலேயும் இவரை, இவர் ஸ்ருஷ்டித்த பிசாசினின்றும் ரக்ஷிக்க முடியாமல் ஸுதர்சன சக்ரத்திற்குப் பயந்து பின்வாங்கிவிட்டார்கள். கடைசியில் வைகுண்டம் சென்று மகாவிஷ்ணுவின் காலில் விழுந்தார். பகவானான விஷ்ணு, 'அஹம் பக்தபராதீந:' என்றதனால், ''ஹே பிராம்மணா!நான் பக்தனுக்கு உட்பட்டவன். உம்மை ரக்ஷிக்கும் விஷயத்தில் எனக்கு ஸ்வாதந்த்ரியம் இல்லை. சரணாகதி செய்தவனை நான் ரக்ஷிக்கிறேன் என்று சொன்னதும், எனக்கு நேரில் அபசாரம் செய்தவனைக் குறித்து மட்டுமே தவிர, என் பக்தனுக்கு அபசாரம் செய்தவனைக்கூட, என்னை சராணகதி செய்ததற்காக, நான் ரக்ஷிக்கிறேன் என்று அதற்கு அர்த்தமில்லை. ஆகையால், என்னால் ஒன்றும் ஸாத்தியமில்லை. அம்பரீஷனிடம் போம்'' என்று துர்வாஸ மஹரிஷியை மஹாவிஷ்ணுவும் கைவிட்டுவிட்டார்.

துர்வாஸ மஹரிஷி கதியில்லாமல் அம்பரிஷி மகாராஜனிடத்தில் சிஷ்யர்களுடன் சரணாகதி செய்ய வந்தார். ராஜனோ, ''பிராம்மணோத்தமர்கள் தாங்கள். என்னைத் தாங்கள் சராணாகதி செய்யக் கூடாது. நான் எந்த அபராதமும் செய்யவில்லையே;தங்களைப் போன்ற தபஸ்விகளுக்கு இவ்விதம் கோபம் வரலாமா?''என்று சொல்லி க்ஷமாபணம் செய்துவிட்டு, மஹரிஷியின் காலில் விழுந்து ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, திவ்ய போஜனாதிகளைச் செய்து வைத்து, துர்வாஸ மஹரிஷியினால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிசாசையும் தன் பக்திமகிமையினால் உபஸம்ஹாரம் செய்து, ஸுதர்சன சக்ரத்தையும் பொறுத்துக்கொள்ளும்படி பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டு, பிராம்மணோத்தமருடைய ஆசீர்வாதத்திற்கும் பாத்திரமானான்.

இந்தக் கதை ஸ்ரீமத் பாகவதத்தில் ஒன்பதாவது ஸ்கந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏகாதசி விரதத்தை அநுஷ்டித்தவனுக்கு மகாவிஷ்ணு ஸுலபமாகிறார் என்பதே இந்தக் கதையின் தாத்பர்யமாகும். விரதங்களுக்குள் ஏகாதசி விரதமே நித்ய விரதமாயும், உயர்ந்த விரதமாயும் ஆகும். ஸர்வ பிராணிகளும் அதை அநுஷ்டித்தே தீரவேண்டும். அந்த விரதத்தை அநுஷ்டிக்கிறவர்களுக்கு மோக்ஷம் கையிலுள்ள நெல்லிக்கனி போல் ஸுலபமாகக் கிடைக்கும்.

'ஏகைவ த³ஶா அவஸ்தா² யஸ்யாம் திதௌ² வ்ரதாநுஷ்டா²ந தத்பராணாம் நரணாம் ஏகாதஶீ' என்ற ஸமாஸத்தை அநுசரித்து, எந்தத் திதியில் மேற்சொன்ன விரதத்தை அநுஷ்டிக்கிற மனிதர்களுக்கு முக்தி என்ற ஒரே நிலையைத் தவிர வேறு பிறப்பு இறப்பு என்ற அவஸ்தை இல்லாமல் ஆகுமோ அந்தத் திதிக்கு ஏகாதசி பெயர் ஏற்ப்பட்டது என்று தெரிகிறபடியால், அந்தத் திதியில் உபவாஸம் என்ற விரதத்தை அநுஷ்டிப்பவர்களுக்கு மோக்ஷம் என்ற பரம புருஷார்த்தம் கைக்கு எட்டினதாகவே ஆகிறது என்பது ஸித்தமாகிறது.

அதிலும் வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமானது. மற்ற ஏகாதசிகளில் உபவாஸம் முதலான விரதத்தை அநுஷ்டானம் செய்யாமல் தவறினவர்கள், வைகுண்ட ஏகாதசியன்றாவது அந்த விரதத்தை அநுஷ்டித்தார்களேயானால், மற்ற ஏகாதசிகளிலும் விரதாநுஷ்டானம் செய்தவர்களாகவே அவர்களைக் கருதி வைகுண்டததில் நித்யஸூரிகளுடைய பதவியை அளிப்பதில் பகவான் நியதராக இருக்கிறார். ஒவ்வொரு வருஷத்திலும், தனுஸ்ஸில் ஸூரியன் இருக்கும்பொழுது சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசியன்று மகாவிஷ்ணு தம் சயனமான ஆதிசேஷ பகாவனிடமிருந்து யோகநித்தியிலிருந்து விழித்துக் கொண்டு, எவர் எவர் விரதாநுஷ்டானம் செய்தவர்கள், மோக்ஷத்தை யாருக்கு அளிக்க வேண்டும் என்று கவனிக்கும் தினமானதால், அன்றாவது இந்த விரதத்தை அநுஷ்டித்து, மகாவிஷ்ணுவினுடைய ப்ராஸதத்திற்குப் பாத்திரராக வேண்டுமென்று கோருகிறோம்.

Sunday, 25 October 2020

வெற்றியை தரும் விஜயதசமி : ( 26-10-20 )

வெற்றியை தரும் விஜயதசமி : ( 26-10-20 )


விஜயதசமி என்றால், வெற்றி தருகிற நாள் என்று அர்த்தம். நவராத்திரியின் போது தான் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் போர் செய்து மகிஷாசுரனை வதம் செய்தாள். தேவர்கள் அந்த வெற்றியை பூசை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம்.

இதையே கொல்கட்டா போன்ற வடமாநிலங்களில் துர்கா பூஜையை விஜயதசமியாகவும், கொண்டாடுகிறார்கள். தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்ட அன்னையை ஊர்வலமாகக் கொண்டு செல்லும் வழக்கம் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகம் போற்றும் மைசூரு தசரா பண்டிகையும் விஜய தசமி நாளில் தான் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மைசூரூ தசரா பண்டிகையில், இடம்பெறும் ரத ஊர்வலத்தைக் காண நம்மூரில் இருந்து மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அங்கு கூடுவது சிறப்பு.

சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில், ஆரம்பக் கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம். சரஸ்வதி பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் விஜயதசமி அன்று பூஜித்து நைவேத்தியத்துடன், ஆரத்தி காட்டி அன்று சிலவரிகளாவது படித்தால் கல்வி மேலும் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.


ஆதிசங்கரர், ஒருமுறை தன்னுடைய சுற்றுப்பயணத்தின்போது மண்டனமிச்ரர் என்னும் பண்டிதருடன் விவாதம் செய்து, வெற்றி பெற்றார். மண்டனமிச்ரர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, சங்கரரின் சீடராகி அவருடனே புறப்படுகிறார்.

அப்போது மண்டனமிச்ரரின் மனைவியான ஸரஸவாணி தன்னுடைய கணவரைப் பிரிய மனமில்லாமல் தானும் அவர்களுடன் வருவதாகக் கூற , ஆதிசங்கரர், பெண்களை தன் சிஷ்யைகளாக ஏற்றுக்கொள்வதில்லை என்று மறுத்தார். ஸரஸவாணியோ தான் அவர்களுடன் கூடவே வராமல் அவர்களுக்குப்பின்னால் தொடர்ந்து வருவதாகவும், சங்கரரோ மற்ற சீடர்களோ திரும்பிப் பார்க்க வேண்டாம் எனவும், தன்னுடைய கால் கொலுசின் ஒலி கேட்பதை வைத்து, தான் வருவதை அறியலாம் என்றும் கூறுகிறாள்.

அப்படியில்லாமல் அவர்கள் திரும்பிப் பார்த்தால் அந்தக் கணமே பின் தொடருவது இல்லை என்றும் கூறவே, அதன்படியே பயணம் தொடருகிறது.

சிருங்கேரி மலைக்கு வந்து சேர்ந்த சங்கரர், தன் சிஷ்யர்களுடன் மேலும் பயணத்தைத் தொடரும் முன்னால் அங்கே ஒரு கர்ப்பிணியான தவளை பிரசவித்துக் கொண்டிருக்க, அந்தத் தவளைக்கு வெயில் தாக்காதபடி ஒரு பாம்பு படம் உயர்த்தி குடை பிடிக்கும் அற்புதத்தைப் பார்க்கிறார்.

அந்தப் புனிதமான இடம் மகான் ரிஷ்யசிருங்கர் இருந்த அதே இடம் எனப் புரிந்து கொண்ட ஆதிசங்கரர் இந்த இடமே தானும் தன் சிஷ்யர்களும் தங்கியிருக்கத் தகுந்த இடம் எனத்தீர்மானத்து திரும்பிப் பார்க்கவே, ஸரஸவாணி அந்தக் கணமே அங்கேயே சிலை வடிவாகி நின்று விடுகிறாள். அத்துடன் அவள் ஆதிசங்கரரிடம் அசரீரியாக, சாரதை - ஆக தான் இங்கேயே இருப்பதாகவும், இந்தத் தலத்தில் தன்னைப் பூஜித்து வருபவர்களுக்கு, தன்னுடைய அருள் பரிபூரணமாகக் கிட்டும் எனவும் கூறிகிறாள்.

அப்படி சிருங்கேரியில் சாரதை குடிகொண்டநாள் தான் விஜயதசமி எனவும், அன்று அவளைப் பூஜித்து குழந்தைகளின் கல்வியை ஆரம்பித்தால், சாரதையின் அருள் பரிபூரணமாகக்கிட்டும் என்பது ஐதீகம்.

விஜயதசமி தினத்தன்று பண்டாசுரனுடனான போரில், தேவி அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட, அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சாய்த்து, அசுரனைச் சங்காரம் செய்தாள். இதனை ஞாபகப்படுத்தும் விதமாக விஜயதசமியன்று சிவன்கோவில்களில் பரிவேட்டை உற்சவம் நடைபெறுகிறது.


தேவி போருக்கு முன் எச்சரிக்கை விடுக்கும்போது மஹிஷாஸுரனிடம் இதைக் கூறுவதாக தேவிபாகவத புராணம் கூறுகிறது.

यदा यदा हि साधूनां दुःखं भवति दानव ।
तदा तेषां च रक्षार्थं देहं सन्धारयाम्यहम् ॥

யதா³ யதா³ ஹி ஸாதூ⁴னாம்ʼ து³​:க²ம்ʼ ப⁴வதி தா³னவ |
ததா³ தேஷாம்ʼ ச ரக்ஷார்த²ம்ʼ தே³ஹம்ʼ ஸந்தா⁴ரயாம்யஹம் ||
- ஸ்ரீமத் தேவி பாகவதம், 5.18.21.


" எப்போதெல்லாம் சாதுக்களுக்குத் துன்பம் உண்டாகிறதோ , ஹே தானவனே ( அஸுரனே ), அப்போது அவர்களை ரக்ஷிப்பதற்காக ( அருவமாய் இருக்கின்ற ) நான் ஓர் உருவத்தோடு தோன்றுகின்றேன். "


தேவியின் வெற்றி விழாவான விஜயதசமியில் நாமும் நற்செயல்களை தொடங்கி வாழ்க்கையில் மேன்மேலும் உயர்வை காண்போம்.

Thursday, 17 September 2020

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 10 ( Final )

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 10 ( Final )

|| श्री कृष्ण स्तुतिः ||

|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||

|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||

वाणी गुणानुकथने श्रवणौ कथायां
हस्तौ च कर्मसु मनस्तव पादयोर्नः ।
स्मृत्यां शिरस्तव निवासजगत्प्रणामे
दृष्टिः सतां दर्शनेऽस्तु भवत्तनूनाम् ॥ १०॥

इति श्रीमद्भागवतान्तर्गतं गुह्यककृता श्रीकृष्णस्तुतिः समाप्ता ।

வாணீ கு³ணானுகத²னே ஶ்ரவணௌ கதா²யாம்ʼ
ஹஸ்தௌ ச கர்மஸு மனஸ்தவ பாத³யோர்ன꞉ .
ஸ்ம்ருʼத்யாம்ʼ ஶிரஸ்தவ நிவாஸஜக³த்ப்ரணாமே
த்³ருʼஷ்டி꞉ ஸதாம்ʼ த³ர்ஶனே(அ)ஸ்து ப⁴வத்தனூனாம் .. 10..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதாந்தர்க³தம்ʼ கு³ஹ்யகக்ருʼதா ஶ்ரீக்ருʼஷ்ணஸ்துதி꞉ ஸமாப்தா .

vāṇī guṇānukathane śravaṇau kathāyāṃ
hastau ca karmasu manastava pādayornaḥ .
smṛtyāṃ śirastava nivāsajagatpraṇāme
dṛṣṭiḥ satāṃ darśane'stu bhavattanūnām .. 10..

iti śrīmadbhāgavatāntargataṃ guhyakakṛtā śrīkṛṣṇastutiḥ samāptā .

பொருள் :

தங்களது திருக்கல்யாண குணங்களைத் தொடர்ந்து கூறுவதில் எங்களது வாக்கும்,  கேட்பதில் காதுகளும், பணிபுரிவதில் கைகளும், திருவடிகளின் நினைவில் மனமும், தாங்கள் குடிகொண்டுள்ள இவ்வுலகை வணங்குவதில் தலையும், தங்கள் திருவுடலாக உலாவுகின்ற நல்லோரைக் காண்பதில் பார்வையும் ஈடுபடட்டும்.  10 ( 38 )

இத்துடன் பாகவத புராணத்தில் காணப்படுவதும், குஹ்யகர்களால் இயற்றப்பெற்றதுமான ஶ்ரீகிருஷ்ண ஸ்துதி நிறைவு பெறுகிறது.

Meaning :

Let our speech be employed (hereafter) in recounting Your excellences, our ears in hearing Your stories, our hands in doing Your work, our mind in the thought of Your feet, our head in bowing to the world, Your (own) abode and our sight in beholding saints, Your (very) embodiments.  10 ( 38 )

Thus ends the Sri Krishna Stuti created by Guhyakau and which is found in Bhagavata Purana.

Wednesday, 16 September 2020

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 9

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 9

|| श्री कृष्ण स्तुतिः ||

|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||

|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||

अनुजानीहि नौ भूमंस्तवानुचरकिङ्करौ ।
दर्शनं नौ भगवत ऋषेरासीदनुग्रहात् ॥ ९॥

அனுஜானீஹி நௌ பூ⁴மம்ʼஸ்தவானுசரகிங்கரௌ .
த³ர்ஶனம்ʼ நௌ ப⁴க³வத ருʼஷேராஸீத³னுக்³ரஹாத் .. 9..

anujānīhi nau bhūmaṃstavānucarakiṅkarau .
darśanaṃ nau bhagavata ṛṣerāsīdanugrahāt .. 9..

பொருள் :

எல்லையற்று எங்கும் நிறைந்தவரே !  தங்களது தொண்டருக்குத் தொண்டர்களான எங்களுக்கு அனுமதி தாருங்கள். ரிஷி நாரதரின் அருளால் தங்கள் தரிசனம், எங்களுக்குக் கிட்டியது.  9  ( 37 )

Meaning :

(Pray) allow us, servants of Your servant ( Lord Shiva ), to depart, O  perfect One !  Your (auspicious) sight has been possible for us (only) through the grace of the divine sage (Narada).  9 ( 37 )

Tuesday, 15 September 2020

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 8

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 8

|| श्री कृष्ण स्तुतिः ||

|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||

|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||

नमः परमकल्याण नमः परममङ्गल ।
वासुदेवाय शान्ताय यदूनां पतये नमः ॥ ८॥

நம꞉ பரமகல்யாண நம꞉ பரமமங்க³ல .
வாஸுதே³வாய ஶாந்தாய யதூ³னாம்ʼ பதயே நம꞉ .. 8..

namaḥ paramakalyāṇa namaḥ paramamaṅgala .
vāsudevāya śāntāya yadūnāṃ pataye namaḥ .. 8..

பொருள் :

மேலான மங்களப் பொருளே !  (தங்களுக்கு) வணக்கம். மங்களப் பொருளுள் மங்களமாக இருப்பவரே !  (தங்களுக்கு) வணக்கம். யாதவர்களின் தலைவரே ! மனவமைதி நல்குபவரே ! வசுதேவரின் மைந்தனே ! (தங்களுக்கு) வணக்கம்.  8. ( 36 )

Meaning :

Hail, O most blessed one ! Hail, O most propitious Lord ! Hail to the gentle Son of Vasudeva, the Lord of Yadus.  8 ( 36 )

Monday, 14 September 2020

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 7

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 7

|| श्री कृष्ण स्तुतिः ||

|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||

|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||

स भवान् सर्वलोकस्य भवाय विभवाय च ।
अवतीर्णोऽम्शभागेन साम्प्रतं पतिराशिषाम् ॥ ७॥

ஸ ப⁴வான் ஸர்வலோகஸ்ய ப⁴வாய விப⁴வாய ச .
அவதீர்ணோ(அ)ம்ஶபா⁴கே³ன ஸாம்ப்ரதம்ʼ பதிராஶிஷாம் .. 7..

sa bhavān sarvalokasya bhavāya vibhavāya ca .
avatīrṇo'mśabhāgena sāmprataṃ patirāśiṣām .. 7..

பொருள் :

அகில உலகின் நன்மைக்கும் மேன்மைக்குமாக, இப்பொழுது தாங்கள் எல்லா பேராற்றல்களும் நிரம்பியவராக, எல்லோர் விருப்பங்களையும் நிறைவுறச் செய்யவே, ஓர் அம்சம் கொண்டு அவதரித்துள்ளீர்கள்.   7 ( 35 )

Meaning :

As such You, the Dispenser of (all ) blessings, have come down ( to mortal plane ) this time in Your integral form ( the Source of all part manifestations ) for ( ensuring ) the prosperity and liberation ( lit., freedom from rebirth ) of the entire creation.  7  (35 )

Saturday, 12 September 2020

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 6

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 6

|| श्री कृष्ण स्तुतिः ||

|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||

|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||

यस्यावतारा ज्ञायन्ते शरीरेष्वशरीरिणः ।
तैस्तैरतुल्यातिशयैर्वीर्यैर्देहिष्वसङ्गतैः ॥ ६॥

யஸ்யாவதாரா ஜ்ஞாயந்தே ஶரீரேஷ்வஶரீரிண꞉ .
தைஸ்தைரதுல்யாதிஶயைர்வீர்யைர்தே³ஹிஷ்வஸங்க³தை꞉ .. 6..

yasyāvatārā jñāyante śarīreṣvaśarīriṇaḥ .
taistairatulyātiśayairvīryairdehiṣvasaṅgataiḥ .. 6..

பொருள் :

தங்களது இந்த உடல் இயற்கையானதல்ல ( தெய்வீகமானது ). ஆனால், உடல் உள்ளவர்களால் செய்ய இயலாத அதிசயமிக்க செயலாற்றலையும், உடல் பெற்றவரிடம் பொருந்தாத பேராற்றலையும் கொண்டு தங்களது அவதாரங்கள் பற்றி அறியமுடிகிறது.  6 ( 34 )

Meaning :

Disembodied as You are, Your descents in corporeal frames are known through the various feats of valour, unsurpassed, nay, unequalled ( by those of anyone ) and not found in those identified with a body.  6 ( 34 )

Friday, 11 September 2020

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 5

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 5

|| श्री कृष्ण स्तुतिः ||

|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||

|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||

तस्मै तुभ्यं भगवते वासुदेवाय वेधसे ।
आत्मद्योतगुणैश्छन्नमहिम्ने ब्रह्मणे नमः ॥ ५॥

தஸ்மை துப்⁴யம்ʼ ப⁴க³வதே வாஸுதே³வாய வேத⁴ஸே .
ஆத்மத்³யோதகு³ணைஶ்ச²ன்னமஹிம்னே ப்³ரஹ்மணே நம꞉ .. 5..

tasmai tubhyaṃ bhagavate vāsudevāya vedhase .
ātmadyotaguṇaiśchannamahimne brahmaṇe namaḥ .. 5..

பொருள் :

அனைத்து சிறப்புகளையும் கொண்டவரும், உலகைப் படைத்தவரும், தன்னால் பிரகாசிக்கின்ற குணங்களால் மறைக்கப் பெற்றவரும், எங்கும் நிறைந்தவரும், வசுதேவரின் மகனுமான ஸ்ரீகிருஷ்ணன் என்னும் பரம்பொருளை வணங்குகிறோம்.  5 ( 33 )

Meaning :

Hail to you as such, Lord Vaasudeva (the Detiy preceding over intellect), the Creator (etc., of the universe), the Infinite,  whose glory stands veiled by the (three) Gunas, that owe there light to You (alone).  5 ( 33 )

Wednesday, 9 September 2020

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 4

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 4

|| श्री कृष्ण स्तुतिः ||

|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||

|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||

गृह्यमाणैस्त्वमग्राह्यो विकारैः प्राकृतैर्गुणैः ।
को न्विहार्हति विज्ञातुं प्राक्सिद्धं गुणसंवृतः ॥ ४॥

க்³ருʼஹ்யமாணைஸ்த்வமக்³ராஹ்யோ விகாரை꞉ ப்ராக்ருʼதைர்கு³ணை꞉ .
கோ ந்விஹார்ஹதி விஜ்ஞாதும்ʼ ப்ராக்ஸித்³த⁴ம்ʼ கு³ணஸம்ʼவ்ருʼத꞉ .. 4..

gṛhyamāṇaistvamagrāhyo vikāraiḥ prākṛtairguṇaiḥ .
ko nvihārhati vijñātuṃ prāksiddhaṃஆ guṇasaṃvṛtaḥ .. 4..

பொருள் :

செயலறிவால் அறியத்தக்க பிரகிருதியின் குணங்களுக்கும், விகாரங்களான மாறுபட்டிற்கும் அப்பாற்பட்ட தங்களை, ஸ்தூல-சூட்சும வடிவான குணங்களால் மறைக்கப்பட்டவன் எவ்வாறு அறிய முடியும்?  ஏனெனில்,  இவை தோன்றுவதற்கு முன்பிருந்தே தாங்கள் இருக்கிறீர்களே !  4 ( 32 )

Meaning :

You ( the perceiving subject ) cannot be grasped through the modes of Prakriti, much less through their modifications (in the shape of the intellect, the ego, the Senses etc. ), which are (all) open to perception. And shut up in a psycho-physical organism (a product of the three Gunas ), who ( what JIva) in this world is competent to perceive You, who already existed (even before its birth, as a self-evident truth ).  4 ( 32 )

Monday, 7 September 2020

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 3

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 3

|| श्री कृष्ण स्तुतिः ||

|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||

|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||

त्वं महान् प्रकृतिः सूक्ष्मा रजःसत्त्वतमोमयी ।
त्वमेव पुरुषोऽध्यक्षः सर्वक्षेत्रविकारवित् ॥ ३॥

த்வம்ʼ மஹான் ப்ரக்ருʼதி꞉ ஸூக்ஷ்மா ரஜ꞉ஸத்த்வதமோமயீ .
த்வமேவ புருஷோ(அ)த்⁴யக்ஷ꞉ ஸர்வக்ஷேத்ரவிகாரவித் .. 3..

tvaṃ mahān prakṛtiḥ sūkṣmā rajaḥsattvatamomayī .
tvameva puruṣo'dhyakṣaḥ sarvakṣetravikāravit .. 3..

பொருள் :

தாங்கள்தான் உலகின் ஆதியான மஹத்-தத்துவமும், சத்துவம்-ரஜஸ்-தமஸ் என்ற முக்குணங்களின் சூட்சும (காணத்தோன்றாத) நிலையான பிரகிருதியும், க்ஷேத்திரமான உடலிலிருந்து கொண்டு, எல்லா ஸ்தூல-சூட்சும (வெளியில் காணத் தோன்றும், தோன்றாத) தத்துவங்களின் மாறுபாடுகளையும் உணர்ந்து, செயலைச் சாட்சியாகக்  கண்காணிக்கின்ற ஜீவபுருஷன்.  3 ( 31 )

Meaning :

You are the subtle (unmanifest ) Prakriti ( the divine Energy ), consisting of Sattva, Rajas, and Tamas, and You are the Mahat.tattva (the evolute of Prakriti ). You alone are the Puruşa ( Spirit, the propeller of Prakriti ), the Witness (of all ), the Knower of the diseases and morbidities of all psycho-physical organisms.  3 ( 31 )

Sunday, 6 September 2020

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 2

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 2

|| श्री कृष्ण स्तुतिः ||

|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||

|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||

त्वमेकः सर्वभूतानां देहास्वात्मेन्द्रयेश्वरः ।
त्वमेव कालो भगवान् विष्णुरव्यय ईश्वरः ॥ २॥

த்வமேக꞉ ஸர்வபூ⁴தானாம்ʼ தே³ஹாஸ்வாத்மேந்த்³ரயேஶ்வர꞉ .
த்வமேவ காலோ ப⁴க³வான் விஷ்ணுரவ்யய ஈஶ்வர꞉ .. 2..

tvamekaḥ sarvabhūtānāṃ dehāsvātmendrayeśvaraḥ .
tvameva kālo bhagavān viṣṇuravyaya īśvaraḥ .. 2..

பொருள் :

தாங்கள் ஒருவரே, உலகின் அனைத்து ஜீவனது உடலுக்கும் உயிருக்கும் உள்ளத்திற்கும் புலன்களுக்கும் தலைவன்;  காலமாக நின்று இயக்குபவர்;  பகவானான விஷ்ணுவாக எங்கும் பரவியவர்; அழிவற்ற ஈச்வரன்.  2 (30)

Meaning :

You are the one (undisputed ) controller of the body, the vital aire, the ego and the Indriyas of all created beings. You alone are the Time-Spirit and the imperishable Lord, the almighty Vishnu.  2 ( 30 )

Saturday, 5 September 2020

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 1

Sri Krishna Stuti by Guhyaka - Sloka 1

|| श्री कृष्ण स्तुतिः ||

|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||

|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||

कृष्ण कृष्ण महायोगिंस्त्वमाद्यः पुरुषः परः ।
व्यक्ताव्यक्तमिदं विश्वं रूपं ते ब्राह्मणा विदुः ॥ १॥

க்ருʼஷ்ண க்ருʼஷ்ண மஹாயோகி³ம்ʼஸ்த்வமாத்³ய꞉ புருஷ꞉ பர꞉ .
வ்யக்தாவ்யக்தமித³ம்ʼ விஶ்வம்ʼ ரூபம்ʼ தே ப்³ராஹ்மணா விது³꞉ .. 1..

kṛṣṇa kṛṣṇa mahāyogiṃstvamādyaḥ puruṣaḥ paraḥ .
vyaktāvyaktamidaṃ viśvaṃ rūpaṃ te brāhmaṇā viduḥ .. 1..

பொருள் :

கிருஷ்ணா ! கிருஷ்ணா ! மாபெரும் யோகியே ! தாங்களே பிரகிருதியைக் கடந்த புருஷோத்தமர். இவ்வுலகனைத்தும் தங்களின் வெளிப்பட்டதும் வெளிப்படாததுமான (ஸ்தூல சூட்சுமமான) வடிவம் என்று பிரும்மநிலை உணர்ந்தவர் கூறுவர்.  1 (29)

Meaning :

O Krishna, the Enchanter of all, O great Yogi( the Master of Yoga ), You are the primordial supreme Person. The Brahmins ( who have realized the true import of the Vedas ) know this universe, manifest as well as unmanifest, as a form of Yours. 1 ( 29 )

Thursday, 3 September 2020

Sri Krishna Stuti by Guhyakau - Introduction

Sri Krishna Stuti by Guhyakau - Introduction

இப்போது நாம் பார்க்கவிருக்கின்ற ஸ்துதி ஶ்ரீ கிருஷ்ணரைக் குறித்து குஹ்யகர்களால் இயற்றப்பட்டது.

நிதி ரக்ஷகர்களுக்கு குஹ்யகர்கள் என்று பெயர்.

கு³ஹ்யகௌ - இரு கு³ஹ்யகர்கள்.

குஹ்யகர்கள் என்பவர் யக்ஷர்கள் எனும் வர்க்கத்தினரைப் போல, குபேரனுக்குப் பணிசெய்யும் வர்க்கத்தினர் ஆவர். குபேரனை 'கு³ஹ்யகாதி⁴பதி' என்பவர்.

கண்ணனை, யசோதை உரலில் கட்டிவைத்த லீலை அனைவரும் அறிந்ததே. அந்நிகழ்வின் போது, கண்ணன் உரலுடன் வந்து இரு மருதமரங்களுக்கு நடுவில் புகுந்து அம்மரங்களை வீழ்த்தினார் என்பதும் அதிலிருந்து சாபவிமோசனம் பெற்ற இரு சித்தபுருஷர்கள் தோன்றினர் என்பதும் சரித்திரம். நளகூபரன் மற்றும் மணிக்ரீவன் என்னும் குபேர குமாரர்களே அவ்விருவரும். அவர்கள் கண்ணனைக் கண்டதும் அஞ்சலி செய்து செய்த ஸ்துதியே இந்த ஸ்துதி. இது ஶ்ரீமத் பாகவத புராணத்தில், தசம ஸ்கந்தத்தில், பத்தாம் அத்யாயத்தில் ச்லோகம் எண் 29 - 38 ஆக அமைந்துள்ளது.

நளகூபர - மணிக்ரீவரின் கதை சுருக்கமாக, நாராயணீயத்தில் பின்வருமாறு கூறப்படுகிறது. தசகம் - 48.

2. குபேரனுடைய மகன்களான நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் சிவனைத் தொழுது, மிகுந்த ஐஸ்வர்ய செருக்கால், உம்மை மறந்து, உலக ஆசைகளில் ஈடுபட்டிருந்தனர். 

3. கங்கையில் மது அருந்திவிட்டு அனேகப் பெண்களுடன் வஸ்திரம் இல்லாமல் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்தனர். இதைத் தங்கள் பக்தரான நாரதர் பார்த்தார்.

4. நாரதரைக் கண்டவுடன் அந்தப் பெண்கள் தம்முடைய ஆடைகளை எடுத்துக் கொண்டனர். அப்பொழுது கூட, நளகூபரன், மணிக்ரீவன் இருவரும் மயங்கி விளையாடிக் கொண்டிருந்தனர். உம்மிடத்தில் அவர்களுக்கு பக்தி உண்டாக வேண்டுமென்பதற்காக, நாரதர் அவர்களை சபித்தார். மன அமைதியில்லாமல் சுகம் எப்படி உண்டாகும்?

5. “நீங்கள் இருவரும் நெடுங்காலம் மராமரங்களாக இருந்து, பின்னர் ஸ்ரீஹரியைத் தரிசனம் செய்தவுடன் பழைய நிலையை அடைவீர்களாக” என்று சபித்தார். அவ்விருவரும், தங்களைத் தரிசிக்க ஆவலுடன் மரங்களாகக் காத்துக் கொண்டிருந்தனர். 

6. தாங்கள் மெதுவாக அந்த மருதமரங்களின் அருகே சென்றீர்கள். மரங்களின் குறுக்கே உரலை இழுத்துக் கொண்டு சென்றீர்கள். உடனே அவ்விரு மரங்களும் முறிந்து விழுந்தன. 

7. மரங்கள் விழுந்ததும், அதிலிருந்து இரண்டு யக்ஷர்கள் தோன்றினார்கள். தங்களைத் துதித்து நமஸ்கரித்தனர்.

8. இவ்வுலகில், மற்ற தெய்வங்களைப் பூஜிக்கிறவனும், இறுதியில் உம்மையே அடைகிறான். நாரதரின் ஆசியால் தங்களைத் தொழுது, தங்களிடம் பக்தியையே வரமாகப் பெற்றுச் சென்றனர். 

|| श्री कृष्ण स्तुतिः ||

कृष्ण कृष्ण महायोगिंस्त्वमाद्यः पुरुषः परः ।
व्यक्ताव्यक्तमिदं विश्वं रूपं ते ब्राह्मणा विदुः ॥ १॥

त्वमेकः सर्वभूतानां देहास्वात्मेन्द्रयेश्वरः ।
त्वमेव कालो भगवान् विष्णुरव्यय ईश्वरः ॥ २॥

त्वं महान् प्रकृतिः सूक्ष्मा रजःसत्त्वतमोमयी ।
त्वमेव पुरुषोऽध्यक्षः सर्वक्षेत्रविकारवित् ॥ ३॥

गृह्यमाणैस्त्वमग्राह्यो विकारैः प्राकृतैर्गुणैः ।
को न्विहार्हति विज्ञातुं प्राक्सिद्धं गुणसंवृतः ॥ ४॥

तस्मै तुभ्यं भगवते वासुदेवाय वेधसे ।
आत्मद्योतगुणैश्छन्नमहिम्ने ब्रह्मणे नमः ॥ ५॥

यस्यावतारा ज्ञायन्ते शरीरेष्वशरीरिणः ।
तैस्तैरतुल्यातिशयैर्वीर्यैर्देहिष्वसङ्गतैः ॥ ६॥

स भवान् सर्वलोकस्य भवाय विभवाय च ।
अवतीर्णोऽम्शभागेन साम्प्रतं पतिराशिषाम् ॥ ७॥

नमः परमकल्याण नमः परममङ्गल ।
वासुदेवाय शान्ताय यदूनां पतये नमः ॥ ८॥

अनुजानीहि नौ भूमंस्तवानुचरकिङ्करौ ।
दर्शनं नौ भगवत ऋषेरासीदनुग्रहात् ॥ ९॥

वाणी गुणानुकथने श्रवणौ कथायां
हस्तौ च कर्मसु मनस्तव पादयोर्नः ।
स्मृत्यां शिरस्तव निवासजगत्प्रणामे
दृष्टिः सतां दर्शनेऽस्तु भवत्तनूनाम् ॥ १०॥

इति श्रीमद्भागवतान्तर्गतं गुह्यककृता श्रीकृष्णस्तुतिः समाप्ता ।

|| ஶ்ரீ க்ருʼஷ்ண ஸ்துதி꞉: ||

க்ருʼஷ்ண க்ருʼஷ்ண மஹாயோகி³ம்ʼஸ்த்வமாத்³ய꞉ புருஷ꞉ பர꞉ .
வ்யக்தாவ்யக்தமித³ம்ʼ விஶ்வம்ʼ ரூபம்ʼ தே ப்³ராஹ்மணா விது³꞉ .. 1..

த்வமேக꞉ ஸர்வபூ⁴தானாம்ʼ தே³ஹாஸ்வாத்மேந்த்³ரயேஶ்வர꞉ .
த்வமேவ காலோ ப⁴க³வான் விஷ்ணுரவ்யய ஈஶ்வர꞉ .. 2..

த்வம்ʼ மஹான் ப்ரக்ருʼதி꞉ ஸூக்ஷ்மா ரஜ꞉ஸத்த்வதமோமயீ .
த்வமேவ புருஷோ(அ)த்⁴யக்ஷ꞉ ஸர்வக்ஷேத்ரவிகாரவித் .. 3..

க்³ருʼஹ்யமாணைஸ்த்வமக்³ராஹ்யோ விகாரை꞉ ப்ராக்ருʼதைர்கு³ணை꞉ .
கோ ந்விஹார்ஹதி விஜ்ஞாதும்ʼ ப்ராக்ஸித்³த⁴ம்ʼ கு³ணஸம்ʼவ்ருʼத꞉ .. 4..

தஸ்மை துப்⁴யம்ʼ ப⁴க³வதே வாஸுதே³வாய வேத⁴ஸே .
ஆத்மத்³யோதகு³ணைஶ்ச²ன்னமஹிம்னே ப்³ரஹ்மணே நம꞉ .. 5..

யஸ்யாவதாரா ஜ்ஞாயந்தே ஶரீரேஷ்வஶரீரிண꞉ .
தைஸ்தைரதுல்யாதிஶயைர்வீர்யைர்தே³ஹிஷ்வஸங்க³தை꞉ .. 6..

ஸ ப⁴வான் ஸர்வலோகஸ்ய ப⁴வாய விப⁴வாய ச .
அவதீர்ணோ(அ)ம்ஶபா⁴கே³ன ஸாம்ப்ரதம்ʼ பதிராஶிஷாம் .. 7..

நம꞉ பரமகல்யாண நம꞉ பரமமங்க³ல .
வாஸுதே³வாய ஶாந்தாய யதூ³னாம்ʼ பதயே நம꞉ .. 8..

அனுஜானீஹி நௌ பூ⁴மம்ʼஸ்தவானுசரகிங்கரௌ .
த³ர்ஶனம்ʼ நௌ ப⁴க³வத ருʼஷேராஸீத³னுக்³ரஹாத் .. 9..

வாணீ கு³ணானுகத²னே ஶ்ரவணௌ கதா²யாம்ʼ
ஹஸ்தௌ ச கர்மஸு மனஸ்தவ பாத³யோர்ன꞉ .
ஸ்ம்ருʼத்யாம்ʼ ஶிரஸ்தவ நிவாஸஜக³த்ப்ரணாமே
த்³ருʼஷ்டி꞉ ஸதாம்ʼ த³ர்ஶனே(அ)ஸ்து ப⁴வத்தனூனாம் .. 10..

இதி ஶ்ரீமத்³பா⁴க³வதாந்தர்க³தம்ʼ கு³ஹ்யகக்ருʼதா ஶ்ரீக்ருʼஷ்ணஸ்துதி꞉ ஸமாப்தா .

|| ŚRĪ KṚṢṆA STUTIḤ ||

kṛṣṇa kṛṣṇa mahāyogiṃstvamādyaḥ puruṣaḥ paraḥ .
vyaktāvyaktamidaṃ viśvaṃ rūpaṃ te brāhmaṇā viduḥ .. 1..

tvamekaḥ sarvabhūtānāṃ dehāsvātmendrayeśvaraḥ .
tvameva kālo bhagavān viṣṇuravyaya īśvaraḥ .. 2..

tvaṃ mahān prakṛtiḥ sūkṣmā rajaḥsattvatamomayī .
tvameva puruṣo'dhyakṣaḥ sarvakṣetravikāravit .. 3..

gṛhyamāṇaistvamagrāhyo vikāraiḥ prākṛtairguṇaiḥ .
ko nvihārhati vijñātuṃ prāksiddhaṃ guṇasaṃvṛtaḥ .. 4..

tasmai tubhyaṃ bhagavate vāsudevāya vedhase .
ātmadyotaguṇaiśchannamahimne brahmaṇe namaḥ .. 5..

yasyāvatārā jñāyante śarīreṣvaśarīriṇaḥ .
taistairatulyātiśayairvīryairdehiṣvasaṅgataiḥ .. 6..

sa bhavān sarvalokasya bhavāya vibhavāya ca .
avatīrṇo'mśabhāgena sāmprataṃ patirāśiṣām .. 7..

namaḥ paramakalyāṇa namaḥ paramamaṅgala .
vāsudevāya śāntāya yadūnāṃ pataye namaḥ .. 8..

anujānīhi nau bhūmaṃstavānucarakiṅkarau .
darśanaṃ nau bhagavata ṛṣerāsīdanugrahāt .. 9..

vāṇī guṇānukathane śravaṇau kathāyāṃ
hastau ca karmasu manastava pādayornaḥ .
smṛtyāṃ śirastava nivāsajagatpraṇāme
dṛṣṭiḥ satāṃ darśane'stu bhavattanūnām .. 10..

iti śrīmadbhāgavatāntargataṃ guhyakakṛtā śrīkṛṣṇastutiḥ samāptā .

Wednesday, 26 August 2020

மனிதனும் மிருகமும் :

மனிதனும் மிருகமும் :

( தெய்வத்தின் குரல் - முதல் பகுதி )

மிருகங்கள் குறுக்குவாட்டில் (horizontal) வளர்கின்றன. இதனாலேயே அவற்றுக்குத் ‘திர்யக்’ என்று பெயர். இதற்கு மாறாக உயர்ந்து மேல்நோக்கி (vertical) வளருகின்ற மனிதன் மற்றப் பிராணிகளைக் காட்டிலும் மேலான நோக்கத்தைப் பெறவேண்டும். இப்படிச் செய்தால் இவன்தான் சகல ஜீவ இனங்களையும்விட அதிகமான சுகத்தை அநுபவிக்கலாம். ஆனால் நடைமுறையிலோ அவற்றைவிட அதிகமான துக்கத்தைத்தான் நாம் அநுபவிக்கிறோம். மிருகங்களுக்கு நம்மைப் போல் இத்தனை காமம், இத்தனைக் கவலை, இத்தனை துக்கம், இத்தனை அவமானம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றுக்குப் பாபமே இல்லை. பாவங்களைச் செய்து துக்கங்களை நாம்தான் அநுபவிக்கிறோம்.

ஒரு வழியில் பார்த்தால் மிருகங்களுக்குக் கொடுத்திருக்கும் சௌகரியங்களை ஸ்வாமி நமக்குக் கொடுக்கவில்லை என்று தோன்றும். நம்மை யாராவது அடித்தால் திருப்பி அடிக்க ஓர் ஆயுதமும் நமக்கு இல்லை. மாட்டை அடித்தால் அதற்குக் கொம்பு கொடுத்திருக்கிறார். அதனால் திருப்பி முட்ட வருகிறது. புலிக்கு நகம் கொடுத்திருக்கிறார். நமக்குக் கொம்பு இல்லை. நகம் இல்லை. குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஆட்டுக்கு உடம்பில் போர்வை வைத்திருக்கிறார். வேறு மிருகங்களுக்கும் போர்வை வைத்திருக்கிறார். மனிதன் ஒருவனைத்தான் வழித்து விட்டு இருக்கிறார். யாராவது அடிக்க வந்தால் எதிர்க்க முடியவில்லை. குதிரைக்குக் கொம்பு இல்லா விட்டாலும் ஓடுவதற்கு வேகம் கொடுத்திருக்கிறார். அதுவும் நமக்கில்லை.

இருந்தாலும் ஸ்வாமி மனிதனுக்குத்தான் புத்தியை அதிகமாக வைத்திருக்கிறார்.

குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், மற்றப் பிராணிகளின் போர்வையை இவன் பறித்துக் கொண்டுவிடுகிறான்; கம்பளியாக நெய்து கொள்கிறான். வேகமாகப் போக வேண்டுமா? வண்டியிலே குதிரையைக் கட்டி, அதன் வேகத்தை உபயோகப் படுத்திக் கொள்கிற சாமர்த்தியத்தை இவனிடத்தில் ஸ்வாமி வைத்திருக்கிறார். தன் சரீரத்திலேயே தற்காப்பு இல்லாவிட்டாலும், வெளியிலிருந்து தினுசு தினுசான ஆயுதங்களைப் படைத்துக் கொள்கிறான். இவ்வாறாக புத்தி பலம் ஒன்றை மட்டும் கொண்டு, மற்ற ஜீவராசிகள், ஜடப்பிரபஞ்சம் எல்லாவற்றையும் மனிதனே ஆளுகிறான்.

மிருகம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிராந்தியத்தில்தான் இருக்கும். குளிர்ப் பிரதேசத்துக் கரடி நம் ஊரில் வாழாது. இங்குள்ள யானை அங்கே வாழாது. ஆனால் மனிதன் உலகம் முழுவதும் வாழ்கிறான். அங்கங்கே அவன் தன் புத்தியை உபயோகப்படுத்தித் தனக்குச் சாதகமாகச் சூழ்நிலையைச் செய்து கொள்வான் என்று இப்படி விட்டிருக்கிறார்.

இந்த உயர்ந்த புத்தியை வைத்துக் கொண்டு மனிதன் கஷ்டப்படுகிறான்; துக்கப்படுகிறான்; பிறந்து விட்டதனாலே இவ்வளவு கஷ்டம்; இனி பிறக்காமலிருக்க வேண்டுமானால் என்ன பண்ணுவது? பிறப்புக்குக் காரணம் என்ன? நாம் ஏதோ தப்புப் பண்ணியிருக்கிறோம். அதற்குத் தண்டனையாக இத்தனை கசையடி வாங்க வேண்டும் என்று விதித்திருப்பதால் இந்த உடம்பை எடுத்து அவற்றை வாங்குகிறோம். பத்து அடி ஆன பிறகு இந்த உடம்பு போய்விட்டால், இன்னோர் உடம்பு வருகிறது. பாக்கி அடியை அந்த உடம்பு வாங்குகிறது. காமத்தினால், பாபத்தைச் செய்வதனாலே ஜனனம் வருகிறது. காரியம் எதுவும் பண்ணாமல் இருந்துவிட்டால் ஜனனம் இல்லை. கோபத்தினாலேயே பல பாபங்களைச் செய்கிறோம். கோபத்துக்குக் காரணம் ஆசை, காமம். முதலில் காமத்தை, ஆசையை ஒழிக்க வேண்டும். பற்றை நிறைய வளர்த்துக் கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்றால் முடியாது. பற்றை ஒழித்து விட்டால் பாபம் செய்யாமல் இருக்கலாம்.

ஆசைக்குக் காரணம் என்ன? நம்மைத் தவிர இன்னொன்று இருப்பதாக எண்ணுவதால் அதனிடம் ஆசை வருகிறது.

உண்மையில் சாந்தமாகிய ஒரே சிவமே எல்லாமாக இருக்கிறது.

ஒரு மாடு கண்ணாடியில் தன்னைப் பார்த்துவிட்டு, இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து அதை முட்டப்போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான். இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைக்கிறானா? இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரிந்து சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான். இரண்டாவது என்று எண்ணினால் ஆசை வரும். ஆசை வருவதனால் கோபம் வருகிறது. கோபம் வருவதனால் பாபங்களைச் செய்கிறோம். அதனால் ஜன்மம் உண்டாகிறது. எல்லாம் ஒன்று என்ற ஞானம் நமக்கு வந்துவிட்டால், வேறு பொருள் இல்லாததனாலே ஆசை இல்லை; கோபம் இல்லை; பாபம் இல்லை; காரியம் இல்லை; ஜனனம் இல்லை; துன்பமும் இல்லை.

இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது? நம்மைப் பெற்ற அம்மா உடம்புக்குப் பால்கொடுப்பாள். அறிவுக்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள்தான். ஞான ஸ்வரூபமே அவள்தான். அவளுடைய சரணாரவிந்தங்களைப் பற்றிக் கொண்டு அவளுடைய ஸ்வரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும்; மனிதன் அப்போது தெய்வமாவான்.

முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும். அப்புறம் அவனைத் தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்தக் குறிக்கோளுடன்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன. சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றுக்குள் எத்தனை பேதமிருந்தாலும், இப்போதிருக்கிற மாதிரி மனுஷ்யனை ஒரே காமக் குரோதாதிகளுடன் இருக்க விடக்கூடாது; இவனை நல்லவனாக ஆக்கி அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனாகப் பண்ண வேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன.