Monday, 31 May 2021

Sri Somasundara Stuti - Sloka 2

Sri Somasundara Stuti - Sloka 2

॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥

॥ ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ॥

|| ŚRĪ SOMASUNDARA STUTIḤ ||


ज्ञातृज्ञानज्ञेयरूपं विश्वं व्याप्य व्यवस्थितम् । 
स्वयं सर्वैरदृश्यो यस्तं वन्दे सोमसुन्दरम् ॥ २ ॥

ஜ்ஞாத்ருʼஜ்ஞானஜ்ஞேயரூபம்ʼ விஶ்வம்ʼ வ்யாப்ய வ்யவஸ்தி²தம் । 
ஸ்வயம்ʼ ஸர்வைரத்³ருʼஶ்யோ யஸ்தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 2 ॥ 

jñātṛjñānajñeyarūpaṃ viśvaṃ vyāpya vyavasthitam । 
svayaṃ sarvairadṛśyo yastaṃ vande somasundaram ॥ 2 ॥ 


ज्ञातृ-ज्ञान-ज्ञेयरूपं - ஜ்ஞாத்ருʼ-ஜ்ஞான-ஜ்ஞேயரூபம்ʼ - அறிபவராகவும், அறிவாகவும், அறியப்படுபவராகவும் உள்ளவரை,

विश्वं व्याप्य व्यवस्थितं - விஶ்வம்ʼ வ்யாப்ய வ்யவஸ்தி²தம்ʼ - உலகெங்கும் வியாபித்து விளங்குபவரை,

स्वयं सर्वैः अदृश्यः - ஸ்வயம்ʼ ஸர்வை꞉ அத்³ருʼஶ்ய꞉ - எல்லோரும் தன்னை அறிந்திடாதபடி அமைந்தவர்,

यः - ய꞉ - எவரோ

तं सोमसुन्दरं - தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ - அந்த ஸோமஸுந்தரரை

वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.


பொருள் :

அறிபவராகவும், அறிவாகவும், அறியப்படுபவராகவும் உள்ளவரும், உலகெங்கும் வியாபித்து விளங்குபவரும், எல்லோரும் தன்னை அறிந்திடாதபடி அமைந்தவருமாவனர் எவரோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன். 2


Meaning :

I adore that Somasundarar, who is the Knower, the Knowledge, the Known, the One who pervades throughout the world, the One who makes everyone unaware of Himself. 2

Sunday, 30 May 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 10

Vinaayaka Leelaa Stuti - sloka 10

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


निरन्तरं संस्कृतदानपट्टे लग्नां तु गुञ्जद्भ्रमरावलीं वै ।
तं श्रोत्रतालैरपसारयन्तं भजे गजास्यं निजहृत्सरोजे ॥ १०॥

நிரந்தரம்ʼ ஸம்ʼஸ்க்ருʼததா³னபட்டே லக்³னாம்ʼ து கு³ஞ்ஜத்³ப்⁴ரமராவலீம்ʼ வை |
தம்ʼ ஶ்ரோத்ரதாலைரபஸாரயந்தம்ʼ ப⁴ஜே க³ஜாஸ்யம்ʼ நிஜஹ்ருʼத்ஸரோஜே || 10||

nirantaraṃ saṃskṛtadānapaṭṭe lagnāṃ tu guñjadbhramarāvalīṃ vai ।
taṃ śrotratālairapasārayantaṃ bhaje gajāsyaṃ nijahṛtsaroje ॥ 10॥


संस्कृत-दान-पट्टे लग्नां तु - ஸம்ʼஸ்க்ருʼத-தா³ன-பட்டே லக்³னாம்ʼ து - தூயதாக்கப்பட்ட கன்னத்தில் வழியும் மதநீர்க்கசிவில் மயங்கி,

गुञ्जद्-भ्रमर-आवलीं वै - கு³ஞ்ஜத்³-ப்⁴ரமர-ஆவலீம்ʼ வை - மொய்க்கின்ற வண்டுக் கூட்டங்களை,

श्रोत्र-तालैः - ஶ்ரோத்ர-தாலை: - ( தன் ) காதுகளை ஆட்டுகின்ற விதத்தில்,

निरन्तरं - நிரந்தரம்ʼ - ஓய்வின்றி,

अपसारयन्तं - அபஸாரயந்தம்ʼ - விரட்டுகின்றவரான,

तं गजास्यं - தம்ʼ க³ஜாஸ்யம்ʼ - அந்த ̅யானை முகத்தவரை ( கணேசரை ) ,

निजहृत्-सरोजे - நிஜஹ்ருʼத்-ஸரோஜே - பக்தியில் மலர்ந்த ( என் ) இதயத்தாமரையில் எண்ணி̅,

भजे - ப⁴ஜே - வழிபடுகிறேன்.


பொருள் :

தூயதாக்கப்பட்ட கன்னத்தில் வழியும் மதநீர்க்கசிவில் மயங்கி மொய்க்கின்ற வண்டுக் கூட்டங்களை, ( தன் ) காதுகளை ஆட்டுகின்ற விதத்தில் ஓய்வின்றி விரட்டுகின்றவரான அந்த ̅யானை முகத்தவரை ( கணேசரை ) , பக்தியில் மலர்ந்த ( என் ) இதயத்தாமரையில் எண்ணி̅ வழிபடுகிறேன். 10


# யானை பெரிய காதை விசிறி மாதிரி ஆட்டிக் கொள்வது ரொம்ப அழகு. பிராணி வர்க்கத்திலேயே யானை ஒன்றால்தான் இப்படிக் காதால் விசிறி போட்டுக்கொள்ள முடிவது. ஏதாவது பூச்சி பொட்டை விரட்டுவதற்காக ஒரு தரம், இரண்டு தரம் வேண்டுமானால் மாடுகூடக் காதை ஆட்ட முடியுமே தவிர, யானை மாதிரி ஸதா பண்ண முடியாது. மாடு ஏதோ கொஞ்சம் ஆட்டுவதற்குக்கூட ‘ஸ்ட்ரெய்ன்’ பண்ணிக் கொள்ள வேண்டியிருக்கிறது. யானைதான் அநாயாஸமாக, ரொம்ப இயற்கையாக எப்பப் பார்த்தாலும் காதை ஆட்டிக்கொண்டே இருப்பது. ‘கஜாஸ்பாலம்’ [கஜ ஆஸ்பாலம்], ‘கஜதாளம்’ என்றே அதற்குப் பேர் கொடுத்து வைத்திருக்கிறது. தாளம் என்றால் பனை, அதாவது விசிறி. பாட்டுக்கு விரலால் போடுவதும் தாளம். ஆனை விசிறி மாதிரியுள்ள காதை ஒரே சீராகத் தாளம் போடுகிற மாதிரி அசைத்துக்கொண்டே இருக்கிறது!
யானை காதை ஆட்டுவதில் அழகு இருப்பதோடு ஒரு ‘பர்பஸும் இருக்கிறது. மதம் பிடிக்கிற காலத்தில் அதன் முகத்தில் கன்னப் பிரதேசத்தில் மத ஜலம் ஸதாவும் துளித்துக் கொண்டிருக்கும். அதற்காக ஈ, எறும்புகள் ஏகமாக மொய்க்க வரும். அதுகளை விரட்டுவதற்கு வசதியாகவே பகவான் யானைக்கு விசிறிக் காதைக் கொடுத்து, அதனால் விசிறிக் விட்டுக் கொள்ளும் திறமையையும் கொடுத்திருக்கிறார்.
விக்நேச்வரரின் கன்னத்தில் மத ஜலம் வழிந்து கொண்டு இருப்பதை ஆசார்யாள் “கபோல தான வாரணம்” என்று [கணேச பஞ்சரத்தினத்தில்] சொல்லியிருக்கிறார். ‘கபோலம்’ என்றால் கன்னம். ‘தானம்’ என்றால் மத ஜலம்.
பிள்ளையார் பெருக விடும் மத ஜலம் என்பது ஆனந்த தாரைதான், க்ருபா தாரைதான்! பரம மதுரமாக இருக்கும் அம்ருதம் அது. அந்த மாதூர்ய மத நீரை ருசி பார்ப்பதற்காக வண்டுகள் ஏகமாக வரும். இதையும் ஆசார்யாள் ஒரு ஸ்தோத்திரத்தில்* சொல்லியிருக்கிறார்.
“கலத்-தான கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்”
மத ஜலத்தை மொய்க்கும் வண்டுகளை விரட்டுவதற்காகப் பிள்ளையார் விசிறிக் காதை ஆட்டிக் கொண்டே இருக்கிறார். கோபத்தில் விரட்டுவதல்ல. குழந்தை ஸ்வாமிக்கும் இது ஒரு விளையாட்டுதான். வண்டுகளும் அவரிடத்தில் இந்த விளையாட்டுக்காகத்தான் வருவது. அவருடைய தர்சனமே அவற்றுக்கு அம்ருத பானமாக இருக்குமாதலால் மத ஜலத்தைக் குடிக்க வேண்டுமென்பதில்லை. விளையாடணும், அவர் தங்களுக்கு விசிறி விடணும் என்றேதான் அதுகள் கன்னத்தண்டை வந்து மொய்க்கும். நாம் குழந்தை காதில் விளையாட்டாக ‘டுர்ர்’ என்று கத்தி அது மயிர்கூச்சலெடுப்பதைப் பார்த்து ஸந்தோஷப்படுகிறோமோல்லியோ? அந்த மாதிரிப் பிள்ளையாருடைய பெரிய காதிலே அதிர அடிக்கிற மாதிரி தங்களுக்கே உரிய ஜங்கார சப்தம் போட்டு வேடிக்கை பண்ணணும் என்றே வண்டுக் கூட்டம் வரும். அந்த வேடிக்கை விளையாட்டை புரிந்து கொண்டு அவரும் காதை ஆட்டி ஆட்டி அதுகளை விரட்டுகிற மாதிரிப் பண்ணுவார். அந்தக் காற்றிலே அதுகள் மாற்றி மாற்றி ஒடிப் போவதும், மறுபடி வந்து மொய்ப்பதுமாக அமர்க்களம் பண்ணும், மதஜலத்திலே விசிறிக் காதின் காற்றுப் பட்டு ஸ்வாமிக்கு ஜில்லென்று ஆனந்தமாயிருக்கும்.
ராகவ சைதன்யர் என்று ஒருத்தர் “மஹாகணபதி ஸ்தோத்ரம்” என்று செய்திருக்கிறார். அதில் மந்த்ர சாஸ்த்ர விஷயங்களெல்லாம் வருவதோடு அழகான கவிதா வர்ணனையும் அழகான வாக்கில் வருகிறது. விக்நேச்வரர் விசிறிக் காதை ஆட்டி வண்டுக் கூட்டத்தை விரட்டுவது போல விளையாடுவதை அதில் நீள நெடுக வார்த்தைகளைக் கோத்து அழகாகச் சொல்லியிருக்கிறது!

தாநாமோத-விநோத-லுப்த-மதுப ப்ரோத்ஸாரணாவிர்பவத்
கர்ணாந்தோலன-கேலனோ விஜயதே தேவோ கணக்ராமணீ

‘தான ஆமோதம்’ என்றால் மதஜலத்தின் ஸுகந்தம். ஸ்வாமி பெருக்கும் மத ஜலம் கமகமவென்று வாஸனை அடிக்கிறது. அந்த விநோதமான, அதாவது இன்பமூட்டுகிற வாஸனையை மோந்ததில் வண்டுகளுக்கு ஒரே பேராசை உண்டாகிறது. மத ஜலத்தை அப்படியே குடித்துவிட வேண்டுமென்று! ‘லுப்த மதுப’ என்றால் பேராசை கொண்ட வண்டுகள். அல்லது வாஸனையில் மயங்கிப்போன வண்டுகள் என்றும் அர்த்தம் பண்ணலாம். அந்த வண்டுகளை விரட்டணுமென்று ஸ்வாமி நினைக்கிறார். ‘ப்ரோத்ஸாரணம்’ என்றால் விரட்டுவது, விலக்குவது. இந்த நினைப்பிலிருந்து ஒரு விளையாட்டு ஆவிர்பாவமாகிறது, விளைகிறது. ‘கேலனம்’ என்றால் விளையாட்டு. என்ன விளையாட்டு! ‘கர்ணாந்தோலன கேலனம்’, ‘கர்ண ஆந்தோலனம்’ என்றால் காதை முன்னேயும் பின்னேயுமாக ஆட்டுவது.
ஊஞ்சலுக்கு ஆந்தோலம் என்று பெயர். தோலம் என்று மட்டும் சொன்னாலும் அதே அர்த்தம்தான். தோல உத்ஸவத்தைத்தான் ‘டோலோத்ஸவம்’ என்று சொல்லி ஊஞ்சல் போட்டு ஸ்வாமியை ஆட்டி ஸந்தோஷப்படுகிறோம். ‘டோலி’ கூட இதோடு ஸம்பந்தப்பட்டதுதான்.
காதை ஆட்டி வண்டை விரட்டி விளையாடும்போது விக்நேச்வரர் கூடுதலான அழகாக விளங்குகிறார். ‘விஜயதே’ – அழகாக விளங்குகிறார், வெற்றி வீரராக விளங்குகிறார். படையெடுக்கும் வண்டுக் கூட்டத்தை விரட்டியடிக்கும் வெற்றி வீரராக விளங்குகிறார்.
- தெய்வத்தின் குரல்.

Friday, 28 May 2021

Śrī Devyaṣṭakam - Sloka 3

Śrī Devyaṣṭakam - Sloka 3

॥ श्री देव्यष्टकम् ॥

|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||

|| ŚRĪ DEVYAṢṬAKAM ||


अन्नपूर्णां सदापूर्णां पार्वतीं पर्वपूजिताम् ।
महेश्वरीं वृषारूढां वन्दे त्वां परमेश्वरीम् ॥ ३॥

அன்னபூர்ணாம்ʼ ஸதா³பூர்ணாம்ʼ பார்வதீம்ʼ பர்வபூஜிதாம் ।
மஹேஶ்வரீம்ʼ வ்ருʼஷாரூடா⁴ம்ʼ வந்தே³ த்வாம்ʼ பரமேஶ்வரீம் ॥ 3॥

annapūrṇāṃ sadāpūrṇāṃ pārvatīṃ parvapūjitām ।
maheśvarīṃ vṛṣārūḍhāṃ vande tvāṃ parameśvarīm ॥ 3॥


अन्नपूर्णां - அன்னபூர்ணாம்ʼ - அன்னபூர்ணா தேவியை (அன்னபானாதிகளை நிறைவாக உடையவளை),

सदापूर्णां - ஸதா³பூர்ணாம்ʼ - எப்பொழுதும் நிறைவுத்தன்மை உடையவளை,

पार्वतीं - பார்வதீம்ʼ - பார்வதி தேவியை (பர்வதராஜரின் மகளை),

पर्वपूजितां - பர்வபூஜிதாம்ʼ - பௌர்ணமி முதலிய விசேஷ நாட்களில் பூஜிக்கப்படுபவளை,

महेश्वरीं - மஹேஶ்வரீம்ʼ - மஹேச்வரரது மனைவியை,

वृषारूढां - வ்ருʼஷாரூடா⁴ம்ʼ - ரிஷப வாகனத்தில் அமர்ந்தவளை,

परमेश्वरीं - பரமேஶ்வரீம்ʼ - அனைத்துக்கும் மேலான ஈச்வரியை,

त्वां वन्दे - த்வாம்ʼ வந்தே³ - தங்களை வணங்குகிறேன்.


பொருள் :

அன்னபூர்ணா தேவியும் (அன்னபானாதிகளை நிறைவாக உடையவளும்), எப்பொழுதும் நிறைவுத்தன்மை உடையவளும், பார்வதி தேவியும் (பர்வதராஜரின் மகளும்), பௌர்ணமி முதலிய விசேஷ நாட்களில் பூஜிக்கப்படுபவளும், மஹேச்வரரது மனைவியும், ரிஷப வாகனத்தில் அமர்ந்தவளும், அனைத்துக்கும் மேலான ஈச்வரியுமான தங்களை வணங்குகிறேன். 3


Meaning :

Oh Annapurna, Oh Goddess who is always complete , Oh Parvathi , Oh Goddess worshipped during festivals,
Oh Great Goddess , Oh Goddess who rides on a bull , I salute you who is the greatest goddess. 3

Tuesday, 25 May 2021

நரஸிம்ஹ ஜெயந்தி - Narasimha Jeyanti (25-5-2021)

நரஸிம்ஹ ஜெயந்தி - Narasimha Jeyanti (25-5-2021)

संसारदावदहनाकरभीकरोरु ज्वालावलीभिरतिदग्धतनूरुहस्य । 
त्वत्पादपद्मसरसीं शरणागतस्य लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥ 

ஸம்ʼஸாரதா³வத³ஹனாகரபீ⁴கரோரு ஜ்வாலாவலீபி⁴ரதித³க்³த⁴தனூருஹஸ்ய ।
த்வத்பாத³பத்³மஸரஸீம்ʼ ஶரணாக³தஸ்ய லக்ஷ்மீந்ருʼஸிம்ʼஹ மம தே³ஹி கராவலம்ப³ம் ॥


संसार-दाव-दहन-आकर-भीकर-उरु-ज्वाला-आवलीभिः - ஸம்ʼஸார-தா³வ-த³ஹன-ஆகர-பீ⁴கர-உரு-ஜ்வாலா-ஆவலீபி⁴꞉ - ஸம்ஸாரமாகிற காட்டுத்தீயின் ஏராளமான பயங்கரமான பெரிதான ஜ்வாலைகளின் தொடர்ச்சிகளால், 

अतिदग्ध-तनूरुहस्य - அதித³க்³த⁴-தனூருஹஸ்ய - நன்கு எரிக்கப்பட்ட ரோமங்களோடு கூடியவனும், 

त्वत्-पाद-पद्म-सरसीं - த்வத்-பாத³-பத்³ம-ஸரஸீம்ʼ - தங்களுடைய பாதங்களாகிய தாமரைக்குளத்தை

शरणागतस्य - ஶரணாக³தஸ்ய - சரணமாக அடைந்திருக்கிறவனுமான, 

मम - மம - எனக்கு,

करावलम्बं देहि - கராவலம்ப³ம்ʼ தே³ஹி - கைபிடிப்பை தாரும்,

लक्ष्मीनृसिंह - லக்ஷ்மீந்ருʼஸிம்ʼஹ - ஹே ! லக்ஷ்மீ ஸமேதரான நரஸிம்ஹரே !


பொருள் :

ஸம்ஸாரமாகிற காட்டுத்தீயின் ஏராளமான பயங்கரமான பெரிதான ஜ்வாலைகளின் தொடர்ச்சிகளால், நன்கு எரிக்கப்பட்ட ரோமங்களோடு கூடியவனும், தங்களுடைய பாதங்களாகிய தாமரைக்குளத்தை சரணமாக அடைந்திருக்கிறவனுமான எனக்கு (தங்கள்) கைபிடிப்பை தாரும், ஹே லக்ஷ்மி ஸமேதரான நரஸிம்ஹரே !


தினம் தினம் வாழ்வில் ஏற்படும் அநேக விதமான கஷ்டங்களால் தவித்துக் கொண்டிருக்கும் ஒருவன், இந்நிலையில் உதவ உற்றார் உறவினராலும் இயலாதபோது, அரசாங்கமோ, நண்பர்களோ, மருத்துவர்களோ என்று யாராலும் உதவமுடியாத நிலையில், அதுவும் இந்நிலை தொடர்கதையாகவே இருக்கும் எனும் நிலையில், ஒரே அடைக்கலம் என்று தன் பகவான் திருவடிகளை நினைத்து உருகி, ஆதரவை பகவானிடம் வேண்டுவதாக அமைந்துள்ளது. சாதாரண மனிதனுக்கு ஏற்படக்கூடிய இத்தகைய நிலையை எண்ணி சங்கராசார்யர் அவனுக்காக இதை அமைக்கிறார்.

Monday, 24 May 2021

Sri Somasundara Stuti - Sloka 1

Sri Somasundara Stuti - Sloka 1

॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥

॥ ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ॥

|| ŚRĪ SOMASUNDARA STUTIḤ ||


इन्द्र उवाच –

एकं ब्रह्माद्वितीयञ्च परिपूर्ण परात्परम् । 
इति यो गीयते बेदैस्तं वन्दे सोमसुन्दरम् ॥ १ ॥


இந்த்³ர உவாச –

ஏகம்ʼ ப்³ரஹ்மாத்³விதீயஞ்ச பரிபூர்ண பராத்பரம் । 
இதி யோ கீ³யதே பே³தை³ஸ்தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 1 ॥


indra uvāca –

ekaṃ brahmādvitīyañca paripūrṇa parātparam । 
iti yo gīyate bedaistaṃ vande somasundaram ॥ 1 ॥


इन्द्र उवाच - இந்த்³ர உவாச - இந்திரன் கூறினார்.

एकम् - ஏகம் - ஏகன் (ஒன்றானவன்),

ब्रह्म - ப்³ரஹ்ம - ப்ரஹ்மன் (தன்னிலும் அதிகரித்ததொன்றில்லாதது),

अद्वितीयम‌् - அத்³விதீயம் - அத்விதீயன் (இரண்டற்றது - தன்னைத் தவிர வேறு இல்லாதது., அதுல்யன் - ஸமானமற்றது, இணையற்றது)

परिपूर्ण - பரிபூர்ண - பரிபூர்ணன் (நீக்கமற நிறைந்தது)

परात्परम् - பராத்பரம் - பராத்பரன் (சிறந்ததிலெல்லாம் சிறந்தது)

च इति वेदैः गीयते - ச இதி வேதை³꞉ கீ³யதே - என்றெல்லாம் வேதங்களால் ‌போற்றப்பெறுபவர்,

यः - ய꞉ - எவரோ,

तं सोमसुन्दरं - தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ - அந்த ஸோமஸுந்தரரை,

वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.


பொருள் :

இந்திரன் கூறினார் -

'ஏகன்' (ஒன்றானவன்), 'ப்ரஹ்மன்' (தன்னிலும் அதிகரித்ததொன்றில்லாதது), 'அத்விதீயன்' (இரண்டற்றது - தன்னைத் தவிர வேறு இல்லாதது), 'பரிபூர்ணன்' (நீக்கமற நிறைந்தது), 'பராத்பரன்' (சிறந்ததிலெல்லாம் சிறந்தது) - என்றெல்லாம் வேதங்களால் ‌போற்றப்பெறுபவர் எவரோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன். 1


Meaning :

Indra said -

I worship Somasundaram (Lord Shiva), who is always praised by the Vedas as 'Eka', 'Brahma', 'Adviteeya', 'Paripoorna', 'Paraatpara'. 1



* ஏகன் - ஒன்றானவன் - தன்னைப் போல் ஸஜாதீயமாகவோ விஜாதீயமாகவோ மற்றொன்று இல்லாதது. இரண்டு மான்கள், நான்குகால் பிராணிகள் என்று சொன்னால், மானின் லக்ஷணங்களுடன் கூடிய இன்னொன்று என்றாகிறது. நான்குகால் பிராணிகள் என்று சொன்னால், நான்கு கால்கள் உடைய ஆனால் வேறு வேறு லக்ஷணங்களுடன் கூடிய பல பிராணிகள் (மான், பசு, புலி, சிங்கம், யானை, முயல் இத்யாதிகள்) என்று கொள்ளலாம். பிரம்மத்தைப் பொருத்தவரை அதைப் போன்ற இன்னொன்று இல்லை. இரண்டாவது பிரம்மம் என்று இல்லாமல் ஒன்றே ஆனது.


* ப்ரஹ்மன் - எவன் பெரியவனோ, பெரியதாகச் செய்பவனோ அவன். தன்னிலும் அதிகரித்ததொன்றில்லாதது. 

"எதை அடைந்தபின், அடைவதற்கு வேறொன்று என்பது இல்லையோ,
எவ்வின்பத்தினை அடைந்தால், அதன் பின் அதைத்தவிர வேறொரு இன்பம் என்றில்லையோ,
எவ்வறிவானது, தான் யாரென அறிந்திடும் அறிவினைத் தந்திட, அந்த தன்னறிவு அன்றி வேறேதும் அறிய இல்லை, என்கிற நிலைதனைத் தந்திடுமோ,
அது, வேறொன்றும் இல்லை, அது தான் அன்றி வேறொன்றும் இல்லை,
அது, பிரம்மம் என அவன் சென்றடைவான்."

"எதைக் கண்டபின், பார்ப்பதற்கு வேறொன்று என்பது இல்லையோ, 
எதை அடைந்தபின், அதன்பின் இன்னொரு பிறப்பு என்பதில்லையோ, 
எதை அறிந்தபின், அதன்பின் அறியத் தக்க பொருள் என்று வேறில்லையோ, 
அப்படிப்பட்ட பொருள் தான், பிரம்மமாம்." - ஆத்மபோதத்திலிருந்து.

* அத்விதீயன் - இரண்டற்றது (ஒன்றானவன்) - தன்னைத் தவிர வேறு இல்லாதது., அதுல்யன் - ஸமானமற்றது, இணையற்றது.

* பரிபூர்ணன் - நீக்கமற நிறைந்தது.

* பராத்பரன் - சிறந்ததிலெல்லாம் சிறந்தது.

Sunday, 23 May 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 9

Vinaayaka Leelaa Stuti - sloka 9

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


आगत्य चोच्चैर्हरिनाभिपद्मं ददर्श तत्राशु करेण तच्च ।
उद्धर्तुमिच्छन्विधिचाटुवाक्यं श्रुत्वा मुमोचावतु नो गणेशः ॥ ९॥

ஆக³த்ய சோச்சைர்ஹரினாபி⁴பத்³மம்ʼ த³த³ர்ஶ தத்ராஶு கரேண தச்ச | 
உத்³த⁴ர்துமிச்ச²ன்விதி⁴சாடுவாக்யம்ʼ ஶ்ருத்வா முமோசாவது நோ க³ணேஶ: || 9|| 

āgatya coccairharinābhipadmaṃ dadarśa tatrāśu kareṇa tacca ।
uddhartumicchanvidhicāṭuvākyaṃ śrutvā mumocāvatu no gaṇeśaḥ ॥ 9॥


हरि-नाभि-पद्मं - ஹரி-நாபி⁴-பத்³மம்ʼ - ஹரியின் மீதேறி அவரது தொப்புளில் முளைத்துள்ள தாமரையைப் , 

ददर्श तत्र आशु - த³த³ர்ஶ தத்ர ஆஶு - பார்த்த உடன் அங்கு ,

उच्चैः आगत्य च - உச்சை: ஆக³த்ய ச - மேலே ஏறியும் வந்து ,

करेण - கரேண - ( தன் ) துதிக்கையால் (அல்லது) கையால் ,

तत् च उद्धर्तुं-इच्छन् - தத் ச உத்³த⁴ர்தும்ʼ-இச்ச²ன் - அதைப் ( பத்மத்தை ) பிடுங்கவும் நினைத்தவர், 

विधि-चाटु-वाक्यं श्रुत्वा - விதி⁴-சாடு-வாக்யம்ʼ ஶ்ருத்வா - ப்ரஹ்மாவின் இனிய வார்த்தைகளைக் கேட்டு,

मुमोच - முமோச - ( பிடுங்காமல் ) விட்டார் ,

गणेशः - க³ணேஶ: - ( அந்த ) கணேசர், 

नः अवतु - ந: அவது - நம்மைக் காக்கட்டும்.


பொருள் :

ஹரியின் மீதேறி அவரது தொப்புளில் முளைத்துள்ள தாமரையைப் பார்த்த உடன் அங்கு மேலே ஏறியும் வந்து, ( தன் ) துதிக்கையால் (அல்லது) கையால் அதைப் ( பத்மத்தை ) பிடுங்கவும் நினைத்தவர், ப்ரஹ்மாவின் இனிய வார்த்தைகளைக் கேட்டு ( பிடுங்காமல் ) விட்டார். ( அந்த ) கணேசர் நம்மைக் காக்கட்டும். 9


# विधिः - விதி⁴: - ப்ரஹ்மா.

Friday, 21 May 2021

Śrī Devyaṣṭakam - Sloka 2

Śrī Devyaṣṭakam - Sloka 2

॥ श्री देव्यष्टकम् ॥

|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||

|| ŚRĪ DEVYAṢṬAKAM ||


भक्तप्रियां भक्तिगम्यां भक्तानां कीर्तिवर्धिकाम् ।
भवप्रियां सतीं देवीं वन्दे त्वां भक्तवत्सलाम् ॥ २॥

ப⁴க்தப்ரியாம்ʼ ப⁴க்திக³ம்யாம்ʼ ப⁴க்தானாம்ʼ கீர்திவர்தி⁴காம் ।
ப⁴வப்ரியாம்ʼ ஸதீம்ʼ தே³வீம்ʼ வந்தே³ த்வாம்ʼ ப⁴க்தவத்ஸலாம் ॥ 2॥

bhaktapriyāṃ bhaktigamyāṃ bhaktānāṃ kīrtivardhikām ।
bhavapriyāṃ satīṃ devīṃ vande tvāṃ bhaktavatsalām ॥ 2॥



भक्त-प्रियां - ப⁴க்த-ப்ரியாம்ʼ - பக்தர்களுக்குத் திருப்தியளிப்பவளை, 

भक्ति-गम्यां - ப⁴க்தி-க³ம்யாம்ʼ - பக்தியால் அடைய தகுந்தவளை, 

भक्तानां कीर्ति-वर्धिकां - ப⁴க்தானாம்ʼ கீர்தி-வர்தி⁴காம்ʼ - பக்தர்களுடைய புகழை வளர்ப்பவளை, 

भव-प्रियां - ப⁴வ-ப்ரியாம்ʼ - பரமசிவனாரது பத்தினியை, 

सतीं देवीं - ஸதீம்ʼ தே³வீம்ʼ - பதிவிரதையாகிய தேவியை, 

भक्त-वत्सलां - ப⁴க்த-வத்ஸலாம்ʼ - பக்தர்களிடம் வாத்ஸல்யம் கொண்டவளை,

त्वां वन्दे - த்வாம்ʼ வந்தே³ - தங்களை வணங்குகிறேன்.


பொருள் :

பக்தர்களுக்குத் திருப்தியளிப்பவளும், பக்தியால் அடைய தகுந்தவளும், பக்தர்களுடைய புகழை வளர்ப்பவளும், பரமசிவனாரது பத்தினியும், பதிவிரதையாகிய தேவியும், பக்தர்களிடம் வாத்ஸல்யம் கொண்டவளுமான தங்களை வணங்குகிறேன். 2


Meaning :

The Goddess, who gratifies her devotees, who can be attained through devotion, who augments the glory of her devotees, the consort of Lord Shiva, the faithful devoted Devi, I salute Thee, who has tender affection to her devotees. 2


* ப⁴க்தப்ரியா - பக்தர்கள் வேண்டுவதைத் தந்து திருப்தி அளிப்பவள்.

* ப⁴க்தவத்ஸலா - பக்தர்கள் தன்னை போற்றினாலும் சிலவேளைகளில் தூற்றினாலும், நினைந்தாலும் சிலவேளைகளில் மறந்தாலும், சாஸ்த்ர வழி நடந்தாலும் நடக்காவிட்டாலும், பெற்ற அன்னையாக மாறாத அன்பினை பக்தர்கள்பால் கொண்டவள்.

Monday, 17 May 2021

Sri Somasundara Stuti - Introduction

Sri Somasundara Stuti - Introduction


மீனாக்ஷி ஸுந்தர ! ஸோம ஸுந்தர ! கடம்ப வன ஸுந்தர ! 

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரராக வீற்றிருக்கும் சிவபெருமான், தன் பக்தர்களுக்காக அநேக திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். அவற்றுள் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் பிரஸித்தம். இவை பற்றி வடமொழியில் ஹாலாஸ்ய மாஹாத்ம்யம் எனும் ஸ்கந்த புராணப் பகுதியும், தென்மொழியில் திருவிளையாடற் புராணம் எனும் நூலும் காணக்கிடைக்கின்றன.

இத்திருவிளையாடல்களில் முதலாவது இந்திரன் சாபம் தீர்த்தது. இதைப் பற்றி ஹாலாஸ்ய மாஹாத்ம்யத்தில் கூறும்போது, இந்த்ரன் ஸோமஸுந்தரரைத் துதித்ததாகக் குறிப்பு வருகிறது.

இந்திரனின் பாபம் நீங்கிய வரலாறு :

தேவர்களின் தலைவன் இந்த்ரன் விசுவகர்மாவால் அமைக்கப் பெற்ற ஸுதர்மா என்ற ஸபையில் அமர்ந்து மூவுலகையும் ஆண்டான். ஸபையில் நடனமாடிய திலோத்தமையின் அழகில் மயங்கியவன் தன் குரு பிருஹஸ்பதி ஸபைக்கு வந்ததை அறியாமல் அவரை வரவேற்று உபசரிக்காததால் மனமுடைந்த பிருஹஸ்பதி தேவருலகை விட்டகன்றார். நடனம் முடிந்ததும் மனம் தெளிந்த இந்த்ரன் குருவிடம் தவறாக நடந்து கொண்டதையும் அவர் அகன்றுவிட்டதையும் உணர்ந்தான். இந்தச் செய்தி அறிந்த அஸுரர்கள் குருவை அவமதித்த இந்த்ரனையும் தேவர் படையையும் எளிதில் வென்றனர். தேவர்கள் இந்திரனுடன் பிரும்மாவிடம் சென்று உதவ வேண்டினர்.

த்வஷ்டாவின் புதல்வனும் மூன்று தலைகள் உள்ளவனுமான விசுவரூபனைக் குருவாகக் கொள்ளும்படி பிரும்மா கூறினார். அவரிடம் சென்று அவரைக் குருவாக வரித்து அவரிடமிருந்து சிவகவசம் எனும் வஜ்ரக் கூடு போன்ற மந்த்ரம் பெற்று அதன் வலிமையால் அஸுரர்களைத் தேவர்கள் வென்றனர். விசுவரூபர் தன் ஸகோதரியின் புதல்வர்களான அஸுரர்களிடம் அன்பு பூண்டு மறைமுகமாக அவர்களுக்கு உதவுவதைக் கண்ட இந்த்ரன் விசுவரூபனை வஜ்ராயுதத்தால் வெட்டினான். அவரது உடலிலிருந்து பறவைகள் வடிவில் உயிர் அகன்றது. இந்த்ரனுக்கு நேர்ந்த பிரும்ஹ ஹத்தி பாபத்தை அவன் பூமியிடமும், நீரிலும் பெண்களிடத்திலும் மரங்களிடத்திலும் பங்கிட்டுத் தந்தான். வெட்ட வெட்ட நிரம்புகிற ஆற்றலை பூமிக்கும், ப்ரசவிக்கும் வரை புருஷனுடன் உடலுறவு கொள்வதைப் பெண்களுக்கும், பனியாகிக் கெட்டியானாலும் இளகுவதை நீருக்கும், வெட்ட வெட்டத் துளிர்ப்பதை மரங்களுக்கும் ஈடாக இந்த்ரன் தந்தான்.

விசுவரூபரின் தந்தை தன் மகனைக் கொன்ற இந்த்ரனுக்கு எதிரியாக ஒரு புத்திரனை வேண்டி யாகம் புரிந்தார். விருத்திரன் தோன்றினான். தினமும் ஒரு வில்லடி வளர்ந்த அந்த அஸுரனை வெல்ல இந்த்ரனால் இயலவில்லை. வஜ்ராயுதமும் பயனற்றுப் போனது. திருப்பாற் கடலைக் கடைந்தபோது தேவரும், அஸுரரும் தம் தம் ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் ததீசி முனிவரிடம் தந்தனர். இந்த்ரனின் மந்த்ரசக்தி மிக்க வஜ்ரமும் அதில் ஒன்று. ததீசி அதனை விழுங்கி முதுகின் நடு எலும்புக் கூட்டில் அவற்றைப் பதித்துக் காப்பாற்றி வந்துள்ளதை விஷ்ணு நினைவு படுத்த, ததீசியிடம் சென்று இந்த்ரன் ஆயுதத்தைத் தரவேண்டினான். ததீசி தன் யோகபலத்தால் சிரமமின்றி உயிரை விட்டார். இந்திரன் அவரது முதுகெலும்பைக் கொண்டு வஜ்ராயுதம் அமைத்து அதனால் விருத்ரனை எதிர்த்தான். 

விருத்ரன் பயந்து கடலில் மூழ்கி மறைந்தான். அகஸ்தியரிடம் வேண்ட, கடல் நீரைக் குடித்து வற்றச் செய்தார். விருத்திரன் அங்கு யோக நிலையில் அமர்ந்து சித்த மடங்கி இருந்தான். இந்த்ரன் வஜ்ராயுதத்தால் அவனைக் கொன்றதும் அவனைப் பிரும்ம-ஹத்தி பாபம் நிழலாகத் தொடர்ந்தது. அதனைக் கண்டு பயந்த இந்திரன் கைலாஸம் சென்று தாமரைத் தண்டினுள் நுழைந்து மறைந்து வாழ்ந்தான். நஹுஷன் இந்திர பதவி பெற்றுத் தேவருலகை ஆண்டான்.

இந்திரன் துயருற்று பிருஹஸ்பதியைத் தியானித்ததும் அவர் நேரில் வந்தார். இந்திரனது குற்றத்தை மன்னித்தார். சிவலிங்க வழிபாடே இதற்குரிய கழுவாய் எனக் கண்ட குரு ஒவ்வொரு தீர்த்தத்திற்கும் சென்று நீராடி சிவனை வழிபடக் கூறினார்.

பெரும் பாபம் நீங்குவதற்காக குருவின் வாக்யத்தைக் கேட்ட இந்த்ரன் பயம் நீங்கியவனாக அமராவதி சென்று குருவுடன் உச்சை சிரவஸ் என்ற தன் குதிரைமீதேறி பூமியில் இறங்கிக் கைலாஸம் முதலிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று புனித நதிகளில் நீராடிச் சிவபெருமானை வழிபட்டான். பிரும்ம ஹத்தி எல்லாவிடத்திலும் அவனைத் துரத்தியது. 

வழியில் வேட்டையாடுவதில் நாட்டத்தால் காடுகளில் சுற்றியவன் ஸோமஸுந்தரர் இருக்குமிடம் வந்தான். வேட்டையில் நாட்டம் குறைந்து தயை அதிகமாவதை உணர்ந்த இந்த்ரன் கடம்புக் காட்டில் நுழையும் போதே பிரும்ம-ஹத்தி தன்னை விட்டகன்று விட்டதை உணர்ந்தான். அங்கு எல்லா உயிரினங்களும் அன்புடன் பழகின. எதிரில் பெரும் தடாகம் தென்பட்டது. அதில் நீராடினான். அதன் வடமேற்கில் ஒரு லிங்கம் இருந்தது. அதனைச் சுற்றி வந்த கிளிகள் " சிவ ! சம்போ மஹாதேவ! சங்கர! " என்று இறைவனைப் பாடின. பிருஹஸ்பதியிடம் தான் செய்ய வேண்டியதைப் பற்றிக் கேட்டான்.

"இந்தத் தடாகத்தின் கரையில் ஒரு ஆலயத்தைக் கட்டி, அதில் இந்த லிங்கத்தை வைத்துப் பூஜிப்பாய்" என்று குரு கூற உடன் விசுவகர்மாவை அழைத்து கோவில் கட்டச் செய்தான். பூக்களால் வழிபட விரும்பி காட்டிலிருந்து பூக்களைக் கொணரத் தன் தேவ கணங்களை ஏவினான். எங்கும் பூ கிடைக்கவில்லை. தன் வெண்குடையை லிங்கத்தின் மீது தாங்கினான். அதற்குள் விசுவகர்மா கோவிலைக் கட்டி முடித்தான். அந்த அழகிய அலங்கரிக்கப் பெற்ற கோவிலில் ஈசனை வைத்து வழிபடத் தொடங்கினான். புஷ்பங்களைக் கொணரச் சென்றவர்கள் பக்கத்திலுள்ள காடுகளில் தேடியும், பூ கிடைக்காமல் திரும்பினர்.

இறைவன் தன் அருளால் தடாகத்தில் தங்கத் தாமரைகளைத் தோற்றுவித்தார். அவற்றை கொண்டு வந்து ஈசனையும், தேவியையும் இந்த்ரன் வழிபட்டான். இந்த்ரன் முன்னே மிகவும் ஸுந்தரனாகத் தேவியுடன் இறைவன் காட்சியளித்தார். அதனைக் கண்டானந்தித்த இந்த்ரன் தேவனைத் துதித்து வணங்க, இறைவன் அதை ஏற்று அருள் புரிந்தார். தினமும் தனது வழிபாட்டை ஏற்க இந்த்ரன் வேண்டியதும், இறைவன் கூறினார், " பிரும்மஹத்தி பாபம் நீங்கியது. உன்னால் அமைக்கப் பெற்ற இந்த விமானம் உன் பெயருடன் விளங்கட்டும். ப்ரளய காலத்திலும் இது அழியாதிருக்கட்டும். ஆண்டு தோறும் வஸந்த ருதுவில் சித்திரை மாதத்தில் சித்திரை நக்ஷத்திரம் கூடிய பௌர்ணமியில் தேவர்களுடன் வந்து பொற்றாமரைக் குளத்திலுள்ள பொற்றாமரைகளால் அர்ச்சித்து வழிபடுவாயாக ! " என்றருளி மூலலிங்கத்தினுள் மறைந்தார்.

அதிலிருந்து இந்நாள் வரை சித்திரைத் திருநாளை இந்திரன் தேவர்களுடன் வந்து கண்டுகளித்துச் செல்கிறான். இந்திரனுக்கு அருள் புரிந்ததே மதுரையில் நிகழ்ந்த முதல் லீலை.

பரமேச்வரர் இந்திரனுக்கு ஸோமஸுந்தரராகக் காட்சியளித்த போது, இந்திரனால் செய்யப்பட்ட ஸ்துதியே, இந்த ஸோமஸுந்தர ஸ்துதி.



॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥

इन्द्र उवाच –

एकं ब्रह्माद्वितीयञ्च परिपूर्ण परात्परम् । 
इति यो गीयते बेदैस्तं वन्दे सोमसुन्दरम् ॥ १ ॥

ज्ञातृज्ञानज्ञेयरूपं विश्वं व्याप्य व्यवस्थितम् । 
स्वयं सर्वैरदृश्यो यस्तं वन्दे सोमसुन्दरम् ॥ २ ॥ 

अश्वमेधादियज्ञैश्च यस्समाराध्यते द्विजैः । 
ददाति च फलं तेषां तं वन्दे सोमसुन्दरम् ॥ ३ ॥

यं विदित्वा बुधास्सर्वे कर्मबन्धविबज्जिताः ।
लभन्ते परमां मुक्तिं तं वन्दे सोमसुन्दरम् ॥ ४ ॥

देवदेवं यमाराध्य मृकण्डुतनयो मुनिः ।
नित्यत्वमगमत्सद्यस्तं वन्दे सोमसुन्दरम् ॥ ५ ॥

निजनेत्राम्बुजकृतपूजया परितोष्य यम् । 
श्रीपतिर्लभते चक्रं तं बन्दे सोमसुन्दरम् ॥ ६ ॥

येन सृष्टं जगत्सर्वं रक्षितं संहृतं क्रमात् । 
सत्यं विज्ञानमानन्दं तं वन्दे सोम सुन्दरम् ॥ ७ ॥

यस्मै वेदाश्च चत्वारो नमस्यन्ति वपुर्धराः । 
ईशानं सर्वविद्यानां तं वन्दे सोमसुन्दरम् ॥ ८ ॥

यस्मात्परञ्चापरञ्च किञ्चिद्वस्तु न विद्यते ।
ईश्वरं सर्वभूतानां तं वन्दे सोमसुन्दरम् ॥ ९ ॥

यस्य प्रणाममात्रेण सन्ति सर्वाश्च सम्पदः । 
सर्वसिद्धिप्रदं शम्भुं तं वन्दे सोमसुन्दरम् ॥ १० ॥

यस्य दर्शनमात्रेण ब्रह्महत्यादिपातकम् ।
अवश्यं नश्यति क्षिप्रं तं वन्दे सोमसुन्दरम् ॥ ११ ॥ 

उत्तमाङ्गञ्च चरणं विधिना विष्णुनाऽपि च । 
न दृश्यते यस्य यत्नात् तं वन्दे सोमसुन्दरम् ॥ १२ ॥

त्वया नीपारण्यनाथ त्वदन्यान् समानाहुर्दैवतान् पापिनस्ते । 
तदा शम्भो त्वत्समं दैवतं स्याद् यदा योगो वाजिनो रासभस्य ॥ १३ ॥

अणोरणुस्त्वं महतो महांस्त्वं सर्वात्मभावात्परिपूर्ण एकः ।
त्वयैव शम्भो महिमा त्वदीयो विज्ञायते वक्तुमिमं क्षमः कः ॥ १४ ॥

फलश्रुतिः –
त्वया कृतमिदं स्तोत्रं पठति श्रद्धया तु यः ।
धर्मादिपुरुषार्थांश्च तस्मै दास्याम्यहं ध्रुवम् ॥

इति श्री सोमसुन्दर स्तुतिः संपूर्णम् ॥


॥ ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ॥

இந்த்³ர உவாச –

ஏகம்ʼ ப்³ரஹ்மாத்³விதீயஞ்ச பரிபூர்ண பராத்பரம் । 
இதி யோ கீ³யதே பே³தை³ஸ்தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 1 ॥

ஜ்ஞாத்ருʼஜ்ஞானஜ்ஞேயரூபம்ʼ விஶ்வம்ʼ வ்யாப்ய வ்யவஸ்தி²தம் । 
ஸ்வயம்ʼ ஸர்வைரத்³ருʼஶ்யோ யஸ்தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 2 ॥ 

அஶ்வமேதா⁴தி³யஜ்ஞைஶ்ச யஸ்ஸமாராத்⁴யதே த்³விஜை꞉ । 
த³தா³தி ச ப²லம்ʼ தேஷாம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 3 ॥

யம்ʼ விதி³த்வா பு³தா⁴ஸ்ஸர்வே கர்மப³ந்த⁴விப³ஜ்ஜிதா꞉ ।
லப⁴ந்தே பரமாம்ʼ முக்திம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 4 ॥

தே³வதே³வம்ʼ யமாராத்⁴ய ம்ருʼகண்டு³தனயோ முனி꞉ ।
நித்யத்வமக³மத்ஸத்³யஸ்தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 5 ॥

நிஜநேத்ராம்பு³ஜக்ருʼதபூஜயா பரிதோஷ்ய யம் । 
ஶ்ரீபதிர்லப⁴தே சக்ரம்ʼ தம்ʼ ப³ந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 6 ॥

யேன ஸ்ருʼஷ்டம்ʼ ஜக³த்ஸர்வம்ʼ ரக்ஷிதம்ʼ ஸம்ʼஹ்ருʼதம்ʼ க்ரமாத் । 
ஸத்யம்ʼ விஜ்ஞானமானந்த³ம்ʼ தம்ʼ வந்தே³ ஸோம ஸுந்த³ரம் ॥ 7 ॥

யஸ்மை வேதா³ஶ்ச சத்வாரோ நமஸ்யந்தி வபுர்த⁴ரா꞉ । 
ஈஶானம்ʼ ஸர்வவித்³யானாம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 8 ॥

யஸ்மாத்பரஞ்சாபரஞ்ச கிஞ்சித்³வஸ்து ந வித்³யதே ।
ஈஶ்வரம்ʼ ஸர்வபூ⁴தானாம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 9 ॥

யஸ்ய ப்ரணாமமாத்ரேண ஸந்தி ஸர்வாஶ்ச ஸம்பத³꞉ । 
ஸர்வஸித்³தி⁴ப்ரத³ம்ʼ ஶம்பு⁴ம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 10 ॥

யஸ்ய த³ர்ஶனமாத்ரேண ப்³ரஹ்மஹத்யாதி³பாதகம் ।
அவஶ்யம்ʼ நஶ்யதி க்ஷிப்ரம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 11 ॥ 

உத்தமாங்க³ஞ்ச சரணம்ʼ விதி⁴னா விஷ்ணுனா(அ)பி ச । 
ந த்³ருʼஶ்யதே யஸ்ய யத்னாத் தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 12 ॥

த்வயா நீபாரண்யநாத² த்வத³ன்யான் ஸமானாஹுர்தை³வதான் பாபினஸ்தே । 
ததா³ ஶம்போ⁴ த்வத்ஸமம்ʼ தை³வதம்ʼ ஸ்யாத்³ யதா³ யோகோ³ வாஜினோ ராஸப⁴ஸ்ய ॥ 13 ॥

அணோரணுஸ்த்வம்ʼ மஹதோ மஹாம்ʼஸ்த்வம்ʼ ஸர்வாத்மபா⁴வாத்பரிபூர்ண ஏக꞉ ।
த்வயைவ ஶம்போ⁴ மஹிமா த்வதீ³யோ விஜ்ஞாயதே வக்துமிமம்ʼ க்ஷம꞉ க꞉ ॥ 14 ॥

ப²லஶ்ருதி꞉ –
த்வயா க்ருʼதமித³ம்ʼ ஸ்தோத்ரம்ʼ பட²தி ஶ்ரத்³த⁴யா து ய꞉ ।
த⁴ர்மாதி³புருஷார்தா²ம்ʼஶ்ச தஸ்மை தா³ஸ்யாம்யஹம்ʼ த்⁴ருவம் ॥

இதி ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ஸம்பூர்ணம் ॥


|| ŚRĪ SOMASUNDARA STUTIḤ ||

indra uvāca –

ekaṃ brahmādvitīyañca paripūrṇa parātparam । 
iti yo gīyate bedaistaṃ vande somasundaram ॥ 1 ॥

jñātṛjñānajñeyarūpaṃ viśvaṃ vyāpya vyavasthitam । 
svayaṃ sarvairadṛśyo yastaṃ vande somasundaram ॥ 2 ॥ 

aśvamedhādiyajñaiśca yassamārādhyate dvijaiḥ । 
dadāti ca phalaṃ teṣāṃ taṃ vande somasundaram ॥ 3 ॥

yaṃ viditvā budhāssarve karmabandhavibajjitāḥ ।
labhante paramāṃ muktiṃ taṃ vande somasundaram ॥ 4 ॥

devadevaṃ yamārādhya mṛkaṇḍutanayo muniḥ ।
nityatvamagamatsadyastaṃ vande somasundaram ॥ 5 ॥

nijanetrāmbujakṛtapūjayā paritoṣya yam । 
śrīpatirlabhate cakraṃ taṃ bande somasundaram ॥ 6 ॥

yena sṛṣṭaṃ jagatsarvaṃ rakṣitaṃ saṃhṛtaṃ kramāt । 
satyaṃ vijñānamānandaṃ taṃ vande soma sundaram ॥ 7 ॥

yasmai vedāśca catvāro namasyanti vapurdharāḥ । 
īśānaṃ sarvavidyānāṃ taṃ vande somasundaram ॥ 8 ॥

yasmātparañcāparañca kiñcidvastu na vidyate ।
īśvaraṃ sarvabhūtānāṃ taṃ vande somasundaram ॥ 9 ॥

yasya praṇāmamātreṇa santi sarvāśca sampadaḥ । 
sarvasiddhipradaṃ śambhuṃ taṃ vande somasundaram ॥ 10 ॥

yasya darśanamātreṇa brahmahatyādipātakam ।
avaśyaṃ naśyati kṣipraṃ taṃ vande somasundaram ॥ 11 ॥ 

uttamāṅgañca caraṇaṃ vidhinā viṣṇunā'pi ca । 
na dṛśyate yasya yatnāt taṃ vande somasundaram ॥ 12 ॥

tvayā nīpāraṇyanātha tvadanyān samānāhurdaivatān pāpinaste । 
tadā śambho tvatsamaṃ daivataṃ syād yadā yogo vājino rāsabhasya ॥ 13 ॥

aṇoraṇustvaṃ mahato mahāṃstvaṃ sarvātmabhāvātparipūrṇa ekaḥ ।
tvayaiva śambho mahimā tvadīyo vijñāyate vaktumimaṃ kṣamaḥ kaḥ ॥ 14 ॥

phalaśrutiḥ –
tvayā kṛtamidaṃ stotraṃ paṭhati śraddhayā tu yaḥ ।
dharmādipuruṣārthāṃśca tasmai dāsyāmyahaṃ dhruvam ॥

iti śrī somasundara stutiḥ saṃpūrṇam ॥

Sunday, 16 May 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 8

Vinaayaka Leelaa Stuti - sloka 8

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


लम्बोदरो देवकुमारसङ्घैः क्रीडन् कुमारं जितवान्निजेन ।
करेण चोत्तोल्य ननर्त रम्यं दन्तावलास्यो भयतः स पायात् ॥ ८॥

லம்போ³த³ரோ தே³வகுமாரஸங்கை⁴: க்ரீட³ன் குமாரம்ʼ ஜிதவான்னிஜேன |
கரேண சோத்தோல்ய நனர்த ரம்யம்ʼ த³ந்தாவலாஸ்யோ ப⁴யத: ஸ பாயாத் || 8||

lambodaro devakumārasaṅghaiḥ krīḍan kumāraṃ jitavānnijena ।
kareṇa cottolya nanarta ramyaṃ dantāvalāsyo bhayataḥ sa pāyāt ॥ 8॥


देव-कुमार-सङ्घैः क्रीडन् - தே³வ-குமார-ஸங்கை⁴: க்ரீட³ன் - தேவச்சிறுவர்களுடன் விளையாடும் போது,

जितवान् निजेन - ஜிதவான் நிஜேன - விசேஷமாக ஜெயித்த ,

लम्बोदरः - லம்போ³த³ர: - லம்போதரர் ( பெருத்த வயிறுடையவர் - விநாயகர் ),

कुमारं - குமாரம்ʼ - கந்தனை,

करेण च उत्तोल्य - கரேண ச உத்தோல்ய - கைகளால் தூக்கி ,

ननर्त रम्यं - நனர்த ரம்யம்ʼ - ஆனந்தமாக குலுக்கிக் கூத்தாடுகிற,

दन्तावलास्यः - த³ந்தாவலாஸ்ய: - யானை முகத்தவர் ( விநாயகர் ),

भयतः स पायात् - ப⁴யத: ஸ பாயாத் - பயத்திலிருந்து அவர் காப்பாராக.


பொருள் :
தேவச்சிறுவர்களுடன் விளையாடும் போது, விசேஷமாக ஜெயித்த லம்போதரர் ( பெருத்த வயிறுடையவர் - விநாயகர் ), கந்தனை கைகளால் தூக்கி , ஆனந்தமாக குலுக்கிக் கூத்தாடுகிற யானை முகத்தவர் ( விநாயகர் ), பயத்திலிருந்து அவர் காப்பாராக. 8


# கரேண - துதிக்கையால் என்றும் கொள்ளலாம்.

Friday, 14 May 2021

Śrī Devyaṣṭakam - Sloka 1

Śrī Devyaṣṭakam - Sloka 1


॥ श्री देव्यष्टकम् ॥

|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||

|| ŚRĪ DEVYAṢṬAKAM ||


महादेवीं महाशक्तिं भवानीं भववल्लभाम् ।
भवार्तिभञ्जनकरीं वन्दे त्वां लोकमातरम् ॥ १॥

மஹாதே³வீம்ʼ மஹாஶக்திம்ʼ ப⁴வானீம்ʼ ப⁴வவல்லபா⁴ம் ।
ப⁴வார்திப⁴ஞ்ஜனகரீம்ʼ வந்தே³ த்வாம்ʼ லோகமாதரம் ॥ 1॥

mahādevīṃ mahāśaktiṃ bhavānīṃ bhavavallabhām ।
bhavārtibhañjanakarīṃ vande tvāṃ lokamātaram ॥ 1॥


महादेवीं - மஹாதே³வீம்ʼ - மஹாதேவரது மனைவியை, 

महाशक्तिं - மஹாஶக்திம்ʼ - சக்திக்கெல்லாம் சக்தியானவளை, 

भवानीं - ப⁴வானீம்ʼ - பவானியை, 

भव-वल्लभां - ப⁴வ-வல்லபா⁴ம்ʼ - பவரது (சிவபெருமானது) மனைவியை, 

भव-अर्ति-भञ्जनकरीं - ப⁴வ-அர்தி-ப⁴ஞ்ஜனகரீம்ʼ - ஸம்ஸார வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்குகிறவளை, 

लोक-मातरं - லோக-மாதரம்ʼ - அகில உலகத்திற்கும் தாயை,

त्वां वन्दे - த்வாம்ʼ வந்தே³ - தங்களை வணங்குகிறேன்.


பொருள் :

மஹாதேவரது மனைவியும், சக்திக்கெல்லாம் சக்தியானவளும், பவானியும், பவரது (சிவபெருமானது) மனைவியும், ஸம்ஸார வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்குகிறவளும், அகில உலகத்திற்கும் தாயுமான தங்களை வணங்குகிறேன். 1


Meaning :

Oh, the Great Goddess, the Great power, Bhavaani, the consort of Lord Shiva, the Goddess who shatters distress, I salute Thee, the mother of the world. 1


# மஹாதேவீ - மிகப்பெரியதான சரீரத்தை உடையவள்.

# பவானீ - பவரது (சிவபெருமானது) மனைவி.

# பவானீ, பவவல்லபா, பவார்தி-பஞ்ஜனகரீ - ஸம்ஸார ஸாகரத்தினை ஏற்படுத்தி, பரிபாலித்து, முடித்தும் வைப்பவள்.

# பவ-வல்லபா - மஹாதேவர் மக்களை நன்கு பரிபாலிக்கிறாரா என்று மேற்பார்வை செய்பவள்.

Sunday, 2 May 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 7

Vinaayaka Leelaa Stuti - sloka 7

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


पितुर्जटाजूटतटे सदैव भागीरथीं तत्र कुतूहलेन ।
विहर्तुकामः स महीध्रपुत्र्या निवारितः पातु सदा गजास्यः ॥ ७॥

பிதுர்ஜடாஜூடதடே ஸதை³வ பா⁴கீ³ரதீ²ம்ʼ தத்ர குதூஹலேன |
விஹர்துகாம: ஸ மஹீத்⁴ரபுத்ர்யா நிவாரித: பாது ஸதா³ க³ஜாஸ்ய: || 7||

piturjaṭājūṭataṭe sadaiva bhāgīrathīṃ tatra kutūhalena ।
vihartukāmaḥ sa mahīdhraputryā nivāritaḥ pātu sadā gajāsyaḥ ॥ 7॥


सदा एव - ஸதா³ ஏவ - எப்பொழுதுமே ,

पितुः-जटाजूट-तटे - பிது:-ஜடாஜூட-தடே - தந்தையினுடைய ( சிவபெருமானுடைய ) விரிந்த ஜடையின் சரிவில் ,

भागीरथीं - பா⁴கீ³ரதீ²ம்ʼ - கங்கையைக்

कुतूहलेन - குதூஹலேன - ( கண்ட ) ஆர்வத்தால் ,

तत्र - தத்ர - அதில் ,

विहर्तुकामः - விஹர்துகாம: - விளையாட விரும்பியபோது,

महीध्रपुत्र्या निवारितः - மஹீத்⁴ரபுத்ர்யா நிவாரித: - மலைமகளால் ( பார்வதியால் )
தடுக்கப்பெற்ற,

सः गजास्यः - ஸ: க³ஜாஸ்ய: - அந்த யானை முகத்தவர்

सदा पातु - ஸதா³ பாது - எப்போதும் காப்பாராக.


பொருள் :

எப்பொழுதுமே தந்தையினுடைய சிவபெருமானுடைய விரிந்த ஜடையின் சரிவில் கங்கையைக் ( கண்ட ) ஆர்வத்தால், அதில் விளையாட விரும்பியபோது, மலைமகளால் ( பார்வதியால் ) தடுக்கப்பெற்ற அந்த யானை முகத்தவர் ( விநாயகர் ) எப்போதும் காப்பாராக. 7


# சிவபெருமானுடைய ஜடையிலிருந்து கங்கை எப்போதும் பிரவஹிக்கிறது. அப்போது மேலிருந்து கீழாக ஜடையின் சரிவில் இறங்கி அருவி போல் ஓடுகிறது. இதில் சறுக்கி விளையாட நினைத்த விநாயகர், ஈசன் தலையில் ஏற முயன்றபோது பார்வதி தேவி வந்து தடுத்து சமாதானம் செய்து வைத்தாள் என்றவாறு பொருள்படுகிறது. விவரமறியாத குழந்தையின் லீலை.