Sunday, 2 May 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 7

Vinaayaka Leelaa Stuti - sloka 7

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


पितुर्जटाजूटतटे सदैव भागीरथीं तत्र कुतूहलेन ।
विहर्तुकामः स महीध्रपुत्र्या निवारितः पातु सदा गजास्यः ॥ ७॥

பிதுர்ஜடாஜூடதடே ஸதை³வ பா⁴கீ³ரதீ²ம்ʼ தத்ர குதூஹலேன |
விஹர்துகாம: ஸ மஹீத்⁴ரபுத்ர்யா நிவாரித: பாது ஸதா³ க³ஜாஸ்ய: || 7||

piturjaṭājūṭataṭe sadaiva bhāgīrathīṃ tatra kutūhalena ।
vihartukāmaḥ sa mahīdhraputryā nivāritaḥ pātu sadā gajāsyaḥ ॥ 7॥


सदा एव - ஸதா³ ஏவ - எப்பொழுதுமே ,

पितुः-जटाजूट-तटे - பிது:-ஜடாஜூட-தடே - தந்தையினுடைய ( சிவபெருமானுடைய ) விரிந்த ஜடையின் சரிவில் ,

भागीरथीं - பா⁴கீ³ரதீ²ம்ʼ - கங்கையைக்

कुतूहलेन - குதூஹலேன - ( கண்ட ) ஆர்வத்தால் ,

तत्र - தத்ர - அதில் ,

विहर्तुकामः - விஹர்துகாம: - விளையாட விரும்பியபோது,

महीध्रपुत्र्या निवारितः - மஹீத்⁴ரபுத்ர்யா நிவாரித: - மலைமகளால் ( பார்வதியால் )
தடுக்கப்பெற்ற,

सः गजास्यः - ஸ: க³ஜாஸ்ய: - அந்த யானை முகத்தவர்

सदा पातु - ஸதா³ பாது - எப்போதும் காப்பாராக.


பொருள் :

எப்பொழுதுமே தந்தையினுடைய சிவபெருமானுடைய விரிந்த ஜடையின் சரிவில் கங்கையைக் ( கண்ட ) ஆர்வத்தால், அதில் விளையாட விரும்பியபோது, மலைமகளால் ( பார்வதியால் ) தடுக்கப்பெற்ற அந்த யானை முகத்தவர் ( விநாயகர் ) எப்போதும் காப்பாராக. 7


# சிவபெருமானுடைய ஜடையிலிருந்து கங்கை எப்போதும் பிரவஹிக்கிறது. அப்போது மேலிருந்து கீழாக ஜடையின் சரிவில் இறங்கி அருவி போல் ஓடுகிறது. இதில் சறுக்கி விளையாட நினைத்த விநாயகர், ஈசன் தலையில் ஏற முயன்றபோது பார்வதி தேவி வந்து தடுத்து சமாதானம் செய்து வைத்தாள் என்றவாறு பொருள்படுகிறது. விவரமறியாத குழந்தையின் லீலை.

No comments:

Post a Comment