மீனாக்ஷி ஸுந்தர ! ஸோம ஸுந்தர ! கடம்ப வன ஸுந்தர !
மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரராக வீற்றிருக்கும் சிவபெருமான், தன் பக்தர்களுக்காக அநேக திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். அவற்றுள் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் பிரஸித்தம். இவை பற்றி வடமொழியில் ஹாலாஸ்ய மாஹாத்ம்யம் எனும் ஸ்கந்த புராணப் பகுதியும், தென்மொழியில் திருவிளையாடற் புராணம் எனும் நூலும் காணக்கிடைக்கின்றன.
இத்திருவிளையாடல்களில் முதலாவது இந்திரன் சாபம் தீர்த்தது. இதைப் பற்றி ஹாலாஸ்ய மாஹாத்ம்யத்தில் கூறும்போது, இந்த்ரன் ஸோமஸுந்தரரைத் துதித்ததாகக் குறிப்பு வருகிறது.
இந்திரனின் பாபம் நீங்கிய வரலாறு :
தேவர்களின் தலைவன் இந்த்ரன் விசுவகர்மாவால் அமைக்கப் பெற்ற ஸுதர்மா என்ற ஸபையில் அமர்ந்து மூவுலகையும் ஆண்டான். ஸபையில் நடனமாடிய திலோத்தமையின் அழகில் மயங்கியவன் தன் குரு பிருஹஸ்பதி ஸபைக்கு வந்ததை அறியாமல் அவரை வரவேற்று உபசரிக்காததால் மனமுடைந்த பிருஹஸ்பதி தேவருலகை விட்டகன்றார். நடனம் முடிந்ததும் மனம் தெளிந்த இந்த்ரன் குருவிடம் தவறாக நடந்து கொண்டதையும் அவர் அகன்றுவிட்டதையும் உணர்ந்தான். இந்தச் செய்தி அறிந்த அஸுரர்கள் குருவை அவமதித்த இந்த்ரனையும் தேவர் படையையும் எளிதில் வென்றனர். தேவர்கள் இந்திரனுடன் பிரும்மாவிடம் சென்று உதவ வேண்டினர்.
த்வஷ்டாவின் புதல்வனும் மூன்று தலைகள் உள்ளவனுமான விசுவரூபனைக் குருவாகக் கொள்ளும்படி பிரும்மா கூறினார். அவரிடம் சென்று அவரைக் குருவாக வரித்து அவரிடமிருந்து சிவகவசம் எனும் வஜ்ரக் கூடு போன்ற மந்த்ரம் பெற்று அதன் வலிமையால் அஸுரர்களைத் தேவர்கள் வென்றனர். விசுவரூபர் தன் ஸகோதரியின் புதல்வர்களான அஸுரர்களிடம் அன்பு பூண்டு மறைமுகமாக அவர்களுக்கு உதவுவதைக் கண்ட இந்த்ரன் விசுவரூபனை வஜ்ராயுதத்தால் வெட்டினான். அவரது உடலிலிருந்து பறவைகள் வடிவில் உயிர் அகன்றது. இந்த்ரனுக்கு நேர்ந்த பிரும்ஹ ஹத்தி பாபத்தை அவன் பூமியிடமும், நீரிலும் பெண்களிடத்திலும் மரங்களிடத்திலும் பங்கிட்டுத் தந்தான். வெட்ட வெட்ட நிரம்புகிற ஆற்றலை பூமிக்கும், ப்ரசவிக்கும் வரை புருஷனுடன் உடலுறவு கொள்வதைப் பெண்களுக்கும், பனியாகிக் கெட்டியானாலும் இளகுவதை நீருக்கும், வெட்ட வெட்டத் துளிர்ப்பதை மரங்களுக்கும் ஈடாக இந்த்ரன் தந்தான்.
விசுவரூபரின் தந்தை தன் மகனைக் கொன்ற இந்த்ரனுக்கு எதிரியாக ஒரு புத்திரனை வேண்டி யாகம் புரிந்தார். விருத்திரன் தோன்றினான். தினமும் ஒரு வில்லடி வளர்ந்த அந்த அஸுரனை வெல்ல இந்த்ரனால் இயலவில்லை. வஜ்ராயுதமும் பயனற்றுப் போனது. திருப்பாற் கடலைக் கடைந்தபோது தேவரும், அஸுரரும் தம் தம் ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் ததீசி முனிவரிடம் தந்தனர். இந்த்ரனின் மந்த்ரசக்தி மிக்க வஜ்ரமும் அதில் ஒன்று. ததீசி அதனை விழுங்கி முதுகின் நடு எலும்புக் கூட்டில் அவற்றைப் பதித்துக் காப்பாற்றி வந்துள்ளதை விஷ்ணு நினைவு படுத்த, ததீசியிடம் சென்று இந்த்ரன் ஆயுதத்தைத் தரவேண்டினான். ததீசி தன் யோகபலத்தால் சிரமமின்றி உயிரை விட்டார். இந்திரன் அவரது முதுகெலும்பைக் கொண்டு வஜ்ராயுதம் அமைத்து அதனால் விருத்ரனை எதிர்த்தான்.
விருத்ரன் பயந்து கடலில் மூழ்கி மறைந்தான். அகஸ்தியரிடம் வேண்ட, கடல் நீரைக் குடித்து வற்றச் செய்தார். விருத்திரன் அங்கு யோக நிலையில் அமர்ந்து சித்த மடங்கி இருந்தான். இந்த்ரன் வஜ்ராயுதத்தால் அவனைக் கொன்றதும் அவனைப் பிரும்ம-ஹத்தி பாபம் நிழலாகத் தொடர்ந்தது. அதனைக் கண்டு பயந்த இந்திரன் கைலாஸம் சென்று தாமரைத் தண்டினுள் நுழைந்து மறைந்து வாழ்ந்தான். நஹுஷன் இந்திர பதவி பெற்றுத் தேவருலகை ஆண்டான்.
இந்திரன் துயருற்று பிருஹஸ்பதியைத் தியானித்ததும் அவர் நேரில் வந்தார். இந்திரனது குற்றத்தை மன்னித்தார். சிவலிங்க வழிபாடே இதற்குரிய கழுவாய் எனக் கண்ட குரு ஒவ்வொரு தீர்த்தத்திற்கும் சென்று நீராடி சிவனை வழிபடக் கூறினார்.
பெரும் பாபம் நீங்குவதற்காக குருவின் வாக்யத்தைக் கேட்ட இந்த்ரன் பயம் நீங்கியவனாக அமராவதி சென்று குருவுடன் உச்சை சிரவஸ் என்ற தன் குதிரைமீதேறி பூமியில் இறங்கிக் கைலாஸம் முதலிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று புனித நதிகளில் நீராடிச் சிவபெருமானை வழிபட்டான். பிரும்ம ஹத்தி எல்லாவிடத்திலும் அவனைத் துரத்தியது.
வழியில் வேட்டையாடுவதில் நாட்டத்தால் காடுகளில் சுற்றியவன் ஸோமஸுந்தரர் இருக்குமிடம் வந்தான். வேட்டையில் நாட்டம் குறைந்து தயை அதிகமாவதை உணர்ந்த இந்த்ரன் கடம்புக் காட்டில் நுழையும் போதே பிரும்ம-ஹத்தி தன்னை விட்டகன்று விட்டதை உணர்ந்தான். அங்கு எல்லா உயிரினங்களும் அன்புடன் பழகின. எதிரில் பெரும் தடாகம் தென்பட்டது. அதில் நீராடினான். அதன் வடமேற்கில் ஒரு லிங்கம் இருந்தது. அதனைச் சுற்றி வந்த கிளிகள் " சிவ ! சம்போ மஹாதேவ! சங்கர! " என்று இறைவனைப் பாடின. பிருஹஸ்பதியிடம் தான் செய்ய வேண்டியதைப் பற்றிக் கேட்டான்.
"இந்தத் தடாகத்தின் கரையில் ஒரு ஆலயத்தைக் கட்டி, அதில் இந்த லிங்கத்தை வைத்துப் பூஜிப்பாய்" என்று குரு கூற உடன் விசுவகர்மாவை அழைத்து கோவில் கட்டச் செய்தான். பூக்களால் வழிபட விரும்பி காட்டிலிருந்து பூக்களைக் கொணரத் தன் தேவ கணங்களை ஏவினான். எங்கும் பூ கிடைக்கவில்லை. தன் வெண்குடையை லிங்கத்தின் மீது தாங்கினான். அதற்குள் விசுவகர்மா கோவிலைக் கட்டி முடித்தான். அந்த அழகிய அலங்கரிக்கப் பெற்ற கோவிலில் ஈசனை வைத்து வழிபடத் தொடங்கினான். புஷ்பங்களைக் கொணரச் சென்றவர்கள் பக்கத்திலுள்ள காடுகளில் தேடியும், பூ கிடைக்காமல் திரும்பினர்.
இறைவன் தன் அருளால் தடாகத்தில் தங்கத் தாமரைகளைத் தோற்றுவித்தார். அவற்றை கொண்டு வந்து ஈசனையும், தேவியையும் இந்த்ரன் வழிபட்டான். இந்த்ரன் முன்னே மிகவும் ஸுந்தரனாகத் தேவியுடன் இறைவன் காட்சியளித்தார். அதனைக் கண்டானந்தித்த இந்த்ரன் தேவனைத் துதித்து வணங்க, இறைவன் அதை ஏற்று அருள் புரிந்தார். தினமும் தனது வழிபாட்டை ஏற்க இந்த்ரன் வேண்டியதும், இறைவன் கூறினார், " பிரும்மஹத்தி பாபம் நீங்கியது. உன்னால் அமைக்கப் பெற்ற இந்த விமானம் உன் பெயருடன் விளங்கட்டும். ப்ரளய காலத்திலும் இது அழியாதிருக்கட்டும். ஆண்டு தோறும் வஸந்த ருதுவில் சித்திரை மாதத்தில் சித்திரை நக்ஷத்திரம் கூடிய பௌர்ணமியில் தேவர்களுடன் வந்து பொற்றாமரைக் குளத்திலுள்ள பொற்றாமரைகளால் அர்ச்சித்து வழிபடுவாயாக ! " என்றருளி மூலலிங்கத்தினுள் மறைந்தார்.
அதிலிருந்து இந்நாள் வரை சித்திரைத் திருநாளை இந்திரன் தேவர்களுடன் வந்து கண்டுகளித்துச் செல்கிறான். இந்திரனுக்கு அருள் புரிந்ததே மதுரையில் நிகழ்ந்த முதல் லீலை.
பரமேச்வரர் இந்திரனுக்கு ஸோமஸுந்தரராகக் காட்சியளித்த போது, இந்திரனால் செய்யப்பட்ட ஸ்துதியே, இந்த ஸோமஸுந்தர ஸ்துதி.
॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥
इन्द्र उवाच –
एकं ब्रह्माद्वितीयञ्च परिपूर्ण परात्परम् ।
इति यो गीयते बेदैस्तं वन्दे सोमसुन्दरम् ॥ १ ॥
ज्ञातृज्ञानज्ञेयरूपं विश्वं व्याप्य व्यवस्थितम् ।
स्वयं सर्वैरदृश्यो यस्तं वन्दे सोमसुन्दरम् ॥ २ ॥
अश्वमेधादियज्ञैश्च यस्समाराध्यते द्विजैः ।
ददाति च फलं तेषां तं वन्दे सोमसुन्दरम् ॥ ३ ॥
यं विदित्वा बुधास्सर्वे कर्मबन्धविबज्जिताः ।
लभन्ते परमां मुक्तिं तं वन्दे सोमसुन्दरम् ॥ ४ ॥
देवदेवं यमाराध्य मृकण्डुतनयो मुनिः ।
नित्यत्वमगमत्सद्यस्तं वन्दे सोमसुन्दरम् ॥ ५ ॥
निजनेत्राम्बुजकृतपूजया परितोष्य यम् ।
श्रीपतिर्लभते चक्रं तं बन्दे सोमसुन्दरम् ॥ ६ ॥
येन सृष्टं जगत्सर्वं रक्षितं संहृतं क्रमात् ।
सत्यं विज्ञानमानन्दं तं वन्दे सोम सुन्दरम् ॥ ७ ॥
यस्मै वेदाश्च चत्वारो नमस्यन्ति वपुर्धराः ।
ईशानं सर्वविद्यानां तं वन्दे सोमसुन्दरम् ॥ ८ ॥
यस्मात्परञ्चापरञ्च किञ्चिद्वस्तु न विद्यते ।
ईश्वरं सर्वभूतानां तं वन्दे सोमसुन्दरम् ॥ ९ ॥
यस्य प्रणाममात्रेण सन्ति सर्वाश्च सम्पदः ।
सर्वसिद्धिप्रदं शम्भुं तं वन्दे सोमसुन्दरम् ॥ १० ॥
यस्य दर्शनमात्रेण ब्रह्महत्यादिपातकम् ।
अवश्यं नश्यति क्षिप्रं तं वन्दे सोमसुन्दरम् ॥ ११ ॥
उत्तमाङ्गञ्च चरणं विधिना विष्णुनाऽपि च ।
न दृश्यते यस्य यत्नात् तं वन्दे सोमसुन्दरम् ॥ १२ ॥
त्वया नीपारण्यनाथ त्वदन्यान् समानाहुर्दैवतान् पापिनस्ते ।
तदा शम्भो त्वत्समं दैवतं स्याद् यदा योगो वाजिनो रासभस्य ॥ १३ ॥
अणोरणुस्त्वं महतो महांस्त्वं सर्वात्मभावात्परिपूर्ण एकः ।
त्वयैव शम्भो महिमा त्वदीयो विज्ञायते वक्तुमिमं क्षमः कः ॥ १४ ॥
फलश्रुतिः –
त्वया कृतमिदं स्तोत्रं पठति श्रद्धया तु यः ।
धर्मादिपुरुषार्थांश्च तस्मै दास्याम्यहं ध्रुवम् ॥
इति श्री सोमसुन्दर स्तुतिः संपूर्णम् ॥
॥ ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ॥
இந்த்³ர உவாச –
ஏகம்ʼ ப்³ரஹ்மாத்³விதீயஞ்ச பரிபூர்ண பராத்பரம் ।
இதி யோ கீ³யதே பே³தை³ஸ்தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 1 ॥
ஜ்ஞாத்ருʼஜ்ஞானஜ்ஞேயரூபம்ʼ விஶ்வம்ʼ வ்யாப்ய வ்யவஸ்தி²தம் ।
ஸ்வயம்ʼ ஸர்வைரத்³ருʼஶ்யோ யஸ்தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 2 ॥
அஶ்வமேதா⁴தி³யஜ்ஞைஶ்ச யஸ்ஸமாராத்⁴யதே த்³விஜை꞉ ।
த³தா³தி ச ப²லம்ʼ தேஷாம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 3 ॥
யம்ʼ விதி³த்வா பு³தா⁴ஸ்ஸர்வே கர்மப³ந்த⁴விப³ஜ்ஜிதா꞉ ।
லப⁴ந்தே பரமாம்ʼ முக்திம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 4 ॥
தே³வதே³வம்ʼ யமாராத்⁴ய ம்ருʼகண்டு³தனயோ முனி꞉ ।
நித்யத்வமக³மத்ஸத்³யஸ்தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 5 ॥
நிஜநேத்ராம்பு³ஜக்ருʼதபூஜயா பரிதோஷ்ய யம் ।
ஶ்ரீபதிர்லப⁴தே சக்ரம்ʼ தம்ʼ ப³ந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 6 ॥
யேன ஸ்ருʼஷ்டம்ʼ ஜக³த்ஸர்வம்ʼ ரக்ஷிதம்ʼ ஸம்ʼஹ்ருʼதம்ʼ க்ரமாத் ।
ஸத்யம்ʼ விஜ்ஞானமானந்த³ம்ʼ தம்ʼ வந்தே³ ஸோம ஸுந்த³ரம் ॥ 7 ॥
யஸ்மை வேதா³ஶ்ச சத்வாரோ நமஸ்யந்தி வபுர்த⁴ரா꞉ ।
ஈஶானம்ʼ ஸர்வவித்³யானாம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 8 ॥
யஸ்மாத்பரஞ்சாபரஞ்ச கிஞ்சித்³வஸ்து ந வித்³யதே ।
ஈஶ்வரம்ʼ ஸர்வபூ⁴தானாம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 9 ॥
யஸ்ய ப்ரணாமமாத்ரேண ஸந்தி ஸர்வாஶ்ச ஸம்பத³꞉ ।
ஸர்வஸித்³தி⁴ப்ரத³ம்ʼ ஶம்பு⁴ம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 10 ॥
யஸ்ய த³ர்ஶனமாத்ரேண ப்³ரஹ்மஹத்யாதி³பாதகம் ।
அவஶ்யம்ʼ நஶ்யதி க்ஷிப்ரம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 11 ॥
உத்தமாங்க³ஞ்ச சரணம்ʼ விதி⁴னா விஷ்ணுனா(அ)பி ச ।
ந த்³ருʼஶ்யதே யஸ்ய யத்னாத் தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 12 ॥
த்வயா நீபாரண்யநாத² த்வத³ன்யான் ஸமானாஹுர்தை³வதான் பாபினஸ்தே ।
ததா³ ஶம்போ⁴ த்வத்ஸமம்ʼ தை³வதம்ʼ ஸ்யாத்³ யதா³ யோகோ³ வாஜினோ ராஸப⁴ஸ்ய ॥ 13 ॥
அணோரணுஸ்த்வம்ʼ மஹதோ மஹாம்ʼஸ்த்வம்ʼ ஸர்வாத்மபா⁴வாத்பரிபூர்ண ஏக꞉ ।
த்வயைவ ஶம்போ⁴ மஹிமா த்வதீ³யோ விஜ்ஞாயதே வக்துமிமம்ʼ க்ஷம꞉ க꞉ ॥ 14 ॥
ப²லஶ்ருதி꞉ –
த்வயா க்ருʼதமித³ம்ʼ ஸ்தோத்ரம்ʼ பட²தி ஶ்ரத்³த⁴யா து ய꞉ ।
த⁴ர்மாதி³புருஷார்தா²ம்ʼஶ்ச தஸ்மை தா³ஸ்யாம்யஹம்ʼ த்⁴ருவம் ॥
இதி ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ஸம்பூர்ணம் ॥
|| ŚRĪ SOMASUNDARA STUTIḤ ||
indra uvāca –
ekaṃ brahmādvitīyañca paripūrṇa parātparam ।
iti yo gīyate bedaistaṃ vande somasundaram ॥ 1 ॥
jñātṛjñānajñeyarūpaṃ viśvaṃ vyāpya vyavasthitam ।
svayaṃ sarvairadṛśyo yastaṃ vande somasundaram ॥ 2 ॥
aśvamedhādiyajñaiśca yassamārādhyate dvijaiḥ ।
dadāti ca phalaṃ teṣāṃ taṃ vande somasundaram ॥ 3 ॥
yaṃ viditvā budhāssarve karmabandhavibajjitāḥ ।
labhante paramāṃ muktiṃ taṃ vande somasundaram ॥ 4 ॥
devadevaṃ yamārādhya mṛkaṇḍutanayo muniḥ ।
nityatvamagamatsadyastaṃ vande somasundaram ॥ 5 ॥
nijanetrāmbujakṛtapūjayā paritoṣya yam ।
śrīpatirlabhate cakraṃ taṃ bande somasundaram ॥ 6 ॥
yena sṛṣṭaṃ jagatsarvaṃ rakṣitaṃ saṃhṛtaṃ kramāt ।
satyaṃ vijñānamānandaṃ taṃ vande soma sundaram ॥ 7 ॥
yasmai vedāśca catvāro namasyanti vapurdharāḥ ।
īśānaṃ sarvavidyānāṃ taṃ vande somasundaram ॥ 8 ॥
yasmātparañcāparañca kiñcidvastu na vidyate ।
īśvaraṃ sarvabhūtānāṃ taṃ vande somasundaram ॥ 9 ॥
yasya praṇāmamātreṇa santi sarvāśca sampadaḥ ।
sarvasiddhipradaṃ śambhuṃ taṃ vande somasundaram ॥ 10 ॥
yasya darśanamātreṇa brahmahatyādipātakam ।
avaśyaṃ naśyati kṣipraṃ taṃ vande somasundaram ॥ 11 ॥
uttamāṅgañca caraṇaṃ vidhinā viṣṇunā'pi ca ।
na dṛśyate yasya yatnāt taṃ vande somasundaram ॥ 12 ॥
tvayā nīpāraṇyanātha tvadanyān samānāhurdaivatān pāpinaste ।
tadā śambho tvatsamaṃ daivataṃ syād yadā yogo vājino rāsabhasya ॥ 13 ॥
aṇoraṇustvaṃ mahato mahāṃstvaṃ sarvātmabhāvātparipūrṇa ekaḥ ।
tvayaiva śambho mahimā tvadīyo vijñāyate vaktumimaṃ kṣamaḥ kaḥ ॥ 14 ॥
phalaśrutiḥ –
tvayā kṛtamidaṃ stotraṃ paṭhati śraddhayā tu yaḥ ।
dharmādipuruṣārthāṃśca tasmai dāsyāmyahaṃ dhruvam ॥
No comments:
Post a Comment