Friday, 13 April 2018

Sri Margabandhu Stotram - Sloka 6 ( PHALAŚRUTI )

॥ श्री मार्गबन्धु स्तोत्रम् ॥
॥ ŚRĪ MĀRGABANDHU STOTRAM ॥
॥ ஶ்ரீ மார்க³ப³ந்து⁴ ஸ்தோத்ரம் ॥

फलश्रुतिः :-

अप्पय्ययज्वेन्द्र गीतं स्तोत्रराजं पठेद्यस्तु भक्त्या प्रयाणे ।
तस्यार्थसिद्धिं विधत्ते मार्गमध्येऽभयं चाशुतोषो महेशः ॥ ६ ॥

ப²லஶ்ருதி​: :-

அப்பய்யயஜ்வேந்த்³ர கீ³தம்ʼ ஸ்தோத்ரராஜம்ʼ படே²த்³யஸ்து ப⁴க்த்யா ப்ரயாணே |
தஸ்யார்த²ஸித்³தி⁴ம்ʼ வித⁴த்தே மார்க³மத்⁴யே(அ)ப⁴யம்ʼ சாஶுதோஷோ மஹேஶ​: || 6 ||

PHALAŚRUTIḤ :-

appayyayajvendra gītaṃ stotrarājaṃ paṭhedyastu bhaktyā prayāṇe ।
tasyārthasiddhiṃ vidhatte mārgamadhye'bhayaṃ cāśutoṣo maheśaḥ ॥ 6 ॥

பிரதி பத அர்த்தம் :

यः - ய​: - யார் ஒருவர் ,

अप्पय्य-यज्वेन्द्र - அப்பய்ய-யஜ்வேந்த்³ர - சிறந்த யஜ்ஞங்களை செய்து வைப்பவரான அப்பய்ய தீக்ஷிதர் அவர்களால்,

गीतं - கீ³தம்ʼ - மொழியப்பெற்ற கீதமான ,

स्तोत्र-राजं - ஸ்தோத்ர-ராஜம்ʼ - சிறந்த ஸ்தோத்ரத்தை,

भक्त्या तु - ப⁴க்த்யா து - பக்தியுடன்,

प्रयाणे - ப்ரயாணே - பயணத்தின்போது,

पठेत् - படே²த் - படிக்கின்றாரோ,

तस्य - தஸ்ய - அவரிடத்தில்,

आशुतोषः महेशः - ஆஶுதோஷ​: மஹேஶ​: - எளிதில் திருப்தியடையும் மஹேசர்,

अर्थ-सिद्धिं - அர்த²-ஸித்³தி⁴ம்ʼ - வேண்டுவனவற்றையும் ,

मार्गमध्ये - மார்க³மத்⁴யே - செல்லும் வழியில்,

अभयं च - அப⁴யம்ʼ ச - அபயத்தையும் ,

विधत्ते - வித⁴த்தே - அடைவிக்கிறார்.

பொருள் :

சிறந்த யஜ்ஞங்களை செய்து வைப்பவரான அப்பய்ய தீக்ஷிதர் அவர்களால், மொழியப்பெற்ற கீதமான இந்த சிறந்த ஸ்தோத்ரத்தை, யார் ஒருவர் பயணத்தின்போது பக்தியுடன் படிக்கின்றாரோ, அவரிடத்தில் எளிதில் திருப்தியடையும் மஹேசர், அவனுக்கு வேண்டுவனவற்றை அடைவிக்கிறார். மேலும் செல்லும் வழியில், ( வாழும் வாழ்க்கையில் ) அபயத்தையும் ( பயமற்ற நிலை ) அளிக்கிறார். 6

Meaning :

One who reads the poem with devotion during a journey will be successful and attain his goal or wishes. In addition he will feel secure and be protected by the Lord on the way. 6

பதம் பிரிப்பு :

अप्पय्य-यज्वेन्द्र गीतं स्तोत्रराजं पठेत् यः तु भक्त्या प्रयाणे ।
तस्य अर्थसिद्धिं विधत्ते मार्गमध्ये अभयं च आशुतोषः महेशः ॥ ६ ॥

அப்பய்ய-யஜ்வேந்த்³ர கீ³தம்ʼ ஸ்தோத்ரராஜம்ʼ படே²த் ய​: து ப⁴க்த்யா ப்ரயாணே |
தஸ்ய அர்த²ஸித்³தி⁴ம்ʼ வித⁴த்தே மார்க³மத்⁴யே அப⁴யம்ʼ ச ஆஶுதோஷ​: மஹேஶ​: || 6 ||

appayya-yajvendra gītaṃ stotrarājaṃ paṭhet yaḥ tu bhaktyā prayāṇe ।
tasya arthasiddhiṃ vidhatte mārgamadhye abhayaṃ ca āśutoṣaḥ maheśaḥ ॥ 6 ॥

விளக்கவுரை :

அப்பய்ய தீக்ஷிதர் என்பார் அனேகவிதமான யஜ்ஞங்களை நடத்தியிருக்கிறார். யஜ்ஞ பலன்கள் கிடைப்பது உண்மையே என்று நிரூபித்தும் காட்டியிருக்கிறார். ஆகவே யஜ்வேந்திரர் என்று கூறுவது உசிதம் தான். மார்கபந்தீச்வரர் மேல் பாடப்பட்டுள்ள இந்த சிறந்த கருத்துகள் அடங்கிய இந்த ஸ்தோத்ரத்தை யாரொருவர் , பக்தியுடன் பாராயணம் பண்ணுகிறார்களோ, அவர்களுக்கு வழித்துணையாகயிருந்து அவர்கள் வேண்டியவற்றை இடையூறுகளின்றி நிறைவேற்றித் தருகிறார். ரோகம், பகைமை, அதர்மம், வறுமை, களவு, அரசு, முதுமை, மரண பயம், நரக பயம், ஸம்ஸார பயம், அஞ்ஞான பயம் முதலான ஸகலவித பயங்களிலிருந்தும், அபயம் அளித்து ரக்ஷிக்கிறார். அதுவும் இந்த ஐந்தே ச்லோகங்களில். எனவே தான் ஆசுதோஷர் - எளிதில் திருப்தி அடைபவர் என்று அழைக்கப்படுகிறார் போலும்.

शंभो महादेव देव - शिव
शंभो महादेव देवेश शंभो -
शंभो महादेव देव ॥

ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ - ஶிவ
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴ -
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ ||
Sri Margabandhu Stotram - Sloka 5

॥ श्री मार्गबन्धु स्तोत्रम् ॥
॥ ŚRĪ MĀRGABANDHU STOTRAM ॥
॥ ஶ்ரீ மார்க³ப³ந்து⁴ ஸ்தோத்ரம் ॥

मन्दारभूतेरुदारं मन्दरागेन्द्रसारं महागौर्यदूरम्।
सिन्दूरदूरप्रचारं सिन्धुराजातिधीरं भजे मार्गबन्धुम्॥५॥

மந்தா³ரபூ⁴தேருதா³ரம்ʼ மந்த³ராகே³ந்த்³ரஸாரம்ʼ மஹாகௌ³ர்யதூ³ரம்|
ஸிந்தூ³ரதூ³ரப்ரசாரம்ʼ ஸிந்து⁴ராஜாதிதீ⁴ரம்ʼ ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம்|| 5 ||

mandārabhūterudāraṃ mandarāgendrasāraṃ mahāgauryadūram।
sindūradūrapracāraṃ sindhurājātidhīraṃ bhaje mārgabandhum॥5॥

பிரதி பத அர்த்தம் :

मन्दार - மந்தா³ர - மந்தாரத்தின் ( தேவலோகத்து மரம் )

भूतेः - பூ⁴தே​: - மஹிமையைவிட

उदारं - உதா³ரம்ʼ - மஹிமை ( கொடைத்தன்மை ) வாய்ந்தவரை

मन्दर - மந்த³ர - மந்தரமாகிய

अग-इन्द्र - அக³-இந்த்³ர - சிறந்த மலையின்

सारं - ஸாரம்ʼ - உறுதித்தன்மையாக இருப்பவரை

महागौरि - மஹாகௌ³ரி - மஹாகௌரியை

अदूरम् - அதூ³ரம் - விட்டுப் பிரியாதவரை

दूर-प्रचारं - தூ³ர-ப்ரசாரம்ʼ - எங்கும் பரவுகின்ற

सिन्दूर - ஸிந்தூ³ர - சிவந்த காந்தியை உடையவரை

सिन्धुराज - ஸிந்து⁴ராஜ - சமுத்திரராஜனை விட

अति-धीरं - அதி-தீ⁴ரம்ʼ - சிறந்த தீரரானவரை

मार्गबन्धुम् - மார்க³ப³ந்து⁴ம் - மார்கபந்துவை

भजे - ப⁴ஜே - வழிபடுகிறேன்.

பொருள் :

மந்தாரத்தின் ( தேவலோகத்து மரம் ) மஹிமையைவிட மஹிமை ( கொடைத்தன்மை )வாய்ந்தவரை, மந்தரமாகிய சிறந்த மலையின் உறுதித்தன்மையாக இருப்பவரை, மஹாகௌரியை விட்டுப் பிரியாதவரை, எங்கும் பரவுகின்ற சிவந்த காந்தியை உடையவரை, சமுத்திரராஜனை விட சிறந்த தீரரானவரை மார்கபந்துவை வழிபடுகிறேன். 5

Meaning :

I worship Lord Margabandhu who is more generous than the divine Mandara tree, who is stronger than the Mandara mountain, who is close to the great Gauri, who is of crimson colour and who is more profound than the mighty ocean. 5

பதம் பிரிப்பு :

मन्दार-भूतेः उदारं, मन्दर अग-इन्द्र सारं, महागौरि अदूरम्।
सिन्दूर दूर-प्रचारं, सिन्धुराज अति-धीरं, भजे मार्गबन्धुम्॥५॥

மந்தா³ர-பூ⁴தே​: உதா³ரம்ʼ, மந்த³ர அக³-இந்த்³ர ஸாரம்ʼ, மஹாகௌ³ரி அதூ³ரம்|
ஸிந்தூ³ர தூ³ர-ப்ரசாரம்ʼ, ஸிந்து⁴ராஜ அதி-தீ⁴ரம்ʼ, ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம்|| 5 ||

mandāra-bhūteḥ udāraṃ, mandara aga-indra sāraṃ, mahāgauri adūram।
sindūra dūra-pracāraṃ, sindhurāja ati-dhīraṃ, bhaje mārgabandhum॥ 5 ॥

விளக்கவுரை :

1. மந்தா³ர-பூ⁴தே​: உதா³ரம்ʼ :-

மந்தார தருவின் மஹிமையை விடவும் மஹிமை வாய்ந்தவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

மந்தார தரு மரம் என்பது தேவலோகத்திலுள்ள ஐந்து மரங்களில் ஒன்று. கற்பகத் தருவைப் போல் கேட்டதைத் தரும் மரம். அது எவ்வளவு கொடைத்தன்மையுடையதோ அதனினும் கொடைத்தன்மை உடையவர் பரமேச்வரர். தன் பக்தர்கள் எதைக் கேட்டாலும் உடன் அருள்பவர். பார்வதி தேவிக்கு மிகவும் பிரியமானதான தங்க நகரத்தை , கேகஸியின் உந்துதலால் ரிஷி விசர்வா பரமேச்வரரிடம் கேட்க உடன் தானம் தந்தவர், ஈச்வரர் . பஸ்மாஸுரன் கேட்டதும் வரம் தந்தவர்.

மற்றுமொரு கருத்து - பொதுவாக மந்தார தரு, கல்பக விருக்ஷம் போன்றவை தன் சன்னிதியில் வைத்து ஏதாவது ஒன்றை வேண்டும் என்று நினைத்தாலோ அல்லது வாய்திறந்து கேட்டாலே தந்துவிடும்.

ஒருவர் காட்டுப்பாதையில் சென்று கொண்டிருந்தார். சற்றே கால் நோக, ஒரு மரத்தடியில் இளைப்பாறினார். மிகவும் பசியும் தாகமும் ஏற்பட, சாப்பிட நல்ல உணவு கிடைத்தால் சாப்பிடலாமே என்று நினைக்க, உடன் சாப்பாடு தோன்றியது . அதிசயமும் சந்தோஷமும் உண்டானது. நன்கு சாப்பிட்டார். பின் குடிக்க தண்ணீர் கிடைத்தால் பரவாயில்லையே என்று நினைக்க தண்ணீர் தோன்றியது . அவர் அம்மரத்தை கேட்டதைத் தரும் விருக்ஷம் என்று அறிந்து கொண்டார். தேவையான எல்லாவற்றையும் கேட்டுக்கொள்வோம் என்று எண்ணினார். உண்ட களைப்பு தீர முதலில் உறங்குவோம் என்று தோன்ற, நல்ல மெத்தையிடன் கூடிய கட்டில் வேண்டும் என்று எண்ணினார். கட்டில் தோன்றிற்று. நன்கு படுத்துக் கொண்டார். பின் திடீரென்று விழித்தார். நாம் படுத்திருக்கும் போது புலி வந்தால் என்ன செய்வது என்று யோசிக்கும்போதே புலியும் வந்துவிட்டது . உடன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டார்.

இதிலிருந்து மந்தார தரு கேட்டதைக் கொடுக்கும் எனத் தெரிகிறது, அது நன்மையானாலும் சரி, தீமையானாலும் சரி.
ஒரு வேளை, நல்லதை மட்டுமே நினைப்பிக்கச் செய்து , நிறைவேற்றியும் தரும் விருக்ஷம் இருக்கிறது என்றால் இன்னும் சிறப்பு தானே. அத்தகையவர் பகவானே ! சிவபெருமானே ! என்பது இங்கு குறிக்கப்படுகிறது.

அப்படிப்பட்ட மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

2. மந்த³ர அக³-இந்த்³ர ஸாரம்ʼ :-

உறுதியான மலைகளுள் சிறந்த மந்தர மலையின் உறுதித்தன்மையானவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

மந்தர மலை, பாற்கடலைக் கடையும்போது மத்தாகப் பயன்படுத்தப்பட்டது. அதிலிருந்தே அதன் உறுதியை, சக்தியை அறியலாம். ஆனால் அதன் அப்படி அது உறுதியாக இருக்கிறது என்றால் , அதற்கு உறுதித்தன்மை இருப்பதாகப் பொருள். அந்த உறுதித்தன்மை தான் ஸாரம். அந்த ஸாரம் ஈச்வரரே. பலவான்களுடைய பலமாக நான் இருக்கின்றேன் என்று பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறிய கருத்தை ஒப்பிடலாம்.

அப்படிப்பட்ட மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

3. மஹாகௌ³ரி அதூ³ரம் :-

சக்திமயமான கௌரியை விட்டுப்பிரியாதவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

கௌரி என்றால் பார்வதி. மஹா கௌரி என்றால் மஹத் தத்வமாகிய கௌரி என்று கொள்ளலாம். ஈச்வரர் நிர்குண பரப்ரம்மம். அவருக்கு செயல்கள் எதுவும் கிடையாது. அவர் செயல்பட்டதாக தெரிய, அவருடயதேயான இயக்க சக்தி வெளிப்படையாக வேண்டும் . அந்த இயக்க சக்தியைத் தான் மாயை என்றும் , பார்வதி, சக்தி , கௌரி என்றெல்லாம் அறிகிறோம். சிவ தத்வத்திற்கு விகாரங்கள் இல்லை. சக்தி தத்வத்திற்கு தனியான இருப்புநிலை இல்லை. சிவ சக்தி தத்வங்கள் ஒன்றோடொன்று கலந்து இருக்கவே இப்பிரபஞ்சமே இருப்பதாகத் தெரிகிறது . ஆக ஈச்வரரும் சக்தியும் விட்டுப் பிரியாதவர்கள். அதையே அதூரம் மஹா-கௌரி- அதூரம் என்ற சொற்றொடர் மூலம் குறிக்கப்படுகிறது. அதூரம் என்றால் தூரமாக இல்லாத , அதாவது அருகில் இருக்கின்ற என்று பொருள். இங்கு விட்டுப்பிரியாத, உடனுறை என்று பொருள்.
அப்படி சக்தியை விட்டுப்பிரியாத மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

4. ஸிந்தூ³ர தூ³ர-ப்ரசாரம்ʼ :-

எங்கும் பரவும் செந்தூரக் காந்தியுடவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

சிந்தூர என்றால் சிவப்பான செந்தூரம் என்று பொருள். உதயசூரியனின் நிறம் என்பது இன்னும் ஏற்றதாக இருக்கும். அந்த நிறம் வெகு தொலைவு வரை தெரியக்கூடியது . ஸ்ரீ ருத்ரத்தில் கூறியபடி ,

" असौ यस्ताम्रो अरुण उत बभ्रुः सुमङ्गलः । " - " அஸௌ யஸ்தாம்ரோ அருண உத ப³ப்⁴ரு​: ஸுமங்க³ல​: | "

ய​: = ( முன் மந்திரங்களால் கூறப்பட்ட ) பரமேச்வரனே , தாம்ர​: = உதய காலத்தில் மிகவும் சிவப்பாயும், அருண​: = உதயமானவுடன் சொற்பசிவப்பாயும், உத = மேலும் , ப³ப்⁴ரு​: = சற்று நேரத்த்திற்குப் பின் பொன்னிறமாயும், ஸுமங்க³ல​: = மிகவும் மங்களகரமாயுமுள்ள, அஸௌ = நமக்கெதிரில் நேரே தோன்றும் சூரியனாக விளங்குகின்றார்.

அந்த வர்ணமே இங்கும் குறிப்பதாகக் கொள்க. இதன் வெகுதூரம் பரவுவதான தன்மையே தூரப்ரசாரம் என்று குறிக்கப்படுகிறது. ஜ்யோதிமயமான பரப்ரம்மத்தின் தேஜஸ் எல்லாவற்றிலும் இருப்பதை உணர்த்துவதாக தெரிகிறது .

அப்படிப்பட்ட காந்தியுடைய மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

5. ஸிந்து⁴ராஜ அதி-தீ⁴ரம்ʼ :-

சமுத்திரத்தை விட அதிக தீரனானவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

சிந்துராஜன் என்றால் கடலரசன் என்று பொருள். பெரிய சமுத்திரம் என்று கொள்ள வேண்டியது . சமுத்திரத்தில் அநேக அலைகள் தோன்றி , பரவி, மறையும். அதனால் அதன் அளவில் மாறற்றம் தெரிவதில்லை . அதில் எத
அதேபோல் சிருஷ்ட்யாதி தொழில்களை ஈச்வரர் செய்தாலும் அதனால் தான் எத்தகைய மாற்றத்தையும் அடைவதில்லை.
தீரன் என்றால் நிறைய சலிப்பிக்கக்கூடிய சந்தர்ப சூழ்நிலைகளிலும் சலிக்காதவன் என்றும் , ஸுக துக்கங்களை ஸமமாக பாவிப்பவன் என்றும் பொருள். சமுத்திரன் தீரனைப் போல் இருக்கிறது. ஈச்வரரோ சமுத்திரத்தைக்க காட்டிலும் பெரிய தீரராக இருக்கிறார் . ஏனெனில் உலகில் எல்லா செயல்பாடுகளுக்கும் தானே காரணமாய் இருந்தபோதிலும் , தான் எதிலும் பற்றில்லாமல் நிர்விகாரமாய், நிச்சலமாய், நிரஹங்காரத்துடன் இருக்கிறாரே., யாரால் இயலும் !?!

அப்படிப்பட்ட தீரரான மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

ப⁴ஜே ( மார்க³ப³ந்து⁴ம் ) :

அப்படிப்பட்ட மார்க்கபந்துவை வழிபடுவோம்.

மார்க்கபந்து என்றால் வழியில் துணையாக இருப்பவர் என்று பொருள்.

பஜே என்றால் , வழிபடுவோம், நினைப்போம், அறிவோம், அன்பு செலுத்துவோம் என்ற பல பொருள்கள் கிடைக்கும். முதலில் பகவானைத் தேடுவோம், பின் அவரை இப்படிப்பட்டவர் என்று அறிவோம், பின் அவரையே நினைப்போம், வழிபடுவோம் பின் அன்பே சிவம் என்று அவர்பால் அன்பு செலுத்தி சிவமாவோம்.

" ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் " என்பதை ஒவ்வொரு வாக்கியத்துடனும் தனியே சேர்த்தும் பொருள் கொள்ளலாம்.

शंभो महादेव देव - शिव
शंभो महादेव देवेश शंभो -
शंभो महादेव देव ॥

ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ - ஶிவ
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴ -
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ ||
Sri Margabandhu Stotram - Sloka 4

॥ श्री मार्गबन्धु स्तोत्रम् ॥
॥ ŚRĪ MĀRGABANDHU STOTRAM ॥
॥ ஶ்ரீ மார்க³ப³ந்து⁴ ஸ்தோத்ரம் ॥

कन्दर्पदर्पघ्नमीशं
कालकण्ठं महेशं महाव्योमकेशम् ।
कुन्दाभदन्तं सुरेशं
कोटिसूर्यप्रकाशं भजे मार्गबन्धुम् ॥ ४ ॥

கந்த³ர்பத³ர்பக்⁴னமீஶம்ʼ
காலகண்ட²ம்ʼ மஹேஶம்ʼ மஹாவ்யோமகேஶம் |
குந்தா³ப⁴த³ந்தம்ʼ ஸுரேஶம்ʼ
கோடிஸூர்யப்ரகாஶம்ʼ ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் || 4 ||

kandarpadarpaghnamīśaṃ
kālakaṇṭhaṃ maheśaṃ mahāvyomakeśam ।
kundābhadantaṃ sureśaṃ
koṭisūryaprakāśaṃ bhaje mārgabandhum ॥ 4 ॥

பிரதி பத அர்த்தம் :

कन्दर्प - கந்த³ர்ப - மன்மதனின்

दर्पघ्नं - த³ர்பக்⁴னம்ʼ - கர்வத்தை அழித்தவரை

ईशं - ஈஶம்ʼ - அனைத்தையும் ஆள்பவரை

कालकण्ठं - காலகண்ட²ம்ʼ - கறுப்பு நிறமான கழுத்தை உடையவரை,

महेशं - மஹேஶம்ʼ - ஆள்பவர்க்கெல்லாம் மேலான ஆள்பவரை

महा व्योम केशं - மஹா வ்யோம கேஶம் - பெரிய ஆகாயம் போன்ற கேசத்தை உடையவரை

कुन्दाभ - குந்தா³ப⁴ - மல்லிகைப்பூவை ஒத்த

दन्तं - த³ந்தம்ʼ - பற்களைக் கொண்டவரை

सुरेशं - ஸுரேஶம்ʼ - தேவர்களை ஆள்பவரை

कोटिसूर्य - கோடிஸூர்ய - கோடி ஸூர்ய

प्रकाशं - ப்ரகாஶம்ʼ - ப்ரகாசத்திற்கு இணையாக ஒளிர்பவரை

मार्गबन्धुं - மார்க³ப³ந்து⁴ம் - மார்கபந்துவை

भजे - ப⁴ஜே - வழிபடுகிறேன்.

பொருள் :

மன்மதனின் கர்வத்தை அழித்தவரை, அனைத்தையும் ஆள்பவரை, கறுப்பு நிறமான கழுத்தை உடையவரை, ஆள்பவர்க்கெல்லாம் மேலான ஆள்பவரை, பெரிய ஆகாயம் போன்ற கேசத்தை உடையவரை, மல்லிகைப்பூவின் வெண்மையை ஒத்த நிறமுடைய பற்களைக் கொண்டவரை, தேவர்களை ஆள்பவரை, கோடி ஸூர்ய ப்ரகாசத்திற்கு இணையாக ஒளிர்பவரை, மார்க்கபந்தீச்வரரை வழிபடுகிறேன். 4

Meaning :-

I worship Lord Margabandhu who removed Manmatha's pride, who has kept poison in His neck, the great Lord who is more extensive than the space, whose teeth have the sheen of the jasmine flower, who is the Lord of the gods and who shines like millions of suns. 4

பதம் பிரிப்பு :

कन्दर्प-दर्पघ्नं ईशं
कालकण्ठं महा-ईशं महा-व्योम केशम् ।
कुन्द-आभ-दन्तं सुर-ईशं
कोटि-सूर्य प्रकाशं भजे मार्गबन्धुम् ॥ ४ ॥

கந்த³ர்ப-த³ர்பக்⁴னம்ʼ ஈஶம்ʼ
காலகண்ட²ம்ʼ மஹா-ஈஶம்ʼ மஹா-வ்யோம கேஶம் |
குந்த³-ஆப⁴-த³ந்தம்ʼ ஸுர-ஈஶம்ʼ
கோடி-ஸூர்ய ப்ரகாஶம்ʼ ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் || 4 ||

விளக்கவுரை :

1. கந்த³ர்ப-த³ர்பக்⁴னம்ʼ :-

மன்மதனின் கர்வத்தை அழித்தவரை / திருத்தியவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

காமத்தால் பீடிக்கப்படாதவர்களே இல்லை என்று கர்வம் கொண்டிருந்தானாம் மன்மதன். ஆனால் சமாதியிலிருந்த அதாவது தன் ஸ்வரூப ஆனந்தத்திலிருந்த ஈச்வரரை பாதிக்காமல், காமதஹனமே ஏற்பட்டுவிட்டது. அதாவது தன் ஸ்வரூப ஆனந்தத்தில் நிலைபெற்றவர்களை, உலகியல் சார்ந்த ஆசைகள் , இன்பத்திற்கான வேட்கைகள் எந்த பாதிப்பும் ஏற்டுவதில்லை என்பது தெளிவு.

தன் அடியார்களையும் தன்னைப் போல் திருத்திடும் மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

2. ஈஶம்ʼ :-

அனைத்தையும் ஆள்பவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

தான் படைத்த அனைத்திலும் தானே அந்தர்யாமியாய் இருந்து ஆட்சி செலுத்துபவரை மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

3. காலகண்ட²ம்ʼ :-

கருநீல / கறுப்பு நிறமான கழுத்தை ( தொண்டையை ) உடையவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

தேவர்களும் அஸுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது ஆதியில் தோன்றிய விஷம் வெளிவர, அதைக்கண்ட அனைவரும் பீதியடைந்து பயந்து ஓட, அவர்களின் மீது உண்டான கருணையின் காரணமாக, " பயப்படாதீர்கள் " என்று கூறி அந்த விஷத்தைத் தான் எடுத்துப் பருகிட, அந்த விஷம் உதரத்தினுள் செல்லாதிருக்க வேண்டி , உமாதேவி தன் கரத்தால் ஈசனின் கழுத்தைப் பிடிக்க, விஷம் தொண்டையிலேயே நின்று அதன் காரணமாக கழுத்து கருநீலநிறமாக மாறியதால் காலகண்டர் என்ற பெயர் ஏற்பட்டது.

அப்படிப்பட்ட கருணாமூர்த்தியான மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

4. மஹா-ஈஶம்ʼ :-

ஆள்பவர்க்கெல்லாம் மேலான ஆள்பவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

ஒரு பெரும் நிறுவனத்தை நிறுவியவர், பலதரப்பட்ட வேலைகள்நடக்கவேண்டி பல வேலையாட்களை நியமிக்கிறார், தானே நேரடியாக எல்லா வேலைகளையும் செய்வதில்லை . ஆனால் அவர் ஆணைப்படி தான் நடக்கிறது . அதேபோல் இந்திரன் , வருணன், அக்னிதேவன் முதலான பலரை பல செயல்களுக்காக வேண்டி ஈச்வரர் நியமிக்கிறார். ஆனால் அவர்களையும் ஆள்பவராகவம், தனக்கு மேல் ஆள்பவர் யாரும் இல்லாதவர் என்பதாலும் மஹேசர் எனப்படுகிறார் .

அப்படி அனைத்திற்கும் மேலான ஆள்பவரை மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

5. மஹா-வ்யோம கேஶம் :-

பெரிய அல்லது சிறந்த ஆகாயம் போன்ற கேசத்தை உடையவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

பகீரதனின் தவத்தால் கங்கை பூமிக்கு வரும்போது , அதன் வேகத்தைத் தாங்க, தன் அகன்று விரிந்த ஜடை தலையைக் காட்டினார். அப்போது முடியப்பட்டிருந்த ஜடை அவிழ்ந்தநிலையில் இருந்தது. அப்போது அந்த கேசங்கள் அலையலையாக ஆகாயம் போன்று விரிந்திருந்தது. எனவே மஹா வ்யோம கேசர் எனப்படுகிறார்
மேலும் ஆகாயத்திலிருந்து மழை பெய்யும், ஓயும். ஆனால் ஓயாது ஓடும் கங்கையைத் தந்ததால் மஹா வ்யோம கேசர் என்றும் கொள்ளலாம் . மஹத் - பெரிய / சிறந்த

அப்படிப்பட்ட மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

6. குந்த³-ஆப⁴-த³ந்தம்ʼ :-

மல்லிகைப்பூவின் வெண்மையை ஒத்த நிறமுடைய பற்களைக் கொண்டவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )


வேதங்கள், பகவந்நாமம் இவைகளை ஓதுபவர்களின் வாயில் அமைந்துள்ள பற்களே பெருமைக்குரியது என்றால் , வேதநாயகனின் பற்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ.

அப்படிப்பட்ட மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

7. ஸுர-ஈஶம்ʼ :-

இந்திரன் முதலான தேவர்களை ஆள்பவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

தனக்கு சமமாக யாரும் இல்லாதவர்.

அப்படிப்பட்ட மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

8. கோடி-ஸூர்ய ப்ரகாஶம்ʼ :-

கோடி ஸூர்ய ப்ரகாசத்திற்கு இணையாக ஒளிர்பவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

ஒரு ஸூர்யனுடைய ப்ரகாசத்தையே நம் கண்கொண்டு காண இயலாது . கோடி ஸூர்யர்களின் ஒளியை நினைக்கவே முடியாது . மேலும் இங்கு கோடி என்றால் எண்ணற்ற என்றே கொள்வது உசிதம். இன்னும் விசாரம் செய்தால் கோடி ஸூர்யர்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தாலும் அதைக் காண்பவனது கண்ணில் உள்ள ஒளியினால் மட்டுமே காணமுடியும். அதுவே ஆத்மஜ்யோதி.

அந்த பரஞ்சோதி ஆனவரை மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் :

அப்படிப்பட்ட மார்க்கபந்துவை வழிபடுவோம்.

மார்க்கபந்து என்றால் வழியில் துணையாக இருப்பவர் என்று பொருள்.

பஜே என்றால் , வழிபடுவோம், நினைப்போம், அறிவோம், அன்பு செலுத்துவோம் என்ற பல பொருள்கள் கிடைக்கும். முதலில் பகவானைத் தேடுவோம், பின் அவரை இப்படிப்பட்டவர் என்று அறிவோம், பின் அவரையே நினைப்போம், வழிபடுவோம் பின் அன்பே சிவம் என்று அவர்பால் அன்பு செலுத்தி சிவமாவோம்.

" ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் " என்பதை ஒவ்வொரு வாக்கியத்துடனும் தனியே சேர்த்தும் பொருள் கொள்ளலாம்.

शंभो महादेव देव - शिव
शंभो महादेव देवेश शंभो -
शंभो महादेव देव ॥

ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ - ஶிவ
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴ -
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ ||
Sri Margabandhu Stotram - Sloka 3

॥ श्री मार्गबन्धु स्तोत्रम् ॥
॥ ŚRĪ MĀRGABANDHU STOTRAM ॥
॥ ஶ்ரீ மார்க³ப³ந்து⁴ ஸ்தோத்ரம் ॥

नित्यं चिदानन्दरूपं 
निह्नुताशेषलोकेशवैरिप्रतापम् ।
कार्तस्वरागेन्द्रचापं कृत्तिवासं
भजे दिव्यसन्मार्गबन्धुम् ॥ ३ ॥

நித்யம்ʼ சிதா³னந்த³ரூபம்ʼ
நிஹ்னுதாஶேஷலோகேஶவைரிப்ரதாபம் |
கார்தஸ்வராகே³ந்த்³ரசாபம்ʼ க்ருʼத்திவாஸம்ʼ
ப⁴ஜே தி³வ்யஸன்மார்க³ப³ந்து⁴ம் || 3 ||

nityaṃ cidānandarūpaṃ
nihnutāśeṣalokeśavairipratāpam ।
kārtasvarāgendracāpaṃ kṛttivāsaṃ
bhaje divyasanmārgabandhum ॥ 3 ॥

பிரதி பத அர்த்தம் :

नित्यं चित्-आनन्द-रूपं - நித்யம்ʼ சித்-ஆனந்த³-ரூபம்ʼ - நிலைத்த ஞான அனுபவமே வடிவாய் இருக்கின்றவரை,

लोकेश-वैरि - லோகேஶ-வைரி - லோகேச்வரனின் ( ஜீவாத்மா ) எதிரிகளின்

प्रतापम् - ப்ரதாபம் - கொட்டத்தை

अशेष - அஶேஷ - மிச்சமில்லாமல்

निह्नुत - நிஹ்னுத - ஒழித்துவிட்டவரை,

कार्तस्वर - கார்தஸ்வர - பொன்னாலான

अग-इन्द्र - அக³-இந்த்³ர - மலையரசனை ( மேரு மலை )

चापं - சாபம்ʼ - வில்லாக உடையவரை,

कृत्तिवासं - க்ருʼத்திவாஸம்ʼ - ( புலி, யானை முதலிய ) மிருகங்களின் தோலை உடுத்தியவரை,

दिव्य - தி³வ்ய - புனிதமான

सन्मार्ग - ஸன்மார்க³ - பகவானை அடையும் வழிக்குத்

बन्धुम् - ப³ந்து⁴ம் - துணை நிற்பவரை ( மார்க்கபந்தீச்வரரை )

भजे - ப⁴ஜே - வழிபடுகிறேன்.

பொருள் :

நிலைத்த ஞான அனுபவமே வடிவாய் இருக்கின்றவரை, லோகேச்வரனின் ( ஜீவாத்மா ) எதிரிகளின் கொட்டத்தை மிச்சமில்லாமல் ஒழித்துவிட்டவரை, பொன்னாலான மலையரசனை ( மேரு மலை ) வில்லாக உடையவரை, ( புலி, யானை முதலிய ) மிருகங்களின் தோலை உடுத்தியவரை, பகவானை அடையும் புனிதமான வழிக்குத் துணை நிற்பவரை மார்க்கபந்தீச்வரரை வழிபடுகிறேன். 3

Meaning :

I worship Lord Margabandhu who is eternal, of the form of consciousness and bliss, who curbed the pride of Ravana, who used Meru the golden mountain as a bow, who wears the bark of a tree and skins and who is a companion to those who choose to tread the spiritual path leading to liberation. 3

பதம் பிரிப்பு :

नित्यं चित्-आनन्द-रूपं
निह्नुत अशेष लोकेश-वैरि प्रतापम् ।
कार्तस्वर अग-इन्द्र चापं कृत्तिवासं
भजे दिव्य सन्मार्ग बन्धुम् ॥ ३ ॥

நித்யம்ʼ சித்-ஆனந்த³-ரூபம்ʼ
நிஹ்னுத அஶேஷ லோகேஶ-வைரி ப்ரதாபம் |
கார்தஸ்வர அக³-இந்த்³ர சாபம்ʼ க்ருʼத்திவாஸம்ʼ
ப⁴ஜே தி³வ்ய ஸன்மார்க³ ப³ந்து⁴ம் || 3 ||

விளக்கவுரை :

1. நித்யம்ʼ சித்-ஆனந்த³-ரூபம்ʼ :-

நிலைத்த ஞான அனுபவமே வடிவாய் இருக்கின்றவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

நிலைத்த ஞான அனுபவமே வடிவாய் ஈச்வரர் இருப்பதை, நித்யம் சிதானந்த ரூபம் என்று குறிப்பிடலாம் . எல்லோருக்குள்ளும் ' நான் இருக்கின்றேன் ' என்பதான உணர்வு இருக்கிறது . இதை யாரும் ஏற்படுத்திவிடவில்லை. நேற்று உண்டாகி நாளை இல்லாமல் போவதில்லை. எல்லாக் காலங்களிலும் இருப்பது எனவே நித்யம் எனப்படுகிறது . அது ஸ்வயமே அறிவு, ஒன்றே ஆனது. ஜடத்தன்மை என்று சொல்லமுடியாதது. யாரும் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. எனவே அதை சித் என்கிறோம். அது ஒரு அனுபவம் . நிறைவான அனுபவம். யாதொன்றும் தேவையற்ற நிலை, சுகம் துக்கம் முதலானவைகளால் பாதிக்கப்பாத ஆனந்த ஸ்வரூபம்.

இவையெல்லாம் சேர்ந்து ஈச்வரர், ஆத்ம ஸ்வரூபமாய் விளங்குகிறார் என்பதைக் காட்டுகிறது .

அவ்வாறு ஆத்மவடிவாய் விளங்கும் மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

2. நிஹ்னுத அஶேஷ லோகேஶ-வைரி ப்ரதாபம் :-

லோகேச்வரனின் ( ஜீவாத்மா ) எதிரிகளின் கொட்டத்தை மிச்சமில்லாமல் ஒழித்துவிட்டவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

இங்கு லோகேச்வரன் என்பது இந்திரனைக் குறிக்கிறது. ராவணன் முதலான பல அசுரர்களால் இந்திரனுக்கு ஏற்பட்ட இன்னல்கள் ஈச்வரரால் தீர்த்து வைக்கப்பட்டன.

இங்கு லோகேசன் என்பதை மாயாமயமான இந்த உலக வாழ்க்கையை வாழும் மனிதனாகக் ( ஜீவாத்மா ) கொண்டால், அவனது உண்மையான எதிரிகளான காமம் , குரோதம் முதலானவைகளை, அதன் தாக்கங்களை, அதாவது அஞ்ஞானத்தை முற்றிலும் ஒழித்து ஞானத்தை பிரகாசிக்கச் செய்பவர் என்று பொருள்படுகிறது.

அப்படி எதிரிகளை முற்றிலும் ஒழிக்கின்ற மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

3. கார்தஸ்வர அக³-இந்த்³ர சாபம்ʼ :-

பொன்னாலான மலையரசனை ( மேரு மலை ) வில்லாக உடையவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

தாரகாசுரனின் மூன்று மகன்களும் ( தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ) நான்முகனை நோக்கி தவமியற்றி அம்மூவரும் பொன், வெள்ளி, இரும்பினால் ஆன சுவருடைய முப்புரம் வேண்டும். அவை நாங்கள் நினைத்த இடத்திற்கு மாற வேண்டும். அவற்றை எங்களையும் சிவபெருமான் தவிர வேறொருவர் அழிக்க முடியாத வரத்தை கேட்டனர். நான்முகனும் கொடுத்து விட்டு மறைந்தார். அம்மூவரும் தங்கள் பலத்தால் அனைவருக்கும் தொல்லை கொடுக்க, தேவர்கள் அவர்களது தொல்லை தாளாமல் சிவபெருமானிடம் முறையிட, உடன் சிவபெருமான், பிரம்மா சாரதியாக, பூமியே தேராக, தேரில் மந்திர மலையை அச்சாகவும், சந்திர, சூரியர் சக்கரமாகவும், நதிகள் தேர்க் கொடியாகவும், அஷ்டபர்வதங்கள் தேரின் தூண்களாகவும், புண்ணிய நதிகள் சாமரம் வீசவும், தேவகணத்தினர் வாத்தியங்கள் இசைத்தப்படி உடன் வர தேரில் சிவபெருமான் இருந்து, அனைவரின் எண்ணப்படி மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகியை நாணாகக் கொண்டு, விஷ்ணுவை அம்பாகக் கொண்டு நாணேற்றினார். பின் திடிரென அவற்றை வைத்து விட்டு முப்புறங்களையும் பார்த்து ஒரு புன்னகைப் புரிந்தார். முப்புறங்களும் எரிந்து சாம்பலாயின. உடன் அசுரர்கள் மூவரும் சிவபெருமானிடம் மன்னிப்புப் கேட்க, அவரும் அவர்களை மன்னித்து துவார பாலகராக வைத்துக் கொண்டார்.

தத்துவரீதியாக முப்புரங்கள் என்பன, ஸ்தூல, ஸூக்ஷ்ம, காரண சரீரங்கள் என்று கொள்ளப்படுகிறது. அவைகளைத் தன் புன்னகையால் அதாவது கிருபையால் , ஒழித்து, நம்மைத் தன் சேவகர்களாக ஏற்றுக் கொள்கிறார்.

அப்படி ஏற்றுக்கொள்ளும் மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

4. க்ருʼத்திவாஸம்ʼ :-

( புலி, யானை முதலிய ) மிருகங்களின் தோலை உடுத்தியவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

தாருகாவனத்தில் வாழ்ந்து வந்த முனிவர்களை சிவபெருமான் சோதித்தார். இதனை ஞானதிருஷ்டியில் கண்ட முனிவர்கள் வேள்வியால் சிவபெருமானை அழிக்கமுடிவு செய்தனர். எனவே பிறர்க்கு தீங்கு செய்யக்கூடிய அபிசார ஹோமம் வார்த்தனர். அதிலிருந்து இடிமுழக்கம் போன்ற சத்தத்துடன், கூர்மையான பற்கள், அகண்ட வாய், தீச்சுடர் பொங்கும் விழிகளுடன் ஒரு புலி வந்தது. அதனைக் கொண்டு சிவபெருமானிடம் ஏவினர். அதனை அடக்கிய சிவபெருமான் அதனைக் கொன்று தோலினை ஆடையாக்கினார்.

பின் ஒரு யானையையும் அனுப்ப, அதன் தோலையும் உரித்து அணிந்தார்.

இவ்வாறு மிருகங்களின் தோலை ஆடையாக அணிந்ததால் 'க்ருத்திவாஸர்' எனப்படுகிறார். இதனால் ஈச்வரர் எப்படிப்பட்ட எதிரியையும் எளிதில் அழித்துவிடுபவர் என்றும் , எந்த வர்ணாச்ரமத்திலும் சேராத அதிவர்ணாச்ரமி என்றும் தெரிகிறது.

அத்தகைய மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

5. தி³வ்ய ஸன்மார்க³ ப³ந்து⁴ம் :-

புனிதமான பகவானை அடையும் வழிக்குத் துணை நிற்பவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

ஸத் வஸ்துவை அடைவதற்கானவழி தான் ஸன்மார்கம். ஒருவன் பகவானை அடையும் முயற்சியில் ஈடுபடும் போது , மாயை அவனது உறுதியை சோதிக்க வேண்டியவற்றை செய்யும். அதாவது வழிபிறழச் செய்யும். அதற்கு அனேக ஸுக போகங்களை அளிக்கும் , ஸித்திகளை அளிக்கும் . சிலசமயம் மேலும் மேலும் கஷ்டங்களையும் கொடுத்துப் பார்க்கும். அச்சமயங்களில் ஒருவன் வழிபிறழாமல் இருக்க , பகவத் கிருபை/ குரு கிருபை வேண்டும். ஈச்வரர் அத்தகைய கிருபை செய்து ஜீவனுக்கு வழித்துணையாக இருந்து, தன்னை அடையச் செய்கிறார்.

அப்படித் துணையிருக்கும் மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

ப⁴ஜே ( மார்க³ப³ந்து⁴ம் ) :

அப்படிப்பட்ட மார்க்கபந்துவை வழிபடுவோம்.

மார்க்கபந்து என்றால் வழியில் துணையாக இருப்பவர் என்று பொருள்.

பஜே என்றால் , வழிபடுவோம், நினைப்போம், அறிவோம், அன்பு செலுத்துவோம் என்ற பல பொருள்கள் கிடைக்கும். முதலில் பகவானைத் தேடுவோம், பின் அவரை இப்படிப்பட்டவர் என்று அறிவோம், பின் அவரையே நினைப்போம், வழிபடுவோம் பின் அன்பே சிவம் என்று அவர்பால் அன்பு செலுத்தி சிவமாவோம்.

" ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் " என்பதை ஒவ்வொரு வாக்கியத்துடனும் தனியே சேர்த்தும் பொருள் கொள்ளலாம்.

शंभो महादेव देव - शिव
शंभो महादेव देवेश शंभो -
शंभो महादेव देव ॥

ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ - ஶிவ
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴ -
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ ||
Sri Margabandhu Stotram - Sloka 2

॥ श्री मार्गबन्धु स्तोत्रम् ॥
॥ ŚRĪ MĀRGABANDHU STOTRAM ॥
॥ ஶ்ரீ மார்க³ப³ந்து⁴ ஸ்தோத்ரம் ॥

अङ्गे विराजद्भुजङ्गं
अभ्रगङ्गातरङ्गाभिरामोत्तमाङ्गं
ओंकारवाटीकुरङ्गं सिद्धसंसेविताङ्घ्रिं
भजे मार्गबन्धुम् ।

அங்கே³ விராஜத்³பு⁴ஜங்க³ம்ʼ
அப்⁴ரக³ங்கா³தரங்கா³பி⁴ராமோத்தமாங்க³ம்ʼ
ஓங்காரவாடீகுரங்க³ம்ʼ ஸித்³த⁴ஸம்ʼஸேவிதாங்க்⁴ரிம்ʼ
ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் |

aṅge virājadbhujaṅgaṃ
abhragaṅgātaraṅgābhirāmottamāṅgaṃ
oṃkāravāṭīkuraṅgaṃ siddhasaṃsevitāṅghriṃ
bhaje mārgabandhum ।

பிரதி பத அர்த்தம் :

अङ्गे - அங்கே³ - ( உடலின் பல்வேறு ) அங்கங்களில்,

विराजत् - விராஜத் - அணிந்தவரை,

भुजङ्गं - பு⁴ஜங்க³ம்ʼ - பாம்பை,

अभ्र-गङ्गा-तरङ्ग - அப்⁴ர-க³ங்கா³-தரங்க³ - ஆகாயகங்கையின் அலைகளால்,

अभिराम - அபி⁴ராம - ஆனந்தம் கொள்ளும்,

उत्तम-अङ्गं - உத்தம-அங்க³ம்ʼ - தலையை உடையவரை,

ओंकार-वाटी - ஓங்கார-வாடீ - ஓங்காரமாகிய சோலையிலுள்ள,

कुरङ्गं - குரங்க³ம்ʼ - மான் போன்றவரை,

सिद्ध - ஸித்³த⁴ - சித்தர்களால்,

संसेवित - ஸம்ʼஸேவித - வணங்கப்படும்,

अङ्घ्रिं - அங்க்⁴ரிம்ʼ - திருப்பாதங்களை உடையவரை,

मार्गबन्धुम् - மார்க³ப³ந்து⁴ம் - வழித்துணைவரை - மார்கபந்தீச்வரரை,

भजे - ப⁴ஜே - வழிபடுகிறேன்.

பொருள் :

பாம்புகளை அலங்காரமாகத் தனது ( உடலின் பல்வேறு ) அங்கங்களில் கொண்டவரை, ஆகாயகங்கையின் அலைகளால் ஆனந்தம் கொள்ளும் தலையை உடையவரை, ஓங்காரமாகிய சோலையிலுள்ள மான் போன்றவரை, ( அடைய வேண்டியதை அடைந்துவிட்ட ) சித்தர்களால் வணங்கப்படும் திருப்பாதங்களை உடையவரை, மார்க்கபந்தீச்வரரை வழிபடுகிறேன். 2

Meaning :

I worship Lord Margabandhu on whose limbs snakes appear prominently, whose head looks charming with the waves of the celestial river Ganga, who is like a deer in the garden of Omkara and whose feet are served by siddhas (great seers). 2

பதம் பிரிப்பு :

अङ्गे विराजत् भुजङ्गं,
अभ्र-गङ्गा-तरङ्ग अभिराम उत्तम-अङ्गं,
ओंकार-वाटी कुरङ्गं, सिद्ध संसेवित अङ्घ्रिं,
भजे मार्गबन्धुम् ।

அங்கே³ விராஜத் பு⁴ஜங்க³ம்ʼ,
அப்⁴ர-க³ங்கா³-தரங்க³ அபி⁴ராம உத்தம-அங்க³ம்ʼ,
ஓங்கார-வாடீ குரங்க³ம்ʼ, ஸித்³த⁴ ஸம்ʼஸேவித அங்க்⁴ரிம்ʼ,
ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் |

விளக்கவுரை :

1. அங்கே³ விராஜத் பு⁴ஜங்க³ம்ʼ :

பாம்புகளை அலங்காரமாகத் தனது அங்கங்களில் கொண்டவரை( மார்கபந்துவை வணங்குகிறேன். )

பாம்புகளைக் கண்டால் மக்கள் பயப்படத்தான் செய்கிறார்கள். பாம்பு கடித்தால் விஷம் ஏறி இறக்க நேரிடும் என்ற காரணத்தினால். ஆனால் ஈச்வரரோ ஜடையில், கழுத்தில் , கைகளில் , கால்களில், இடுப்பில் என உடல் முழுதும் ஸர்பங்களையே பூஷணமாகப் பூண்டுள்ளார். அதாவது அவருக்கு பாம்பின் பெயரில் பயமில்லை.

மரணத்தை கால ஸர்ப்பம் என்றும் குறிப்பிடுவதுண்டு. அதாவது காலம் என்னும் பாம்பு என்று பொருள். ஈச்வரருக்கு காலபயம் கிடையாது . அவர் எல்லாவற்றையும் தாண்டி இருப்பவர். காலத்தையும் நடத்துபவர். காலகாலன் எனப்படுகிறார் . மேலும் மரணம் என்பது உடலுக்குத் தான். பரமேச்வரரைத் துதிப்பவர்கள், மரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது . எனவே மரணத்தைக் கண்டு பீதியடைவதில்லை.

அப்படிப்பட்ட தன்மையை நமக்களிக்கும் மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

2. அப்⁴ர-க³ங்கா³-தரங்க³ அபி⁴ராம உத்தம-அங்க³ம்ʼ :

ஆகாயகங்கையின் அலைகளால் ஆனந்தம் கொள்ளும் தலையை உடையவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

தேவலோகத்திலிருந்து, எல்லோருக்கும் பயன்தர வேண்டி பூலோகம் வந்த கங்கையை தன் தலையில் ( உத்தமாங்கம் ) தரித்திருக்கிறார், ஈச்வரர் .
அந்த கங்கையின் அலைகளால் ஆனந்திக்கிறார். எனவே தான் அளகானந்தா என்ற பெயர் கங்கைக்கு .
அளகம் - ஜடாபாரம்.

கங்கையை ஞானகங்கை என்றே சொல்வதுமுண்டு. முதலில் உடலைப்பற்றி அறிந்து , பின் அதையும் தாண்டி விசாரம் செய்து, ஹிருதய குஹையில் இருக்கின்ற ( உத்தமாங்கம் - சிறந்த அங்கம், ஈச்வரர் எல்லோருள்ளும் இருதய ஸ்தானத்தில் இருப்பதாக பிரஸித்தம். எனவே அதுவே சிறந்த அங்கம் ) ஞான ஸ்வரூபமான ஆத்மாவில் மனம் ஒன்றி அந்த ஆனந்தத்திலேயே திளைக்கிறது. இது ஆத்ம ஸாக்ஷாத்காரம்.

அவ்வாறு ஆனந்தமடையும்படி செய்யும் ஈச்வரரை மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

3. ஓங்கார-வாடீ குரங்க³ம்ʼ :

ஓங்காரமாகிய சோலையிலுள்ள
மான் போன்றவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

ஆத்ம ஸாக்ஷாத்காரம் அடைந்த பின் உலகமும் ஆத்மாவாலானதே என்ற விசாரம் ஏற்படும்.

ஓங்காரம் என்பது பரப்ரஹ்மத்தின் பிரதீகம். ஓங்காரத்தால் ஆனதே இவ்வழகிய உலகம் முழுமையும். அதனால் ஓங்காரத் தோட்டம் என்று இப்படைப்பு குறிக்கப்படுகிறது. அந்தத் தோட்டத்தில் ஓடி விளையாடுவதான அழகான மானும் ஓங்கார ஸ்வரூபமே என்பது இங்கு தெளிவாக்கப்படுகிறது.

அதாவது இப்பிரபஞ்சமும் ப்ரஹ்மம் தான், இந்த ஜீவனும் ப்ரஹ்மம் தான், ஸர்வம் ப்ரஹ்மமயம் என்பதைக் காட்டுகிறது.

அப்படித் தெளிவிக்கும் மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

4. ஸித்³த⁴ ஸம்ʼஸேவித அங்க்⁴ரிம்ʼ :

( அடைய வேண்டியதை அடைந்துவிட்ட ) சித்தர்களால் வணங்கப்படும் பாதங்களை உடையவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

மேற்கூறியவாறு தன்னையும் உலகையும் சிவமயம் என்ற ஞானத்தை அடைந்துவிட்ட ஞானி , அதன் பாதம் பணிகிறான். அஹங்கார ரஹிதனாகிறான். அவன் அருளால் அவன் தாள் பணிவதை இது காட்டுகிறது. அப்படி பணியச் செய்யும் மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் :

அப்படிப்பட்ட மார்க்கபந்துவை வழிபடுவோம்.

மார்க்கபந்து என்றால் வழியில் துணையாக இருப்பவர் என்று பொருள்.

பஜே என்றால் , வழிபடுவோம், நினைப்போம், அறிவோம், அன்பு செலுத்துவோம் என்ற பல பொருள்கள் கிடைக்கும். முதலில் பகவானைத் தேடுவோம், பின் அவரை இப்படிப்பட்டவர் என்று அறிவோம், பின் அவரையே நினைப்போம், வழிபடுவோம் பின் அன்பே சிவம் என்று அவர்பால் அன்பு செலுத்தி சிவமாவோம்.

" ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் " என்பதை ஒவ்வொரு வாக்கியத்துடனும் தனியே சேர்த்தும் பொருள் கொள்ளலாம்.

शंभो महादेव देव - शिव
शंभो महादेव देवेश शंभो -
शंभो महादेव देव ॥

ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ - ஶிவ
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴ -
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ ||
Sri Margabandhu Stotram - Sloka 1

॥ श्री मार्गबन्धु स्तोत्रम् ॥
॥ ŚRĪ MĀRGABANDHU STOTRAM ॥
॥ ஶ்ரீ மார்க³ப³ந்து⁴ ஸ்தோத்ரம் ॥

फालावनम्रत्किरीटं फालनेत्रार्चिषा दग्ध पञ्चेषुकीटम्।
शूलाहतारातिकूटं शुद्धमर्धेन्दुचूडं भजे मार्गबन्धुम्॥१॥

பா²லாவனம்ரத்கிரீடம்ʼ பா²லனேத்ரார்சிஷா த³க்³த⁴ பஞ்சேஷுகீடம்|
ஶூலாஹதாராதிகூடம்ʼ ஶுத்³த⁴மர்தே⁴ந்து³சூட³ம்ʼ ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம்|| 1||

phālāvanamratkirīṭaṃ phālanetrārciṣā dagdha pañceṣukīṭam।
śūlāhatārātikūṭaṃ śuddhamardhenducūḍaṃ bhaje mārgabandhum॥1॥

பிரதி பத அர்த்தம் :

फाल - பா²ல - தலையில்

अवनम्रत् - அவனம்ரத் - வணங்காத

किरीटं - கிரீடம்ʼ - கிரீடத்தை

फाल-नेत्र - பா²ல-நேத்ர - நெற்றிக் கண்ணின்

अर्चिषा - அர்சிஷா - நெருப்பினால்

दग्ध - த³க்³த⁴ - எரித்தவரை

पञ्चेषु - பஞ்சேஷு - ஐந்து அம்புகள் உடையவனை - காம தேவனை

कीटम् - கீடம் - புழுவைப் போன்று

शूल - ஶூல - சூலத்தால்

आहत - ஆஹத - தாக்கி அழித்தவரை

अराति-कूटं - அராதி-கூடம்ʼ - பகைவர்கள் கூட்டத்தை

शुद्धं - ஶுத்³த⁴ம்ʼ - சுத்தமானவரை

अर्धेन्दु - அர்தே⁴ந்து³ - பிறை / அரை சந்திரனை

चूडं - சூட³ம்ʼ - தலையில் சூடியவரை

मार्गबन्धुम् - மார்க³ப³ந்து⁴ம் - வழித்துணைவரை - மார்கபந்தீஸ்வரரை

भजे - ப⁴ஜே - பஜிக்கிறேன் / வணங்குகிறேன்.

பொருள் :

தலையில் யாருக்கும் வணங்காத கிரீடத்தை ( ஜடாபாரத்தையே கிரீடமாக ) உடையவரை, நெற்றிக் கண்ணின் நெருப்பினால் புழுவைப் போன்று ( எளிதாக ) ஐந்து அம்புகள் உடையவனை ( காம தேவனை ) எரித்தவரை, சூலத்தால் பகைவர்கள் கூட்டத்தை தாக்கி அழித்தவரை , சுத்தமானவரை ( மாயை, அஞ்ஞானம் இவைகளுக்கு அப்பாற்பட்டவரை ), பிறை /அரை சந்திரனை தலையில் சூடியவரை, வழித்துணைவரை - மார்கபந்தீஸ்வரரை வணங்குகிறேன். 1

Meaning :

I worship Lord Margabandu who wears a crown, who destroyed the insect like god of love with the fire from His eye in His forehead, who destroyed the enemies (of gods) with His Trident, who is pure(i.e.) beyond maya and ignorance and who wears the moon on His head as an onament. 1

பதம் பிரிப்பு :

फाल अवनम्रत् किरीटं, फाल-नेत्र-अर्चिषा दग्ध पञ्च-इषु-कीटम् ।
शूल आहत अराति-कूटं, शुद्धं, अर्ध-इन्दु चूडं, भजे मार्गबन्धुम्॥

பா²ல அவனம்ரத் கிரீடம்ʼ, பா²ல-நேத்ர-அர்சிஷா த³க்³த⁴ பஞ்ச-இஷு-கீடம் |
ஶூல ஆஹத அராதி-கூடம்ʼ, ஶுத்³த⁴ம்ʼ, அர்த⁴-இந்து³ சூட³ம்ʼ, ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம்||

விளக்கவுரை :

1. பா²ல அவனம்ரத் கிரீடம்ʼ :

தலையில் வணங்காத கிரீடம் உடையவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

தலையில் சாய்வாக ஜடாபாரம் கிரீடம் தாங்கியவர். ஈச்வரர் தனிப்பட்ட தங்க வைர கிரீடங்களை அணியாமல் , தன் ஜடாபாரத்தையே கிரீடம் போன்று அணிந்துள்ளார். அதுவே கண்ணுக்கு மிகவும் இனிமையாக இருக்கிறது .
மேலும் ஈச்வரர் எதிரிகளுக்கு தலை வணங்குவதில்லை. எதிரிகள் என்பது அவருடைய பக்தர்களின் எதிரிகள், அதாவது பக்தர்களைக் கெடுக்கும் துஷ்டர்கள், மற்றும் பக்தியைக் கெடுக்கும் காமம் , கோபம் முதலிய ஆந்தரீக எதிரிகள். பக்தர்களை இவ்வெதிரிகளிடமிருந்து காக்கிறார், ஈச்வரர்.

மேலும் ' பால ' பதத்திற்கு பதிலாக ' பாத ' என்ற பாடபேதமும் காணமுடிகிறது. அதன்படி , இந்த்ராதி தேவர்கள் ஈச்வரரின் பாதங்களில் விழுந்து வணங்கும்போது அவர்களுடைய கிரீடங்கள் ஈச்வரர் பாதங்களில் படுகிறது என்று பொருள் கொள்ளலாம். எல்லோருக்கும் மேற்பட்ட ஈச்வரர் என்ற பொருள் தருகிறது. அப்படிப்பட்ட மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

2. பா²ல-நேத்ர-அர்சிஷா த³க்³த⁴ பஞ்ச-இஷு-கீடம் :

நெற்றிக்கண்ணிலிருந்து உண்டான தீப்பொறியால் புழுவென மதிக்கத்தக்க ஐந்து பாணங்களையுடைய மன்மதனை எரித்தவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

சூர்ய சந்த்ர அக்னி லோசனன் என்று ஈச்வரரைச் சொல்வது வழக்கம் . மூன்றாவது கண் அக்னியின் ப்ரதீகம். அதைக் கொண்டு மன்மதனின் ஐந்து அம்புகள், கரும்பு வில், மன்மதனையும் சேர்த்து எரித்ததாக ப்ரஸித்தம். தத்வரீதியாக நோக்கினால் ஐந்து கணைகள் ஐந்து ஞானேந்த்ரியங்கள், கரும்பு வில் மனம், மன்மதன் அஹங்காரம் அல்லது அஞ்ஞானம்.
நெற்றியிலுள்ள மூன்றாவது கண் ஞானக்கண். ஈச்வரர் தன் ஞான பிரகாசத்தால் , ஜீவனின் அஞ்ஞானமாகிய அஹங்காரத்தை நீக்கி, அதன்மூலம் மனம் மற்றும் ஞானேந்த்ரியங்கள் நல்வழிப்படுத்தப்படுகின்றன.

பகவானைத் தன் வித்தையால், தபஸால், சாதுர்யத்தால் பலத்தால் வசப்படுத்திவிடலாம் என்று யோசித்த மன்மதனின் அறிவின்மையைக் குறிக்கவே புழு என்னும் அடைமொழி ஏற்பட்டிருக்க வேண்டும்.

மன்மதனுடைய ஐந்து கணைகளாவன:

முதற் கணை = தாமரை. நடுக் கணை = அசோகம்.
கடைக் கணை = நீலோற்பலமலர். இடை இடையாகும் கணைகள் = மா, முல்லை.

மன்மதன் தொடுக்கும் மலரம்புகள் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் காதல் நோயை உண்டாக்கக்கூடியவை. முதலில் செலுத்தப்படும் தாமரை அம்பு, காதலரைப் பற்றிய நினைவைத் தூண்டி அவர்பால் காதல்போதையைத் தோற்றுவிக்குமாம். அசோகம்பூ ஊண் மறக்கச் செய்யுமாம். மாம்பூவோ காதலர் நினைவால் மேனியில் பசலை படர்த்த, முல்லை காதற்பித்தைத் தலைக்கேற்றி உன்மத்தம் பீடிக்கச்செய்யுமாம்.

கடைசியாகச் செலுத்தப்படும் நீலோற்பவ மலரம்பு கொடுந்தன்மை கொண்டதாம். அது விரக மேலீட்டால் காதலர் உயிரையும் பறித்துவிடக்கூடியதாம். அதனாலேயே மன்மதன் மனமிரங்கி, உயிர் பறிக்கும் அவ்வம்பை விடுத்து மற்ற நான்கு மலரம்புகளை மட்டுமே எய்து காதல் நோயுண்டாக்குவதாக இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.

நினைக்கு மரவிந்தம் நீள்பசலை மாம்பூ
வனைத்துணவு நீக்கு மசோகு - வனத்திலுறு
முல்லை கிடைகாட்டு மாதே முழுநீலங்
கொல்லுமத னம்பின் குணம்.

3. ஶூல ஆஹத அராதி-கூடம்ʼ :

சூலத்தால் பகைவர் கூட்டங்களத் தாக்கி அழிப்பவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன்.)

சூலம் , த்ரிசூலம் என்பது சிவபெருமான் கையில் தரித்திருக்கும் ஆயுதம். இது ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது . முக்குணங்களிலிருந்து தான் மனம் முதலிய இந்த்ரியங்களும் , பஞ்சபூதங்களும் , இவ்வாறாக பிரபஞ்சமே தோன்றுகிறது . ஈச்வரர் அதைத் தன்னிடம் வைத்துள்ளது, இப்பிரபஞ்சத்தின் எல்லா செயல்பாடுகளும் அவர் தன் வசத்திலேயே வைத்திருக்கிறார் என்பதைத் தெரிவிக்கிறது . ஈச்வரர் தன் த்ரிசூலத்தால் அநேக துஷ்டர்களை அழித்து சாதுக்களைக் காக்கிறார். ஆயுதம் தாங்கிய ஈச்வரர் , நம்மைக் காக்க, நம்முடன் வழித்துணையாக வருகின்ற மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

4. ஶுத்³த⁴ம்ʼ :

சுத்தமானவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

எக்காலத்துக்கும் மாயைக்கும் அதனால் உண்டாகும் அவித்யை போன்றவற்றுக்கும் உட்படாது, சுத்தமாக தெளிந்து இருப்பவர் என்று பொருள். அப்படிப்பட்ட மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

5. அர்த⁴-இந்து³ சூட³ம்ʼ :

பிறைச்சந்திரனை சூடியவரை ( மார்கபந்துவை வணங்குகிறேன். )

எக்காலத்துக்கும் மாயைக்கும் அதனால் உண்டாகும் அவித்யை போன்றவற்றுக்கும் உட்படாது, சுத்தமாக தெளிந்து இருப்பவர் என்று பொருள்.

பிறைச்சந்திரனை
ஈச்வரர் தன் ஜடாபாரத்தில் சூடியிருக்கிறார். இந்த பிறைச் சந்திரன் , ஞானரூபத்தைக் குறிப்பதாக சைவாகமங்கள் கூற்று.
இதிலும் கவனிக்கத்தக்கது, ஈச்வரர் கிரீடத்துடன் இருப்பினும் , கிரீடத்திற்கு வெளியிலேயே சந்திரன் எப்போதும் விளங்குகிறது. கிரீடம் ஆளுமையைக் கிறிப்பது. ஈச்வரர் உலகையே ஆள்பவர் ஆனால் இந்த ஆளுமைச் செயல்களால் அவரது ஞானம் தாக்கமடைவதில்லை. இதனால் அறியவேண்டியது நம் என்னென்ன கர்மங்களைச் செய்ய வேண்டுமோ அதை உரியமுறையில் செயலாற்ற வேண்டும். ஆற்றியபோதும் ஞானத்திலிருந்து பிறழாது இருக்க வேண்டும் . நம்மை அவ்விதம் வைக்கும் மார்க்கபந்தீச்வரரை வணங்குவோம்.

ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் :

அப்படிப்பட்ட மார்க்கபந்துவை வழிபடுவோம்.

மார்க்கபந்து என்றால் வழியில் துணையாக இருப்பவர் என்று பொருள் . அதை முன்னமே எடுத்துரைத்திருக்கிறேன்.

பஜே என்றால் , வழிபடுவோம், நினைப்போம், அறிவோம், அன்பு செலுத்துவோம் என்ற வ பல பொருள்கள் கிடைக்கும். முதலில் பகவானைத் தேடுவோம், பின் அவரை இப்படிப்பட்டவர் என்று அறிவோம், பின் அவரையே நினைப்போம், வழிபடுவோம் பின் அன்பே சிவம் என்று அவர்பால் அன்பு செலுத்தி சிவமாவோம்.

" ப⁴ஜே மார்க³ப³ந்து⁴ம் " என்பதை ஒவ்வொரு வாக்கியத்துடனும் தனியே சேர்த்தும் பொருள் கொள்ளலாம்.

शंभो महादेव देव - शिव
शंभो महादेव देवेश शंभो -
शंभो महादेव देव ॥

ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ - ஶிவ
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வேஶ ஶம்போ⁴ -
ஶம்போ⁴ மஹாதே³வ தே³வ ||

॥ श्री मार्गबन्धु स्तोत्रम् ॥
॥ ŚRĪ MĀRGABANDHU STOTRAM ॥
॥ ஶ்ரீ மார்க³ப³ந்து⁴ ஸ்தோத்ரம் ॥


இந்த ஸ்தோத்ரம் வேலூர் அருகேயுள்ள திருவிரிஞ்சிபுரத்தில் விளங்குகின்ற " ஸ்ரீ மார்க்கஸஹாய ஈச்வரர் " பற்றி இயற்றப்பட்டதாகும். இந்த மார்க்கபந்து ஸ்தோத்ரத்தை இயற்றியவர் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர். 

மார்க்கபந்து என்றால் , மார்க்கத்தில் ( வழியில் ) பந்துவாக இருப்பவர் ( உடனிருப்பவர் ) என்று பொருள். 

நாம் சாதாரணமாக ஓரிடத்திலிருந்து ஓரிடத்திற்கு பயணம் செய்யும்போது செல்லும் வழிதோறும் துணையாக உடனிருந்து காப்பவர் என்றவாறு பகவானை மார்க்கபந்து என்றழைக்கிறோம். 

இதேபோல ஒருவனது பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான வாழ்க்கைப் பயணம் முழுமையும் அந்தர்யாமியாக உடனிருந்து உற்றதுணையாக இருப்பதாலும் , பகவானை மார்க்கபந்து என்று அழைக்கலாம்.

மேலும் அனாதி காலமாய் அஞ்ஞானத்தால் ஸம்ஸாரத்தில் உழன்று கொண்டுள்ள ஜீவாத்மா, மீண்டும் ஞான பிரகாசத்தால் ஸத்தியத்தை உணரும் வரையிலான காலம் முழுமைக்கும் ஸாக்ஷீபூதமாக இருந்து துணைபுரிவதால் பகவானை மார்க்கபந்து என்றழைப்பது உசிதமே. 

அப்படிப்பட்ட பகவானுடைய குணங்களை போற்றுவதாக உள்ளதால் இது ' மார்க்கபந்து ஸ்தோத்ரம் ' எனப்படுகிறது.

गुण संकीर्त्तनात्मकं स्तोत्रम्।
கு³ண ஸங்கீர்த்தனாத்மகம்ʼ ஸ்தோத்ரம்|

குணங்களைப் போற்றிப் பாடுவது ' ஸ்தோத்ரம் ' எனப்படும் .

நம் வைதீக கிரந்தங்களின்படி பரம்பொருள் ஒன்றே. நாமம் ரூபம் முதலிய குணங்களேதுமற்றது. அது பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது. இது அதன் நாமம் அல்ல. நாம் புரிந்து கொள்ள வேண்டி , அதன் ' பெரியது ' ( बृहत्तमत्त्वात् ) எனும் லக்ஷணத்தைக் கொண்டு ஏற்பட்டது. அது எல்லையற்றது. காலம், தேசம் முதலியவற்றைத் தாண்டியது.

எல்லையற்ற தை, நாமம் ரூபம் அற்றதை எப்படி தியானிக்க, வணங்க , பக்தி செய்ய முடியும் ? இதற்கும் கிரந்தங்களே வழி செய்கின்றன. பரப்ரஹ்மத்தை பல்வேறு நாம ரூபங்களுடையதாகவும் கூறுகிறது. எனவே அந்த ரூபங்களுக்கு பூஜை, பிரார்த்தனை, ஸ்துதி, தீர்த்த யாத்திரை போன்றவைகளைச் செய்ய முடிகிறது . இது சகுண உபாஸனை எனப்படுகிறது. இவைகளை பகவான் கருணை உள்ளத்துடன் ஏற்றுக்கொள்கிறார். பகவானை அடைய இது ஒரு பிடிப்பைத் தருகிறது . 

பின் இந்த சகுண உபாஸனையே நிர்குண உபாஸனைஆக மாறும்படி பகவான் அருள்கிறார். அதன் மூலம் பகவானை அடையமுடிகிறது. இதையே பகவான் கீதையில் கூறுகிறார்.

यो यो यां यां तनुं भक्तः श्रद्धयाऽर्चितुमिच्छति।
तस्य तस्याचलां श्रद्धां तामेव विदधाम्यहम्॥२१॥ 
स तया श्रद्धया युक्तस्तस्यऽऽराधनमीहते।
लभते च ततः कामान् मयैव विहितान् हि तान्॥२२॥ 

yō yō yāṃ yāṃ tanuṃ bhaktaḥ śraddhayā'rcitumicchati|
tasya tasyācalāṃ śraddhāṃ tāmēva vidadhāmyaham||21|| 
sa tayā śraddhayā yuktastasya''rādhanamīhatē|
labhatē ca tataḥ kāmān mayaiva vihitān hi tān||22|| 

யோ யோ யாம்ʼ யாம்ʼ தனும்ʼ ப⁴க்த​: ஶ்ரத்³த⁴யா(அ)ர்சிதுமிச்ச²தி| 
தஸ்ய தஸ்யாசலாம்ʼ ஶ்ரத்³தா⁴ம்ʼ தாமேவ வித³தா⁴ம்யஹம்|| 21|| 
 ஸ தயா ஶ்ரத்³த⁴யா யுக்தஸ்தஸ்ய(அ)(அ)ராத⁴னமீஹதே| 
லப⁴தே ச தத​: காமான் மயைவ விஹிதான் ஹி தான்|| 22||

Whatever celestial form a devotee seeks to worship with faith, I steady the faith of such a devotee in that form. 

Endowed with faith, the devotee worships a particular celestial god and obtains the objects of desire. But in reality I alone arrange these benefits. - Bhagavad Gita 7.21,22.

எந்தெந்த ஸகாம பக்தன் (பயன்களை அடைய விருப்பம் கொண்ட பக்தன்) எந்தெந்த தேவதையின் ஸ்வரூபத்தைச் சிரத்தையுடன் பூஜிக்க விரும்புகிறானோ, அந்தந்த பக்தனுக்குச் சிரத்தையை, நான் அந்தந்த தேவதையிடமே அசையாததாகச் செய்கிறேன்.

அந்த மனிதன் அந்தச் சிரத்தையுடன் கூடியவனாக அந்த தேவதையினுடைய பூஜையைச் செய்கிறான். மேலும், அந்த தேவதையிடமிருந்து என்னாலேயே நிர்ணயம் செய்யப்பட்டுள்ள, விரும்பிய அந்த போகங்களைச் சந்தேகமின்றி (அவன்) அடைகிறான்.

तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकम्।
ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते॥१०॥

tēṣāṃ satatayuktānāṃ bhajatāṃ prītipūrvakam|
dadāmi buddhiyōgaṃ taṃ yēna māmupayānti tē||10||

தேஷாம் ஸததயுக்தானாம் ப4ஜதாம் ப்ரீதிபூர்வகம்|
த3தா3மி பு3த்3தி4யோக3ம் தம் யேன மாமுபயாந்தி தே||10||

To those whose minds are always united with me in loving devotion, I give the divine knowledge by which they can attain me. - Bhagavad Gita 10.10.

தியானம் முதலியவற்றால் எப்பொழுதும் என்னிடமே ஈடுபடுகின்றவர்களும் பேரன்போடு வழிபடுகின்றவர்களுமான அந்த பக்தர்களுக்கு, எந்த புத்தியோகத்தின் மூலம் அவர்கள் என்னை அடைவார்களோ, அந்தத் தத்துவஞான வடிவாகிய புத்தியோகத்தை அளிக்கிறேன்.

மார்க்கஸஹாயேச்வரர் - மார்க்கபந்து :-

மைசூரிலிருந்து, மிளகு மூட்டைகளை காஞ்சிபுரத்துக்கு கொண்டு சென்ற தனபாலன் என்ற வணிகன், திருடர் தொல்லையிலிருந்து தன்னை காப்பாற்றினால், இந்த ஈசனுக்கு தன் மிளகு மூட்டையில் ஒரு பகுதியை அளிப்பதாக வேண்டியதாகவும், ஈசன் மாறு வேடத்தில் திருடர்களை விரட்டி வழித் துணையாக வந்ததால், "மார்க்கபந்து வழித்துணை நாதர்' என பெயர் பெற்றதாகவும், தன் வேண்டுதல் மறந்த தனபாலன், விற்ற மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாக மாற, தனபாலன் மனமுருக வேண்டியதால், மீண்டும் மிளகாக மாறியதாகவும் வரலாறு கூறுகிறது. 
( வழித்துணை நாதர் - மார்க்கஸஹாயேச்வரர் - மார்க்கபந்து )

இன்றும் ஓரிடத்திற்குக் கிளம்பும் போதும், செல்லும் வழிகளில் ஏற்படும் இன்னல்கள் தீரவும் இந்த மார்க்கபந்து ஸ்தோத்ரத்தைப் பாடும் வழக்கம் உள்ளது.

ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் (1520 – 1593) :

பதினாறாம் நூற்றாண்டில் சைவசமயம் நலிந்து போயிருந்த நேரத்தில், ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் 
தோன்றி தமது அற்புதமான வாதத்திறமையாலும், அதிசயங்களாலும் அதை மீட்டெடுத்தவர். தர்க்கம், மீமாம்சம், ஆகமம் போன்றவற்றில் சிறந்த பாண்டித்யம் பெற்றவர். 

தமிழ்நாட்டில் சிறந்த அத்வைத வேதாந்த பண்டிதராக வாழ்ந்து பல சாதனைகள் புரிந்தவர். பாமர மக்களுக்கெல்லாம் சிவ தத்துவத்தையும் அத்வைதத்தையும் புரிய வைப்பதற்காக தொண்டர்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்தியவர். பயணங்கள் பல செய்து வேதாந்தத்திலும் இலக்கியத்திலும் வாத-விவாதங்களில் தன் புலமையை நிலை நாட்டியிருக்கிறார். அவருடைய புகழ் வடநாட்டிலும் காசி வரையில் பரவி யிருக்கிறது. 

தமிழ்நாட்டின் வேலூருக்கு அருகே திருவிரிஞ்சிபுரம் எனும் ஊரில் 1520 - ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் ரங்கராஜ தீட்சிதர். அப்பய்ய தீட்சிதரின் இயற்பெயர் விநாயக சுப்பிரமணியன். சிறுவயதில் அவரை 'அப்பா, ஐயா' என்று கொஞ்சி அழைத்த பெயரே அப்பய்யர் என்று நிலைத்து விட்டது. வேலூர் அரசர் சின்ன பொம்ம நாயக்கரிடம் தலைமை பண்டிதராக இருந்த அவரது தந்தை மறைந்த பிறகு, அவரே அந்தப் பொறுப்பை ஏற்றார். 
அப்பய்ய தீட்சிதர் வடமொழியில் உள்ள பல பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர். சிறு வயதிலேயே வேதாந்தம், இயல், இலக்கணம் யாவற்றையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். வேதாந்த விமர்சனம், தத்துவம், பக்தி இலக்கியம், இவைகளில் ஆய்வுகள் அனேகம் செய்து, பெரிதும் சிறிதுமாக 104 நூல்கள் எழுதியதாகத் தெரிகிறது. அவைகளில் இன்றும் 60 நூல்கள் புழக்கத்தில் உள்ளன. அவருடைய உயர்ந்த கவித்திறன் அவரது படைப்புகளில் தெரிகிறது. அவர் எழுதிய நூல்களின் தரத்தையும் அவை உணர்த்தும் பொருளின் ஆழத்தையும் தான் கருத்தில் கொள்ளவேண்டுமே தவிர எண்ணிக்கையை அல்ல.

அப்பய்ய தீட்சிதரிடம் இருந்த மற்றொரு அருங்குணம் யாதெனில், சிவனை கண்கண்ட கடவுளாக பாடியவர் என்றாலும், விஷ்ணுவையும் துவேஷம் காட்டாது தொழுது வந்துள்ளார். இத்துணைக்கும் தாத்தாச்சாரியர் உள்ளிட்ட இவரின் சமகாலத்தவர்கள் இவருக்கு பலவிதங்களில் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். ஆனாலும் இவர் நாராயணனை நிந்தித்ததில்லை. திருமலை, திருவரங்கம், காஞ்சி உள்ளிட்ட பல ஷேத்ரங்களில் எழுந்தருளியிருக்கும் திருமாலை தரிசித்து பக்தி செய்திருக்கிறார். திருவரங்கம் வந்தபோது இவரின் பக்தியை மெச்சிய அரங்கன் சிவபெருமானாக இவருக்கு காட்சியளித்ததாக கூறப்படுகிறது.

ஒருமுறை ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அவர்களின் பெருமை இங்ஙனம் மேலும் மேலும் விருத்தி அடைவதைக் கண்டு பொறுக்காதவராகி, தாதாசாரியார் மிகவும் பண்டிதராயிருந்தும் பொறாமையினால் மதி மயக்கங்கொண்டு ஸ்ரீதீக்ஷிதேந்திரரை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று எண்ணினார்.
அரசனது முத்திரை மோதிரத்தை எப்படியோ திருடி அரசசாஸனம் போன்ற உத்திரவைத் தயாரித்து தீக்ஷிதர் அன்று இரவு இரண்டாம் யாமத்தில் அங்கு வரும் போது அவரைக் கொன்று விட வேண்டும் என்று அரசனின் முத்திரையைச் சேனாதிபதியிடம் காண்பித்தார். இந்தக் காரியத்தைச் செய்ய சேனாபதி மனம் புழுங்கினாலும், அரசனின் முத்திரையைக் காண்பித்து தாதாசாரியார் மிகவும் கடுமையாகத் தூண்டியதால் ஒருவாறு துணிந்தான். அரண்மனை வாயிலுக்கும் தீக்ஷிதர் இல்லத்திற்கும் இடையே உருவின வாட்களுடன் சேனா வீரர்களை நிற்க வைத்து தீக்ஷிதர் வருகையை எதிர்நோக்கியிருந்தான். இரவு நேரத்தில் இம்மாதிரி ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு தாதாசாரியார் ஒரு கட்டியங்காரனை அனுப்பி, அரசன் உங்களை அழைக்கின்றார் என்று இரண்டாவது யாமத்தில் தீக்ஷிதரிடம் கூறினான். பரமசிவாவதாரமான நமது தீக்ஷிதமணியானவர் அரசனுக்கு ஏதோ இந்த நள்ளிரவில் ஆபத்து வந்து விட்டது என்று எண்ணி மார்க்கஸஹாய ஈச்வரரை வழக்கம் போல் தியானம் செய்து கொண்டு அரண்மனைக்குக் கிளம்பினார்.

“ஒரு மலையை ஒத்ததும், கண கண என்று சப்திக்கும் மணியை கழுத்தில் கொண்டதுமான நந்தியின் மீது ஆரோஹணித்து ஸகல லோகபாலகர்களாலும் துதிக்கப்படுபவரும், ஆனந்த ஸாகரமும், பர்வதராஜன் புத்திரியான பார்வதி தேவியைப் பக்கத்திலே கொண்டுள்ள ஆனந்தமாகிற அம்ருதக் கடலும், ஸகல தேவர்களுக்கும் அரசருமான பரமேச்வரன் என் முன்னால் தோன்றட்டும். நம் குல தெய்வமான மார்க்கஸஹாயேச்வரரே நமது தாபத்தைப் பரிகரிக்கின்றவர். எவ்விடத்திலும் சம்புவின் பெயர் ஒன்றே எனக்குத்துணை” என்று இவ்வாறெல்லாம் தியானித்துக் கொண்டு, மார்க்கபந்து ஸ்தோத்ரத்தை சொல்லிக்கொண்டு, மார்க்கஸஹாயேச்வரர் தமக்குப் பாதுகாவாலாகத் துணைவருகின்றார் என்ற உறுதியுடன் சிஷ்யர்களோ வாஹனமோ ஒன்றுமில்லாமல் அரசன் அரண்மனையை நோக்கி பரமசிவ பக்தமணியாகிற ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் அவர்கள் நடந்து சென்றார். 

வழியிலே உருவின கத்திகளுடன் நின்று கொண்டிருந்த வீரர்களைப் பார்த்துக் கொண்டே சென்றார். அங்ஙனம் தனியாக வரும் பொழுது தீக்ஷிதேந்திரர் அறியாது அவரைச் சுற்றி மஹா வீரர்கள் வருவதைக்கண்ட அரசனின் சேனா வீரர்களும் சேனாபதியும் நடுங்கினவண்ணம் தூண் போல் நின்று செயலற்றவர்களாய் நின்று விட்டார்கள். தீக்ஷிதேந்திரர் அரசனது அந்தப்புரத்தை வந்தடைந்தார்கள். 

தீக்ஷிதருடைய வருகையை அந்த அரசன் எதிர்பார்க்கவேயில்லை. எனவே, தீக்ஷிதர் தனியாக வந்துள்ளதை அறிந்து, அவரது கால்களில் விழுந்து வணங்கி, “இது என்னே பாவம்! யான் என்ன குற்றம் புரிந்தேன். இந்த நேரத்தில் தாங்கள் இங்கு எழுந்தருளக் காரணம் யாதோ” என வேண்டி நின்றான். இவ்விதம் அரசன் கேட்டதும் ஸ்ரீமத் தீக்ஷிதேந்திரர் நடந்தது அனைத்தும் தாதாசாரியாரின் சூழ்ச்சியாலேயே என்று உணர்ந்து கொண்டார். அரசனை நோக்கி, அரசே தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதவர். நடந்ததனைத்தும் ஒரு துஷ்டனால் செய்யப்பட்ட காரியம், காலகாலனான பரமேச்வரன் உமக்கு ஒரு குறையும் இன்றிக் காப்பாற்றுவார். எல்லா விஷயமும் நாளை காலை உமக்குத் தெளிவாகத் தெரியும் என்று கூறி, அவனை ஆசீர்வதித்து விட்டு தமது இல்லம் வந்து சேர்ந்தார்.

மறுநாள் காலையில் அரசன் கோட்டை வாசலில் வந்து உருவின கத்திகளுடன் அசையாது நிறுகும் தனது சைனியத்தையும், சேனாபதியையும் பார்த்து இது என்ன விபரீதம்? என்று நினைத்தவனாய், பயத்துடன் மெள்ள மெள்ள காலால் நடந்துகொண்டே தீக்ஷிதரின் இல்லத்தை வந்தடைந்தான். கருணாமூர்த்தியான தீக்ஷிதர் அரசனை வரவேற்று அவனின் மனோநிலையைப் புரிந்துகொண்டு, அரசனுடன் அந்தப்புரம் வந்து சேர்ந்தார். அங்கு சேனையையும், சேனாபதியையும் பார்த்து சிவபெருமானைத் தியானித்துக் கொண்டே கருணை கடாக்ஷத்தைச் செலுத்தினார். 

அதுவரை அசைவற்று தூண்போல நின்ற சேனாபதியும், மற்றைய வீரர்களும் தீக்ஷிதரை நோக்கி, “கருணைக்கடலான ஐயனே! பரமாத்மாவே! அரசன் ஆணை என்று கபடமாகக்கூறி எங்களை இந்த பெரும் அபராதத்துக்கு தாதாசாரியார் ஆளாக்கிவிட்டார். நாங்கள் நிரபராதிகள்” என்று கூறி தாதாசாரியாரின் சூழ்ச்சியை அம்பலப்படுத்தினான். அரசன் கடுங்கோபம் கொண்டு தாதாசாரியரைத் தண்டிக்க முற்பட்டான். தீக்ஷிதேந்திரர் அவனைத் தடுத்து, விஷவ்ருக்ஷமானாலும் நாம் வளர்த்தால் அதைவெட்டுவது முறையல்ல என்று நீதிசாஸ்திரம் கூறுகிறது. சிசுபாலனிடம் கிருஷ்ணன் நூறு குற்றங்கள் பொறுத்தது போல நாமும் இவரிடம் பொறுப்போம். காலம்வரும் வரை பொறுப்பதே முறை என்று அரசனைச் சமாதானப்படுத்தினார். மஹானுடைய அறிவுரையை சிரமேற்கொண்டு அரசன் மிக்க சந்தோஷத்துடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு பல்லக்கில் ஏற்றி அவரைப் பட்டணப்பிரவேசம் செய்வித்து பெருமளவில் கெளரவித்தான். 

வாழ்நாள் எல்லாம் சிவப்பணி செய்து வாழ்ந்த இந்த மகான், தில்லை சிவபெருமானோடு கலந்து மோட்சம் அடைந்தார். 

இந்து சமயத்தின் தூண்களான கருமம், பக்தி, ஞானம் இவை மூன்றிற்கும் ஒரு இணையற்ற முன்மாதிரியாகவே இருந்து மறைந்தவர். சைவசமயம் வளர்ச்சிக்கும் மக்களின் ஆன்மிக வழிப்பாட்டிற்கும் பாடசாலை அமைத்து ஆன்மிக நூல்களையும் வழங்கி சேவை செய்த அப்பய்ய தீட்சிதர் இந்து மதத்தின் மாணிக்கக் கல் என்றே போற்றப்படுகிறார்.