Sunday, 29 January 2023

Vinaayaka Leelaa Stuti - sloka 18

Vinaayaka Leelaa Stuti - sloka 18 

॥ विनायक लीला स्तुतिः ॥

॥ விநாயக லீலா ஸ்துதி​: ॥

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


क्रीडाप्रवृत्ते जलधाविभास्ये वेलाजलेऽथाम्बुपतिः प्रभीतः । 
विचिन्त्य कस्येति सुरास्तदा तं विश्वेश्वरं वाग्भिरभिष्टुवन्ति ॥ १८॥

க்ரீடா³ப்ரவ்ருʼத்தே ஜலதா⁴விபா⁴ஸ்யே வேலாஜலே(அ)தா²ம்பு³பதி​: ப்ரபீ⁴த​: | 
விசிந்த்ய கஸ்யேதி ஸுராஸ்ததா³ தம்ʼ விஶ்வேஶ்வரம்ʼ வாக்³பி⁴ரபி⁴ஷ்டுவந்தி 18 

krīḍāpravṛtte jaladhāvibhāsye velājale'thāmbupatiḥ prabhītaḥ । 
vicintya kasyeti surāstadā taṃ viśveśvaraṃ vāgbhirabhiṣṭuvanti ॥ 18॥


जलधौ क्रीडा-प्रवृत्ते - ஜலதௌ⁴ க்ரீடா³-ப்ரவ்ருʼத்தே - ( யாரோ ) கடலினிடத்தில் விளையாட்டில் ஈடுபட்டு, 

वेला-जले अथ - வேலா-ஜலே அத² - கடலில் ( பெரிய ) அலை உண்டான போது,

कस्य इति विचिन्त्य - கஸ்ய இதி விசிந்த்ய - ( இது ) யாரால் என்று சிந்தித்து,

अम्बु-पतिः सुराः प्रभीतः - அம்பு³-பதி​: ஸுரா​: ப்ரபீ⁴த​: - கடலரசனும் தேவர்களும் பயந்தனர்,

तदा - ததா³ - பின்,

इभ-आस्ये - இப⁴-ஆஸ்யே - ( இவரால் என்றறிந்து ) யானை முகத்தவரிடத்தில் ( விநாயகரிடத்தில் வந்து ),

तं विश्व-ईश्वरं - தம்ʼ விஶ்வ-ஈஶ்வரம்ʼ - அந்த விச்வேச்வரரை ( விநாயகரை ),

वाग्भिः-अभि-स्तुवन्ति - 
வாக்³பி⁴​:-அபி⁴-ஸ்துவந்தி - ( தங்கள் ) வாக்கால் நன்றாக ஸ்துதித்தனர்.


பொருள் :

( யாரோ ) கடலினிடத்தில் விளையாட்டில் ஈடுபட்டு, கடலில் ( பெரிய ) அலை உண்டான போது, ( இது ) யாரால் என்று சிந்தித்து, கடலரசனும் தேவர்களும் பயந்தனர்., பின் ( இவரால் என்றறிந்து ) யானை முகத்தவரிடத்தில் ( விநாயகரிடத்தில் வந்து ), அந்த விச்வேச்வரரை ( விநாயகரை ), ( தங்கள் ) வாக்கால் நன்றாக ஸ்துதித்தனர். 18

Sunday, 22 January 2023

Vinaayaka Leelaa Stuti - sloka 17

Vinaayaka Leelaa Stuti - sloka 17  

॥ विनायक लीला स्तुतिः ॥ 

॥ விநாயக லீலா ஸ்துதி: ॥ 

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥ 


द्वैपायनोक्तं सुविचार्य येन स्वदन्तकोट्या निखिलं लिखित्वा । 
दत्तं पुराणं सुतमिन्दुमौलेः तमग्र्यरूपं मनसा स्मरामि ॥ १७ ॥ 

த்³வைபாயனோக்தம்ʼ ஸுவிசார்ய யேன ஸ்வத³ந்தகோட்யா நிகி²லம்ʼ லிகி²த்வா |  
த³த்தம்ʼ புராணம்ʼ ஸுதமிந்து³மௌலே: தமக்³ர்யரூபம்ʼ மனஸா ஸ்மராமி  17   

dvaipāyanoktaṃ suvicārya yena svadantakoṭyā nikhilaṃ likhitvā । 
dattaṃ purāṇaṃ sutamindumauleḥ tamagryarūpaṃ manasā smarāmi ॥ 17 ॥ 


द्वैपायन-उक्तं पुराणं - த்³வைபாயன-உக்தம்ʼ புராணம்ʼ - த்வைபாயனரால் ( வேத வ்யாஸரால் ) கூறப்பட்ட புராணத்தை ( பண்டைக் கதையை ), 

सुविचार्य - ஸுவிசார்ய - நன்கு ஆலோசித்து,  

येन स्व-दन्त-कोट्या - யேன ஸ்வ-த³ந்த-கோட்யா - தன் தந்தநுனியாகியதினால், 

निखिलं लिखित्वा - நிகி²லம்ʼ லிகி²த்வா - முழுவதும் எழுதி, 

दत्तं तं - த³த்தம்ʼ தம்ʼ - தந்தவரான அவரை, 

अग्र्य-रूपं - அக்³ர்ய-ரூபம்ʼ - மேலான ரூபம் உடையவரை, 

इन्दुमौलेः सुतं - இந்து³மௌலே: ஸுதம்ʼ - தலையில் சந்திரனை சூடியவரின் ( பரமசிவனாரின் ) மகனை , 

मनसा स्मरामि - மனஸா ஸ்மராமி - மனத்தால் நினைக்கிறேன். 


பொருள் : 

த்வைபாயனரால் ( வேத வ்யாஸரால் ) கூறப்பட்ட புராணத்தை ( பண்டைக் கதையை ) நன்கு ஆலோசித்து, தன் தந்தநுனியாகியதினால், முழுவதும் எழுதி தந்தவரான அவரை, மேலான ரூபம் உடையவரை, தலையில் சந்திரனை சூடியவரின் ( பரமசிவனாரின் ) மகனை ( விநாயகரை ) மனத்தால் நினைக்கிறேன். 17 


# सुविचार्य - ஸுவிசார்ய - நன்கு ஆலோசித்து. மஹாபாரதத்தை எழுத ஆரம்பிக்கும் போது எழுதுவதற்கு கையில் எதுவும் கொண்டு வரவில்லை, வ்யாஸரும் தரவில்லை. எழுத உட்கார்ந்தாகிவிட்டது. ஆகவே எதனால் எழுதலாம் என்று நன்கு ஆலோசித்து, பின் தன் தந்தத்தையே ஒடித்து அதன் நுனியால் எழுதினார். ( அல்லது ) 
எழுத ஆரம்பிக்கும் போது , ச்லோகத்தின் பொருளை நன்கு உணர்ந்தபின் தான் எழுத வேண்டும் என்று வ்யாஸர் கூறியிருந்தார். ஆகவே நன்கு ச்லோகங்களின் பொருளைப் பற்றி ஆலோசித்தார்., என்றும் கொள்ளலாம். 

# अग्र्य-रूपं - அக்³ர்ய-ரூபம்ʼ - தன் அழகை இழந்தாவது, பிறர்க்குப் பயன்படுவதான கிரந்தத்தைக் காக்க வேண்டும் என்கிற தியாக எண்ணத்தால் , அவரதுதன் தந்தத்தில் ஒன்றையே ஒடித்துவிட்டார். அவரது தியாக உள்ளத்தின் மேன்மையைக் காட்டுகின்ற ரூபமாம் இது.  

# इन्दुमौलेः सुतं - இந்து³மௌலே: ஸுதம்ʼ - சரி. இதை யாரிடமிருந்து கற்றிருப்பார் என்று யோசிக்க, தன் கண்டம் நீலநிறமானாலும் பரவாயில்லை , மக்களைக் காக்க வேண்டும் என்று விஷத்தைப் பருகிய பரமசிவனாரிடமிருந்து கற்றிருப்பார் என்று தெரிகிறது. 


மகாபாரதம் எழுதிய விநாயகர் : 

வியாசர் இமயமலையில் மூன்று ஆண்டுகள் கடும் தவம் செய்தார். அவருடைய சிந்தனையில் மகாபாரத வரலாறு தோன்றியது. பிரம்மர் அவர் முன் தோன்றி மகாபாரதத்தைப் பாடுக என்று உத்தவிட்டார். பாடுகின்றவர் எழுதினால் பாடுகின்ற வேகம் தடை படும். ஆதலால், தாம் பாடும் மகாபாரதத்தை எழுதி முடிக்க வல்லவர் யார் என்று வியாசர் சிந்தித்தார்.  

விநாயகர்தான் அதற்கு ஏற்றவர் என்று முடிவு செய்தார். விநாயகரை வழிபாடு செய்தார். விநாயகர் வியாசரின் முன் தோன்றினார். வியாசர் அவரிடம், மகாபாரதத்தை நான் பாடுவேன். நீர் அதை எழுத வேண்டும் என்று வேண்டினார். அதற்கு சம்மதித்த விநாயகர் நான் வேகமாக எழுதுவேன். நான் எழுதுகின்ற வேகத்துக்கு உம்மால் பாட முடியுமா என்றார்.  

வியாசர் அதுகேட்டு திகைத்தார். ஆகட்டும். நீர் எழுதுகின்ற வேகத்திற்கு ஏற்ப நான் பாடுவேன். ஆனால் பொருள் தெரிந்து எழுத வேண்டும் என்றார். பொருள் தெரிந்து எழுதுவதென்றால் வேகமாக எழுத முடியாது. விநாயகர் சரி என்றார். வியாசர் பாட தொடங்கினார். விநாயகர் தமது கொம்பினால் மேரு மலையில் எழுதலானார். 60 லட்சம் கிரந்தங்கள் பாடினார்.  
இதில் விநாயகருடைய எழுதும் வேகத்தை மட்டுப்படுத்தும் பொருட்டுக் கடினமான பதங்களை அமைத்து இடையே 8800 சுலோகங்கள் பாடினார். இதற்கு என்ன பொருள் என்று விநாயகர் சிறிது சிந்திக்கும்பொழுது பலப்பல சுலோகங்களை வியாசர் மனதில் ஆயத்தம் செய்து கொண்டார்.  

இவ்வாறு வியாசர் பாடிய அறுபது லட்சம் கிரந்தங்களில் 30 லட்சம் தேவருலகில் நின்றது. 15 லட்சம் அசுரவுலகில் நின்றது. 14 லட்சம் யட்சவுலகில் நின்றது. ஒரு லட்சம் மட்டுமே பூவுலகில் நின்றது.

Saturday, 21 January 2023

Sri Sitarama Stotram - Sloka 1

Sri Sitarama Stotram - Sloka 1

॥ श्री सीताराम स्तोत्रम् ॥

|| ஶ்ரீ ஸீதாராம ஸ்தோத்ரம் ||

|| ŚRĪ SĪTĀRĀMA STOTRAM ||


अयोध्यापुर-नेतारं मिथिलापुर-नायिकाम् ।
राघवाणामलङ्कारं वैदेहानामलङ्क्रियाम् ॥ १॥

அயோத்⁴யாபுர-நேதாரம்ʼ மிதி²லாபுர-நாயிகாம் ।
ராக⁴வாணாமலங்காரம்ʼ வைதே³ஹாநாமலங்க்ரியாம் ॥ 1॥

ayodhyāpura-netāraṃ mithilāpura-nāyikām ।
rāghavāṇāmalaṅkāraṃ vaidehānāmalaṅkriyām ॥ 1॥


பொருள் :

அயோத்தியா பட்டிணத்துக்கு நாயகனும், ரகு வம்சத்தில் பிறந்தவர்களுக்கு அலங்காரமும் (ஆகிய இராமனையும்); மிதிலா பட்டிணத்துக்கு நாயகியும், விதேஹ வம்சத்தில் பிறந்தவர்களுக்கு அலங்காரமும் (ஆகிய சீதையையும், ஆக இவ்விருவரையும் நான் வணங்குகிறேன்.) 1


Meaning :

[ I adore the Dual (Rama and Sita),] He (rāma) who is the hero of Ayodhya and adornment to Raghu clan and She (sītā) who is the heroine of Mithila and adornment to Videha clan. 1

Sunday, 8 January 2023

Vinaayaka Leelaa Stuti - sloka 16

Vinaayaka Leelaa Stuti - sloka 16 

॥ विनायक लीला स्तुतिः ॥

 விநாயக லீலா ஸ்துதி: 

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


हेरम्ब उद्यद्रविकोटिकान्तः पञ्चाननेनाप्यवलम्बितांसः ।
मुनीन्सुरान्भक्तजनांश्च सर्वान्स पातु रथ्यासु सदा गजास्यः ॥ १६॥

ஹேரம்ப³ உத்³யத்³ரவிகோடிகாந்த: பஞ்சானனேனாப்யவலம்பி³தாம்ʼஸ: | 
முனீன்ஸுரான்ப⁴க்தஜனாம்ʼஶ்ச ஸர்வான்ஸ பாது ரத்²யாஸு ஸதா³ க³ஜாஸ்ய:  16 

heramba udyadravikoṭikāntaḥ pañcānanenāpyavalambitāṃsaḥ ।
munīnsurānbhaktajanāṃśca sarvānsa pātu rathyāsu sadā gajāsyaḥ ॥ 16॥


हेरम्बः - ஹேரம்ப³: - அழகிய பிளிறல் உள்ளவர்,

उद्यद्-रवि-कोटि-कान्तः - உத்³யத்³-ரவி-கோடி-காந்த: - உதிக்கின்ற கோடி சூர்ய ஒளியுள்ளவர், 

पञ्च-आननेन-अपि-अवलम्बित-अंसः - பஞ்ச-ஆனனேன-அபி-அவலம்பி³த-அம்ʼஸ: - ஐந்து முகங்களைக் கொண்டவரால் ( பரமசிவனாரால் ) தோளில் தாங்கப்பட்டவர், 

मुनीन् सुरान् भक्तजनान् च सर्वान् - முனீன் ஸுரான் ப⁴க்தஜனான் ச ஸர்வான் - முனிவர்கள், தேவர்கள் மற்றும் அடியார்கள் அனைவரையும்,

रथ्यासु - ரத்²யாஸு - பெருவழிகளில் செல்கையில் ( பயணத்தில் ), 

सः गजास्यः - ஸ: க³ஜாஸ்ய: - அந்த யானை முகத்தவர் ( விநாயகர் ),

सदा पातु - ஸதா³ பாது - எப்பொழுதும் காக்கட்டும்.


பொருள் :

அழகிய பிளிறல் உள்ளவர், உதிக்கின்ற கோடி சூர்ய ஒளியுள்ளவர், ( ஐந்து முகங்களைக் கொண்டவரால் ) பரமசிவனாரால் தோளில் தாங்கப்பட்டவர், முனிவர்கள், தேவர்கள் மற்றும் அடியார்கள் அனைவரையும், பெருவழிகளில் செல்கையில் ( பயணத்தில் ) அந்த யானை முகத்தவர் ( விநாயகர் ) எப்பொழுதும் காக்கட்டும். 16


# ஹேரம்ப³: - உரக்கப் பிளிறுபவர் என்றும் கொள்ளலாம்.

# ரத்²யாஸு - பயணத்தில் என்பது வாழ்க்கைப் பயணத்தில் என்றும் கொள்ளலாம்.


* பாடபேதம் -- अवलम्बित-अंसः > विचुम्बित-आस्यः ; அவலம்பி³த-அம்ʼஸ: > விசும்பி³த-ஆஸ்ய: - முகத்தில் முத்தமிடப்பட்டவர்.