Sunday, 22 January 2023

Vinaayaka Leelaa Stuti - sloka 17

Vinaayaka Leelaa Stuti - sloka 17  

॥ विनायक लीला स्तुतिः ॥ 

॥ விநாயக லீலா ஸ்துதி: ॥ 

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥ 


द्वैपायनोक्तं सुविचार्य येन स्वदन्तकोट्या निखिलं लिखित्वा । 
दत्तं पुराणं सुतमिन्दुमौलेः तमग्र्यरूपं मनसा स्मरामि ॥ १७ ॥ 

த்³வைபாயனோக்தம்ʼ ஸுவிசார்ய யேன ஸ்வத³ந்தகோட்யா நிகி²லம்ʼ லிகி²த்வா |  
த³த்தம்ʼ புராணம்ʼ ஸுதமிந்து³மௌலே: தமக்³ர்யரூபம்ʼ மனஸா ஸ்மராமி  17   

dvaipāyanoktaṃ suvicārya yena svadantakoṭyā nikhilaṃ likhitvā । 
dattaṃ purāṇaṃ sutamindumauleḥ tamagryarūpaṃ manasā smarāmi ॥ 17 ॥ 


द्वैपायन-उक्तं पुराणं - த்³வைபாயன-உக்தம்ʼ புராணம்ʼ - த்வைபாயனரால் ( வேத வ்யாஸரால் ) கூறப்பட்ட புராணத்தை ( பண்டைக் கதையை ), 

सुविचार्य - ஸுவிசார்ய - நன்கு ஆலோசித்து,  

येन स्व-दन्त-कोट्या - யேன ஸ்வ-த³ந்த-கோட்யா - தன் தந்தநுனியாகியதினால், 

निखिलं लिखित्वा - நிகி²லம்ʼ லிகி²த்வா - முழுவதும் எழுதி, 

दत्तं तं - த³த்தம்ʼ தம்ʼ - தந்தவரான அவரை, 

अग्र्य-रूपं - அக்³ர்ய-ரூபம்ʼ - மேலான ரூபம் உடையவரை, 

इन्दुमौलेः सुतं - இந்து³மௌலே: ஸுதம்ʼ - தலையில் சந்திரனை சூடியவரின் ( பரமசிவனாரின் ) மகனை , 

मनसा स्मरामि - மனஸா ஸ்மராமி - மனத்தால் நினைக்கிறேன். 


பொருள் : 

த்வைபாயனரால் ( வேத வ்யாஸரால் ) கூறப்பட்ட புராணத்தை ( பண்டைக் கதையை ) நன்கு ஆலோசித்து, தன் தந்தநுனியாகியதினால், முழுவதும் எழுதி தந்தவரான அவரை, மேலான ரூபம் உடையவரை, தலையில் சந்திரனை சூடியவரின் ( பரமசிவனாரின் ) மகனை ( விநாயகரை ) மனத்தால் நினைக்கிறேன். 17 


# सुविचार्य - ஸுவிசார்ய - நன்கு ஆலோசித்து. மஹாபாரதத்தை எழுத ஆரம்பிக்கும் போது எழுதுவதற்கு கையில் எதுவும் கொண்டு வரவில்லை, வ்யாஸரும் தரவில்லை. எழுத உட்கார்ந்தாகிவிட்டது. ஆகவே எதனால் எழுதலாம் என்று நன்கு ஆலோசித்து, பின் தன் தந்தத்தையே ஒடித்து அதன் நுனியால் எழுதினார். ( அல்லது ) 
எழுத ஆரம்பிக்கும் போது , ச்லோகத்தின் பொருளை நன்கு உணர்ந்தபின் தான் எழுத வேண்டும் என்று வ்யாஸர் கூறியிருந்தார். ஆகவே நன்கு ச்லோகங்களின் பொருளைப் பற்றி ஆலோசித்தார்., என்றும் கொள்ளலாம். 

# अग्र्य-रूपं - அக்³ர்ய-ரூபம்ʼ - தன் அழகை இழந்தாவது, பிறர்க்குப் பயன்படுவதான கிரந்தத்தைக் காக்க வேண்டும் என்கிற தியாக எண்ணத்தால் , அவரதுதன் தந்தத்தில் ஒன்றையே ஒடித்துவிட்டார். அவரது தியாக உள்ளத்தின் மேன்மையைக் காட்டுகின்ற ரூபமாம் இது.  

# इन्दुमौलेः सुतं - இந்து³மௌலே: ஸுதம்ʼ - சரி. இதை யாரிடமிருந்து கற்றிருப்பார் என்று யோசிக்க, தன் கண்டம் நீலநிறமானாலும் பரவாயில்லை , மக்களைக் காக்க வேண்டும் என்று விஷத்தைப் பருகிய பரமசிவனாரிடமிருந்து கற்றிருப்பார் என்று தெரிகிறது. 


மகாபாரதம் எழுதிய விநாயகர் : 

வியாசர் இமயமலையில் மூன்று ஆண்டுகள் கடும் தவம் செய்தார். அவருடைய சிந்தனையில் மகாபாரத வரலாறு தோன்றியது. பிரம்மர் அவர் முன் தோன்றி மகாபாரதத்தைப் பாடுக என்று உத்தவிட்டார். பாடுகின்றவர் எழுதினால் பாடுகின்ற வேகம் தடை படும். ஆதலால், தாம் பாடும் மகாபாரதத்தை எழுதி முடிக்க வல்லவர் யார் என்று வியாசர் சிந்தித்தார்.  

விநாயகர்தான் அதற்கு ஏற்றவர் என்று முடிவு செய்தார். விநாயகரை வழிபாடு செய்தார். விநாயகர் வியாசரின் முன் தோன்றினார். வியாசர் அவரிடம், மகாபாரதத்தை நான் பாடுவேன். நீர் அதை எழுத வேண்டும் என்று வேண்டினார். அதற்கு சம்மதித்த விநாயகர் நான் வேகமாக எழுதுவேன். நான் எழுதுகின்ற வேகத்துக்கு உம்மால் பாட முடியுமா என்றார்.  

வியாசர் அதுகேட்டு திகைத்தார். ஆகட்டும். நீர் எழுதுகின்ற வேகத்திற்கு ஏற்ப நான் பாடுவேன். ஆனால் பொருள் தெரிந்து எழுத வேண்டும் என்றார். பொருள் தெரிந்து எழுதுவதென்றால் வேகமாக எழுத முடியாது. விநாயகர் சரி என்றார். வியாசர் பாட தொடங்கினார். விநாயகர் தமது கொம்பினால் மேரு மலையில் எழுதலானார். 60 லட்சம் கிரந்தங்கள் பாடினார்.  
இதில் விநாயகருடைய எழுதும் வேகத்தை மட்டுப்படுத்தும் பொருட்டுக் கடினமான பதங்களை அமைத்து இடையே 8800 சுலோகங்கள் பாடினார். இதற்கு என்ன பொருள் என்று விநாயகர் சிறிது சிந்திக்கும்பொழுது பலப்பல சுலோகங்களை வியாசர் மனதில் ஆயத்தம் செய்து கொண்டார்.  

இவ்வாறு வியாசர் பாடிய அறுபது லட்சம் கிரந்தங்களில் 30 லட்சம் தேவருலகில் நின்றது. 15 லட்சம் அசுரவுலகில் நின்றது. 14 லட்சம் யட்சவுலகில் நின்றது. ஒரு லட்சம் மட்டுமே பூவுலகில் நின்றது.

No comments:

Post a Comment