Monday, 28 February 2022

Sri Somasundara Stuti - Sloka 6

Sri Somasundara Stuti - Sloka 6

॥ श्री सोमसुन्दर स्तुतिः ॥

॥ ஶ்ரீ ஸோமஸுந்த³ர ஸ்துதி꞉ ॥

|| ŚRĪ SOMASUNDARA STUTIḤ ||


निजनेत्राम्बुजकृतपूजया परितोष्य यम् । 
श्रीपतिर्लभते चक्रं तं वन्दे सोमसुन्दरम् ॥ ६ ॥

நிஜநேத்ராம்பு³ஜக்ருʼதபூஜயா பரிதோஷ்ய யம் । 
ஶ்ரீபதிர்லப⁴தே சக்ரம்ʼ தம்ʼ வந்தே³ ஸோமஸுந்த³ரம் ॥ 6 ॥

nijanetrāmbujakṛtapūjayā paritoṣya yam । 
śrīpatirlabhate cakraṃ taṃ vande somasundaram ॥ 6 ॥


निज-नेत्र-अम्बुज-कृत-पूजया - நிஜ-நேத்ர-அம்பு³ஜ-க்ருʼத-பூஜயா - தன்னுடையதான தாமரைக் கண்ணைக் கொண்டு செய்யப்பட்ட பூஜையினால்,

यं परितोष्य ‍- யம்ʼ பரிதோஷ்ய - யாரை மகிழ்வித்து, 

श्रीपतिः - ஶ்ரீபதி꞉ - ஶ்ரீபதியாகிய பெருமாள்,

लभते चक्रं - லப⁴தே சக்ரம்ʼ - சக்கரத்தைப் பெற்றாரோ,

तं सोमसुन्दरं - தம்ʼ ஸோமஸுந்த³ரம்ʼ - அந்த ஸோமஸுந்தரரை

वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.


பொருள் :

தன்னுடையதான தாமரைக் கண்ணைக் கொண்டு செய்யப்பட்ட பூஜையினால், யாரை மகிழ்வித்து, ஶ்ரீபதியாகிய பெருமாள் சக்கரத்தைப் பெற்றாரோ, அந்த ஸோமஸுந்தரரை வணங்குகிறேன். 6


Meaning:

I adore that Somasundarar, after whom delighting with a Pooja with his eye (as a flower), Perumal gets chakram. 6


# பெருமாளுக்கு புண்டரீகாக்ஷன், பத்மாக்ஷன் என்றெல்லாம் பெயருண்டு. தாமரையிதழைப் போன்ற கண்களையுடையவர் என்று பொருள். இயல்பாகவே அப்படிப்பட்ட கண்களை உடையவர் என்றும் கொள்ளலாம்.

* நிஜ நேத்ர அம்புஜ க்ருத பூஜயா - தன்னுடைய/ விசேஷமான கண்ணாகிய தாமரையைக் கொண்டு செய்யப்பட்ட பூஜையினால்.

* நிஜ நேத்ராம்பு-ஜ க்ருத பூஜயா - தன்னுடைய ஆனந்தக் கண்ணீரைக் கொண்டு செய்யப்பட்ட பூஜையினால்.



பெருமாள் சக்கரம் பெற்ற சரித்திரம் :


திருமால் ஈசனிடம் சுதர்ஸன சக்கரம் பெற்ற வரலாறு சிவமஹாபுராணத்திலும் காணக்கிடைக்கிறது.

காஞ்சி புராணம் - திருமாற்பேற்றுப் படலம் (ஶ்ரீ சிவஞான சுவாமிகள் அருளியது) கூற்றுப்படி,

குபன் என்ற அரசன் ஒரு திருமால் பக்தன். அவனுக்கும் ததீசி முனிவருக்குமிடையே ஒரு முறை பகை ஏற்பட்டது. குபன், திருமாலிடம் முறையிட்டான். திருமால் ததீசி முனிவர் மீது தன் சக்கராயுதத்தை ஏவினார். முனிவரது வஜ்ர உடலை தாக்க முடியாமல் சக்கராயுதம் கூர் மழுங்கியது. அதனால் இத்தலத்தை அடைந்த திருமால், சக்கர தீர்த்தம் ஏற்படுத்தி, பாசுபத விரதம் பூண்டு, திருநீற்றை உடல் முழுவதும் பூசி, ருத்ராட்சம் அணிந்து சக்கரம் பெற வேண்டி, முறைப்படி ஈசனை பூஜை செய்து வந்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு ஆயிரம் நாமங்கள் சொல்லி அர்ச்சித்து வந்தார். ஒரு நாள், பூஜையின்போது ஈசனின் திருவிளையாடலால், ஒரு மலர் குறைந்தது. வழிபாட்டில் குறையேற்படலாகாது என்று எண்ணி, தன் கண்ணை பறித்து கண்மலரால் ஈசனை வழிபாடு செய்தார், திருமால். இறைவன் உளம் மகிழ்ந்து பெருவடிவு தாங்கி, திருமாலுக்கு காட்சி கொடுத்தார்.

பெருமான் திருமாலை பார்த்து பார்த்து, ‘‘நாராயணரே! தாமரை மலருக்காக உன் கண்ணை எடுத்து, அர்ச்சித்தமையால், உனக்கு தேன் மருவிய தாமரை மலர்க்கண்ணை அளித்தோம். இனி, நீ தாமரைக் கண்ணன். 'பதுமாக்கன்' என்று நீ பேறு பெற்றதால், இத்தலம் ‘திருமாற்பேறு’ என்று உன் திருப்பெயரால் விளங்கப்பெறும்’’ என்று அருள் செய்து ‘‘சுதர்ஸனம்’’ என்னும் பெயர் கொண்ட சக்கரப்படையை வழங்கினார். நெடுமால் மிக்க மகிழ்ந்து சிவனாரை மும்முறை வலம் வந்து வணங்கினார். ‘‘என் போன்று ஆயிரம் திருநாமங்கள் கூறி மலர்களால் வழிபடுபவர்களுக்கு வேண்டும் வரம் அருள வேண்டும்’’ என ஈசனை வேண்ட, அவ்வாறே வரம் அளித்தார்.

திருமால்பூர் அருள்மிகு மணிகண்டீச்வரர் கோயில் வேலூரில் அமைந்துள்ளது. 

இக்கோயிலில் பக்தர்களுக்கு சடாரி சார்த்தி, தீர்த்தம் தருவது தனி சிறப்பு.

இத்தலத்தை வழிபடுவோருக்கு உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு.

அன்று வரமளித்த பரமேச்வரரே இங்கு சோமசுந்தரராக வீற்றிருக்கிறார்.

Sunday, 27 February 2022

Vinaayaka Leelaa Stuti - sloka 15

Vinaayaka Leelaa Stuti - sloka 15

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥


आलिङ्गितं चारुरुचा मृगाक्ष्या सम्भोगलोलं मदविह्वलाङ्गम् ।
विघ्नौघविध्वंसनसक्तमेकं नमामि कान्तद्विरदाननं तम् ॥ १५॥ *

ஆலிங்கி³தம்ʼ சாருருசா ம்ருʼகா³க்ஷ்யா ஸம்போ⁴க³லோலம்ʼ மத³விஹ்வலாங்க³ம் |
விக்⁴னௌக⁴வித்⁴வம்ʼஸனஸக்தமேகம்ʼ நமாமி காந்தத்³விரதா³னனம்ʼ தம் || 15||

āliṅgitaṃ cārurucā mṛgākṣyā sambhogalolaṃ madavihvalāṅgam ।
vighnaughavidhvaṃsanasaktamekaṃ namāmi kāntadviradānanaṃ tam ॥ 15॥


चारुरुचा मृगाक्ष्या आलिङ्गितं - சாருருசா ம்ருʼகா³க்ஷ்யா ஆலிங்கி³தம்ʼ - அழகிய தோற்றமுடைய, மான் போன்ற விழியுடையவளால் அணைக்கப்பெற்றவரை,

सम्भोग-लोलं - ஸம்போ⁴க³-லோலம்ʼ - ( அந்த ) இன்பத்தில் ஆசையுடையவரை,

मद-विह्वल-अङ्गं - மத³-விஹ்வல-அங்க³ம்ʼ - மதஜலம் பட்டு நெகிழ்ந்த அங்கங்களுடையவரை,

विघ्न-औघ-विध्वंसन-सक्तं - விக்⁴ன-ஔக⁴-வித்⁴வம்ʼஸன-ஸக்தம்ʼ - வெள்ளம் போல் வரும் இடையூறுகளை ஒழிக்கத் திருவுள்ளம் கொண்டவரை,

एकं - ஏகம்ʼ - ( அப்படிப்பட்ட ) ஒரே தெய்வத்தை,

तं कान्त-द्वि-रद-आननं - தம்ʼ காந்த-த்³வி-ரத³-ஆனனம்ʼ - இரு தந்தங்களுடன் கூடிய மனம் கவரும் ( யானை ) முகமுடையவரை,

नमामि - நமாமி - வணங்குகிறேன்.


பொருள் :

அழகிய தோற்றமுடைய, மான் போன்ற விழியுடையவளால் அணைக்கப்பெற்றவரை, ( அந்த ) இன்பத்தில் ஆசையுடையவரை, மதஜலம் பட்டு நெகிழ்ந்த அங்கங்களுடையவரை, வெள்ளம் போல் வரும் இடையூறுகளை ஒழிக்கத் திருவுள்ளம் கொண்டவரை, ( அப்படிப்பட்ட ) ஒரே தெய்வத்தை, இரு தந்தங்களுடன் கூடிய மனம் கவரும் ( யானை ) முகமுடையவரை ( விநாயகரை ) வணங்குகிறேன். 15


# சாருருசா ம்ருʼகா³க்ஷ்யா ஆலிங்கி³தம்ʼ - அழகு நிறைந்த தன் அன்னையால் ( பார்வதி ) அன்புடன் தழுவிக்கொள்ளப்பட்டவரை, என்று கொள்க. ம்ருʼகா³க்ஷி என்பது அம்பாளின் நாமம்.

# ஸம்போ⁴க³-லோலம்ʼ - அன்னையால் நன்றாக செய்து தரப்படும் நைவேத்யத்திற்கு ( மோதகம் ) ஆசைப்படுபவரை, என்று கொள்க., போ⁴க³: - நைவேத்யம்.

# மத³-விஹ்வல-அங்க³ம்ʼ - ( அன்னையின் அணைப்பாலும், மோதகத்தின் இனிமையாலும் ஏற்பட்ட ) ஆனந்தத்தால் உடலும் உள்ளமும் நெகிழ்ந்தவரை, என்று கொள்க.

இத்தகைய ஆனந்த நிலையில் இருக்கும் போது வணங்கினால், வெள்ளம் போல் வரும் இடையூறுகளை ஒழித்தருள்வார்.
இவையெல்லாம் பால லீலைகள்.


* பாடபேதம் -- कान्त > कान्तं ; காந்த > காந்தம்.

Friday, 25 February 2022

Śrī Devyaṣṭakam - Sloka 8

Śrī Devyaṣṭakam - Sloka 8

॥ श्री देव्यष्टकम् ॥

|| ஶ்ரீ தே³வ்யஷ்டகம் ||

|| ŚRĪ DEVYAṢṬAKAM ||


शरणागतजीवानां सर्वदुःखविनाशिनीम् ।
सुखसम्पत्करां नित्यां वन्दे त्वां प्रकृतिं पराम् ॥ ८॥

ஶரணாக³தஜீவானாம்ʼ ஸர்வது³꞉க²விநாஶினீம் ।
ஸுக²ஸம்பத்கராம்ʼ நித்யாம்ʼ வந்தே³ த்வாம்ʼ ப்ரக்ருʼதிம்ʼ பராம் ॥ 8॥

śaraṇāgatajīvānāṃ sarvaduḥkhavināśinīm ।
sukhasampatkarāṃ nityāṃ vande tvāṃ prakṛtiṃ parām ॥ 8॥


शरणागत-जीवानां - ஶரணாக³த-ஜீவானாம்ʼ - சரணம் அடைந்த ஜீவன்களின் 

सर्व दुःख-विनाशिनीं - ஸர்வ து³꞉க²-விநாஶினீம்ʼ - துக்கங்கள் யாவையும் போக்குகின்றவளை, 

सुख-सम्पत्-करां - ஸுக²-ஸம்பத்-கராம்ʼ - சுகங்களையும், அவற்றில் திருப்தியையும் அளிப்பவளை,  

नित्यां - நித்யாம்ʼ - நித்தியமானவளை,

प्रकृतिं परां - ப்ரக்ருʼதிம்ʼ பராம்ʼ - பரா பிரகிருதியானவளை,  

त्वां वन्दे - த்வாம்ʼ வந்தே³ - தங்களை வணங்குகிறேன். 


பொருள் :

சரணம் அடைந்த ஜீவன்களின் துக்கங்கள் யாவையும் போக்குகின்றவளும், சுகங்களையும், அவற்றில் திருப்தியையும் அளிப்பவளும், பரா பிரகிருதியானவளுமான தங்களை வணங்குகிறேன். 8


Meaning :

Oh goddess who destroys all the sorrows of beings surrendering to you,
Oh Goddess who grants wealth and pleasure , I salute you who is the divine nature. 8