Vinaayaka Leelaa Stuti - sloka 16
॥ विनायक लीला स्तुतिः ॥
விநாயக லீலா ஸ்துதி:
॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥
हेरम्ब उद्यद्रविकोटिकान्तः पञ्चाननेनाप्यवलम्बितांसः ।
मुनीन्सुरान्भक्तजनांश्च सर्वान्स पातु रथ्यासु सदा गजास्यः ॥ १६॥
ஹேரம்ப³ உத்³யத்³ரவிகோடிகாந்த: பஞ்சானனேனாப்யவலம்பி³தாம்ʼஸ: |
முனீன்ஸுரான்ப⁴க்தஜனாம்ʼஶ்ச ஸர்வான்ஸ பாது ரத்²யாஸு ஸதா³ க³ஜாஸ்ய: 16
heramba udyadravikoṭikāntaḥ pañcānanenāpyavalambitāṃsaḥ ।
munīnsurānbhaktajanāṃśca sarvānsa pātu rathyāsu sadā gajāsyaḥ ॥ 16॥
हेरम्बः - ஹேரம்ப³: - அழகிய பிளிறல் உள்ளவர்,
उद्यद्-रवि-कोटि-कान्तः - உத்³யத்³-ரவி-கோடி-காந்த: - உதிக்கின்ற கோடி சூர்ய ஒளியுள்ளவர்,
पञ्च-आननेन-अपि-अवलम्बित-अंसः - பஞ்ச-ஆனனேன-அபி-அவலம்பி³த-அம்ʼஸ: - ஐந்து முகங்களைக் கொண்டவரால் ( பரமசிவனாரால் ) தோளில் தாங்கப்பட்டவர்,
मुनीन् सुरान् भक्तजनान् च सर्वान् - முனீன் ஸுரான் ப⁴க்தஜனான் ச ஸர்வான் - முனிவர்கள், தேவர்கள் மற்றும் அடியார்கள் அனைவரையும்,
रथ्यासु - ரத்²யாஸு - பெருவழிகளில் செல்கையில் ( பயணத்தில் ),
सः गजास्यः - ஸ: க³ஜாஸ்ய: - அந்த யானை முகத்தவர் ( விநாயகர் ),
सदा पातु - ஸதா³ பாது - எப்பொழுதும் காக்கட்டும்.
பொருள் :
அழகிய பிளிறல் உள்ளவர், உதிக்கின்ற கோடி சூர்ய ஒளியுள்ளவர், ( ஐந்து முகங்களைக் கொண்டவரால் ) பரமசிவனாரால் தோளில் தாங்கப்பட்டவர், முனிவர்கள், தேவர்கள் மற்றும் அடியார்கள் அனைவரையும், பெருவழிகளில் செல்கையில் ( பயணத்தில் ) அந்த யானை முகத்தவர் ( விநாயகர் ) எப்பொழுதும் காக்கட்டும். 16
# ஹேரம்ப³: - உரக்கப் பிளிறுபவர் என்றும் கொள்ளலாம்.
# ரத்²யாஸு - பயணத்தில் என்பது வாழ்க்கைப் பயணத்தில் என்றும் கொள்ளலாம்.
No comments:
Post a Comment