॥ विनायक लीला स्तुतिः ॥
|| விநாயக லீலா ஸ்துதி: ||
॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥
निरन्तरं संस्कृतदानपट्टे लग्नां तु गुञ्जद्भ्रमरावलीं वै ।
तं श्रोत्रतालैरपसारयन्तं भजे गजास्यं निजहृत्सरोजे ॥ १०॥
நிரந்தரம்ʼ ஸம்ʼஸ்க்ருʼததா³னபட்டே லக்³னாம்ʼ து கு³ஞ்ஜத்³ப்⁴ரமராவலீம்ʼ வை |
தம்ʼ ஶ்ரோத்ரதாலைரபஸாரயந்தம்ʼ ப⁴ஜே க³ஜாஸ்யம்ʼ நிஜஹ்ருʼத்ஸரோஜே || 10||
nirantaraṃ saṃskṛtadānapaṭṭe lagnāṃ tu guñjadbhramarāvalīṃ vai ।
taṃ śrotratālairapasārayantaṃ bhaje gajāsyaṃ nijahṛtsaroje ॥ 10॥
संस्कृत-दान-पट्टे लग्नां तु - ஸம்ʼஸ்க்ருʼத-தா³ன-பட்டே லக்³னாம்ʼ து - தூயதாக்கப்பட்ட கன்னத்தில் வழியும் மதநீர்க்கசிவில் மயங்கி,
गुञ्जद्-भ्रमर-आवलीं वै - கு³ஞ்ஜத்³-ப்⁴ரமர-ஆவலீம்ʼ வை - மொய்க்கின்ற வண்டுக் கூட்டங்களை,
श्रोत्र-तालैः - ஶ்ரோத்ர-தாலை: - ( தன் ) காதுகளை ஆட்டுகின்ற விதத்தில்,
निरन्तरं - நிரந்தரம்ʼ - ஓய்வின்றி,
अपसारयन्तं - அபஸாரயந்தம்ʼ - விரட்டுகின்றவரான,
तं गजास्यं - தம்ʼ க³ஜாஸ்யம்ʼ - அந்த ̅யானை முகத்தவரை ( கணேசரை ) ,
निजहृत्-सरोजे - நிஜஹ்ருʼத்-ஸரோஜே - பக்தியில் மலர்ந்த ( என் ) இதயத்தாமரையில் எண்ணி̅,
भजे - ப⁴ஜே - வழிபடுகிறேன்.
பொருள் :
தூயதாக்கப்பட்ட கன்னத்தில் வழியும் மதநீர்க்கசிவில் மயங்கி மொய்க்கின்ற வண்டுக் கூட்டங்களை, ( தன் ) காதுகளை ஆட்டுகின்ற விதத்தில் ஓய்வின்றி விரட்டுகின்றவரான அந்த ̅யானை முகத்தவரை ( கணேசரை ) , பக்தியில் மலர்ந்த ( என் ) இதயத்தாமரையில் எண்ணி̅ வழிபடுகிறேன். 10
# யானை பெரிய காதை விசிறி மாதிரி ஆட்டிக் கொள்வது ரொம்ப அழகு. பிராணி வர்க்கத்திலேயே யானை ஒன்றால்தான் இப்படிக் காதால் விசிறி போட்டுக்கொள்ள முடிவது. ஏதாவது பூச்சி பொட்டை விரட்டுவதற்காக ஒரு தரம், இரண்டு தரம் வேண்டுமானால் மாடுகூடக் காதை ஆட்ட முடியுமே தவிர, யானை மாதிரி ஸதா பண்ண முடியாது. மாடு ஏதோ கொஞ்சம் ஆட்டுவதற்குக்கூட ‘ஸ்ட்ரெய்ன்’ பண்ணிக் கொள்ள வேண்டியிருக்கிறது. யானைதான் அநாயாஸமாக, ரொம்ப இயற்கையாக எப்பப் பார்த்தாலும் காதை ஆட்டிக்கொண்டே இருப்பது. ‘கஜாஸ்பாலம்’ [கஜ ஆஸ்பாலம்], ‘கஜதாளம்’ என்றே அதற்குப் பேர் கொடுத்து வைத்திருக்கிறது. தாளம் என்றால் பனை, அதாவது விசிறி. பாட்டுக்கு விரலால் போடுவதும் தாளம். ஆனை விசிறி மாதிரியுள்ள காதை ஒரே சீராகத் தாளம் போடுகிற மாதிரி அசைத்துக்கொண்டே இருக்கிறது!
யானை காதை ஆட்டுவதில் அழகு இருப்பதோடு ஒரு ‘பர்பஸும் இருக்கிறது. மதம் பிடிக்கிற காலத்தில் அதன் முகத்தில் கன்னப் பிரதேசத்தில் மத ஜலம் ஸதாவும் துளித்துக் கொண்டிருக்கும். அதற்காக ஈ, எறும்புகள் ஏகமாக மொய்க்க வரும். அதுகளை விரட்டுவதற்கு வசதியாகவே பகவான் யானைக்கு விசிறிக் காதைக் கொடுத்து, அதனால் விசிறிக் விட்டுக் கொள்ளும் திறமையையும் கொடுத்திருக்கிறார்.
விக்நேச்வரரின் கன்னத்தில் மத ஜலம் வழிந்து கொண்டு இருப்பதை ஆசார்யாள் “கபோல தான வாரணம்” என்று [கணேச பஞ்சரத்தினத்தில்] சொல்லியிருக்கிறார். ‘கபோலம்’ என்றால் கன்னம். ‘தானம்’ என்றால் மத ஜலம்.
பிள்ளையார் பெருக விடும் மத ஜலம் என்பது ஆனந்த தாரைதான், க்ருபா தாரைதான்! பரம மதுரமாக இருக்கும் அம்ருதம் அது. அந்த மாதூர்ய மத நீரை ருசி பார்ப்பதற்காக வண்டுகள் ஏகமாக வரும். இதையும் ஆசார்யாள் ஒரு ஸ்தோத்திரத்தில்* சொல்லியிருக்கிறார்.
“கலத்-தான கண்டம் மிலத் ப்ருங்க ஷண்டம்”
மத ஜலத்தை மொய்க்கும் வண்டுகளை விரட்டுவதற்காகப் பிள்ளையார் விசிறிக் காதை ஆட்டிக் கொண்டே இருக்கிறார். கோபத்தில் விரட்டுவதல்ல. குழந்தை ஸ்வாமிக்கும் இது ஒரு விளையாட்டுதான். வண்டுகளும் அவரிடத்தில் இந்த விளையாட்டுக்காகத்தான் வருவது. அவருடைய தர்சனமே அவற்றுக்கு அம்ருத பானமாக இருக்குமாதலால் மத ஜலத்தைக் குடிக்க வேண்டுமென்பதில்லை. விளையாடணும், அவர் தங்களுக்கு விசிறி விடணும் என்றேதான் அதுகள் கன்னத்தண்டை வந்து மொய்க்கும். நாம் குழந்தை காதில் விளையாட்டாக ‘டுர்ர்’ என்று கத்தி அது மயிர்கூச்சலெடுப்பதைப் பார்த்து ஸந்தோஷப்படுகிறோமோல்லியோ? அந்த மாதிரிப் பிள்ளையாருடைய பெரிய காதிலே அதிர அடிக்கிற மாதிரி தங்களுக்கே உரிய ஜங்கார சப்தம் போட்டு வேடிக்கை பண்ணணும் என்றே வண்டுக் கூட்டம் வரும். அந்த வேடிக்கை விளையாட்டை புரிந்து கொண்டு அவரும் காதை ஆட்டி ஆட்டி அதுகளை விரட்டுகிற மாதிரிப் பண்ணுவார். அந்தக் காற்றிலே அதுகள் மாற்றி மாற்றி ஒடிப் போவதும், மறுபடி வந்து மொய்ப்பதுமாக அமர்க்களம் பண்ணும், மதஜலத்திலே விசிறிக் காதின் காற்றுப் பட்டு ஸ்வாமிக்கு ஜில்லென்று ஆனந்தமாயிருக்கும்.
ராகவ சைதன்யர் என்று ஒருத்தர் “மஹாகணபதி ஸ்தோத்ரம்” என்று செய்திருக்கிறார். அதில் மந்த்ர சாஸ்த்ர விஷயங்களெல்லாம் வருவதோடு அழகான கவிதா வர்ணனையும் அழகான வாக்கில் வருகிறது. விக்நேச்வரர் விசிறிக் காதை ஆட்டி வண்டுக் கூட்டத்தை விரட்டுவது போல விளையாடுவதை அதில் நீள நெடுக வார்த்தைகளைக் கோத்து அழகாகச் சொல்லியிருக்கிறது!
தாநாமோத-விநோத-லுப்த-மதுப ப்ரோத்ஸாரணாவிர்பவத்
கர்ணாந்தோலன-கேலனோ விஜயதே தேவோ கணக்ராமணீ
‘தான ஆமோதம்’ என்றால் மதஜலத்தின் ஸுகந்தம். ஸ்வாமி பெருக்கும் மத ஜலம் கமகமவென்று வாஸனை அடிக்கிறது. அந்த விநோதமான, அதாவது இன்பமூட்டுகிற வாஸனையை மோந்ததில் வண்டுகளுக்கு ஒரே பேராசை உண்டாகிறது. மத ஜலத்தை அப்படியே குடித்துவிட வேண்டுமென்று! ‘லுப்த மதுப’ என்றால் பேராசை கொண்ட வண்டுகள். அல்லது வாஸனையில் மயங்கிப்போன வண்டுகள் என்றும் அர்த்தம் பண்ணலாம். அந்த வண்டுகளை விரட்டணுமென்று ஸ்வாமி நினைக்கிறார். ‘ப்ரோத்ஸாரணம்’ என்றால் விரட்டுவது, விலக்குவது. இந்த நினைப்பிலிருந்து ஒரு விளையாட்டு ஆவிர்பாவமாகிறது, விளைகிறது. ‘கேலனம்’ என்றால் விளையாட்டு. என்ன விளையாட்டு! ‘கர்ணாந்தோலன கேலனம்’, ‘கர்ண ஆந்தோலனம்’ என்றால் காதை முன்னேயும் பின்னேயுமாக ஆட்டுவது.
ஊஞ்சலுக்கு ஆந்தோலம் என்று பெயர். தோலம் என்று மட்டும் சொன்னாலும் அதே அர்த்தம்தான். தோல உத்ஸவத்தைத்தான் ‘டோலோத்ஸவம்’ என்று சொல்லி ஊஞ்சல் போட்டு ஸ்வாமியை ஆட்டி ஸந்தோஷப்படுகிறோம். ‘டோலி’ கூட இதோடு ஸம்பந்தப்பட்டதுதான்.
காதை ஆட்டி வண்டை விரட்டி விளையாடும்போது விக்நேச்வரர் கூடுதலான அழகாக விளங்குகிறார். ‘விஜயதே’ – அழகாக விளங்குகிறார், வெற்றி வீரராக விளங்குகிறார். படையெடுக்கும் வண்டுக் கூட்டத்தை விரட்டியடிக்கும் வெற்றி வீரராக விளங்குகிறார்.
No comments:
Post a Comment