Thursday, 22 August 2019

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 3

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan  -  Sloka 3

॥  श्री कृष्णाष्टकम्  ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம்  ||

||  ŚRĪ KṚṢṆĀṢṬAKAM  ||

गोपिकानन्दलीलाय नवनीतप्रियाय च ।
वेणुगानाभिलोलाय राधाकृष्णाय ते नमः ॥ ३॥

கோ³பிகாநந்த³லீலாய நவநீதப்ரியாய ச ।
வேணுகா³நாபி⁴லோலாய ராதா⁴க்ருʼஷ்ணாய தே நம: ॥ 3॥

gopikānandalīlāya navanītapriyāya ca ।
veṇugānābhilolāya rādhākṛṣṇāya te namaḥ ॥ 3॥

गोपिका-नन्द-लीलाय   -  கோ³பிகா-நந்த³-லீலாய  -  கோபிகைகள் மகிழும்படியாக லீலைகளைச் செய்தவருக்கு,

नवनीत-प्रियाय च  -  நவனீத-ப்ரியாய ச  -  வெண்ணெயின் மீது நாட்டம் உடையவருக்கு,

वेणु-गान-अभि-लोलाय  -  வேணு-கா³ன-அபி⁴-லோலாய  -  வேணுகானம் செய்தவாறு  ( புல்லாங்குழல் இசைத்துக் கொண்டு ) ஆடித் திரிந்தவருக்கு,

राधाकृष्णाय  -  ராதா⁴க்ருʼஷ்ணாய  -  ராதையினுடைய கிருஷ்ணனுக்கு,

ते नमः  -  தே நம:  -  உமக்கு ( ஸ்ரீ கிருஷ்ணனுக்கு )  நமஸ்காரம்.

பொருள் :

கோபிகைகள் மகிழும்படியாக லீலைகளைச் செய்தவரும்,
வெண்ணெயின் மீது நாட்டம் உடையவரும், வேணுகானம் செய்தவாறு  ( புல்லாங்குழல் இசைத்துக் கொண்டு ) ஆடித் திரிந்தவரும், ராதையினுடைய கிருஷ்ணனுமான உமக்கு ( ஸ்ரீ கிருஷ்ணருக்கு )  நமஸ்காரம்.   3

#  கோபிகைகள் போல் மற்ற விஷய ஸ்மரனை நீங்கி, பகவத் ஸ்மரனை ஏற்படட்டும்.

#  தூய்மையான, ஸாத்வீகமான, கருணையினால் நெகிழும் தன்மையதான, கண்ணனை ஸ்மரித்தவுடன் உருகுவதான மனங்கள் கண்ணனால்  வெண்ணெயென திருடப்படட்டும்.

#  வெற்றிடமாக உள்ள புல்லாங்குழல் போல தனக்கென்று ஸங்கல்பங்கள் ஏதுமில்லாதவர்கள் கண்ணனால் கருவிகளாக இயக்கப்படட்டும்.

No comments:

Post a Comment