Friday, 23 August 2019

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 4

Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan  -  Sloka 4

॥  श्री कृष्णाष्टकम्  ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம்  ||

||  ŚRĪ KṚṢṆĀṢṬAKAM  ||

गोविन्दाय मुकुन्दाय कंसादिरिपुदारिणे ।
मातापितृसुनन्दाय द्वारकापतये नमः ॥ ४॥

கோ³விந்தா³ய முகுந்தா³ய கம்ஸாதி³ரிபுதா³ரிணே ।
மாதாபித்ருʼஸுநந்தா³ய த்³வாரகாபதயே நம: ॥ 4॥

govindāya mukundāya kaṃsādiripudāriṇe ।
mātāpitṛsunandāya dvārakāpataye namaḥ ॥ 4॥

गोविन्दाय  -  கோ³விந்தா³ய  -  பசுக்களைக் காப்பவருக்கு,

मुकुन्दाय  -  முகுந்தா³ய  -  முக்தியை அளிப்பவருக்கு,

कंसादि-रिपु-दारिणे   -  கம்ʼஸாதி³-ரிபு-தா³ரிணே  -  கம்சன் முதலிய எதிரிகளை வதைத்தவருக்கு,

माता-पितृ-सुनन्दाय   -  மாதா-பித்ருʼ-ஸுனந்தா³ய  -  அன்னை, தந்தைக்கு ஆனந்தம் அளித்தவருக்கு,

द्वारकापतये  -  த்³வாரகாபதயே  -  துவாரகையின் தலைவருக்கு,

नमः  -  நம:  -  நமஸ்காரம்.

பொருள் :

பசுக்களைக் காப்பவரும், முக்தியை அளிப்பவரும், கம்சன் முதலிய எதிரிகளை வதைத்தவரும்; அன்னை, தந்தைக்கு ஆனந்தம் அளித்தவரும், துவாரகையின் தலைவருமான ( ஸ்ரீகிருஷ்ணருக்கு ) நமஸ்காரம்.   4

#  கோவிந்த நாமத்திற்கு பல அர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. பசுக்களைக் காப்பவன், பூமியை மீட்டவன், வேதங்களால் அறியப்படுபவன்.

#  கண்ணபிரான் கோகுலத்தில் பசுக்களை மேய்த்துக் கொண்டும், வெண்ணெய் திருடிக்கொண்டும் மேலும் பலலீலைகளைச் செய்தவண்ணம் இருந்தார்.

#  தன்னுடைய இந்த லீலைகளால் கோகுலத்தில் இருந்த அனைத்து ஜீவன்களுக்கும், மற்ற விஷய ஸ்மரனையிலிருந்து முக்தியளித்து தன்னையே ஸ்மரிக்கும்படி அருளினான்.

#  அதைப் பொறுக்காத அரக்கர்கள், தாங்களும் முக்தியடைந்திட, பூதனை முதலாக வரிசையாக வந்தனர். கண்ணனும் யாரையும் ஏமாற்றாமல் மீதமின்றி வந்த அனைவருக்கும் முக்தியளித்தான்.

#  கம்சனுக்கு முக்தியளித்த பின், தன்னைப் பெற்ற அன்னை தேவகியையும், தந்தை வஸுதேவரையும் சிறையிலிந்து விடுவித்து  ஆனந்தமளித்தான்.

No comments:

Post a Comment