Monday, 10 June 2019

Sri Vaidyanaatha Ashtakam - Introduction

Sri Vaidyanaatha Ashtakam -  Introduction

வேதங்களில் "பிஷக்" (வைத்தியன்) என்ற பதம் அதிகமாக சிவபெருமானையே குறிக்கிறது. அவரையே வைத்தியர்களுக்கெல்லாம் நாதர் வைத்தியநாதர் என்று உலகம் போற்றுகிறது.

அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. இத்தலத்திலேயே இராமர் தனக்குதவிய ஜடாயுவிற்கு ( கழுகு ) அந்திமக்கிரியையை செய்தார் என்றும், அங்காரகனுக்கு ஏற்பட்ட குஷ்ட ரோகம் நிவர்த்தி ஆன தலம் என்றும், குமரனாகிய முருகப்பெருமான் போருக்கு முன் தன் அன்னையிடம் வேலாயுதம் பெற்ற தலம் என்றும் அறியப்படுகிறது.

பொதுவாக நவக்கிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவக்கிரகங்கள் அனைத்தும் வைத்தியநாதர் சன்னதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை.

நோய் தீர்க்கும் திருச்சாந்து: 

4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது. இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு "திருச்சாந்து' எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. தோல் நோய்களுக்கு, இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர். வைத்தியநாதர் தன்னை வணங்கும் மக்களின் சாதாரண வியாதிகளை மட்டுமின்றி,  பிறவிப்பிணியையே தீர்த்து விடுபவர்.

சடாயுகுண்டம்: 

இத்தலத்தில் சம்பாதி சடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். சடாயுவின் வேண்டுகோளின்படி இராமபிரான் இத்தலத்தில் (விபூதி குண்டத்தில்) சிதையடுக்கிச் சாடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் சடாயு குண்டம் எனப்பட்டது.

அங்காரகனுக்கு ( செவ்வாய் கிரகம் ) வெண்குஷ்ட நோய் வந்தது. அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. வைத்தீசுவரன் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது.

இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.

வைத்தியநாதரைப் போற்றும்விதமாக இவ்வைத்யநாத அஷ்டகம் விளங்குகிறது. இதன் இறுதியில் உள்ள சுலோகம் பா(வா)லாம்பாகேசா ! வைத்யேசா ! பவரோகஹரா ! இந்த மூன்று நாமங்களை தினமும் சொல்பவர்க்கு மஹாரோகம்  நிவரத்தி ஆகும் என்று அறுதியிடுகிறது.

Lord Shiva is considered as the king among physicians. He is worshipped in this form in Purlee Vaijyanath. He is also worshipped in this form at a great temple in Tamil Nadu known as Vaitheeswaran Koil(Temple of the lord of physicians). It is believed that Lord Rama performed the cremation of the bird Jatayu in this spot. It is also believed that Lord Angaraka(planet Mars) who was afflicted by leprosy got cured in this place. It is also believed that Lord Subramanya got his trident(vel) after worshipping in this temple. There is a temple tank called Siddha Amrutha Theertha(the all curing nectar water) in this temple. Bathing in this tank is supposed to cure all diseases. Tiru Chandu pills distributed in this temple are considerd as a cure of all diseases. This is purported to be the medicine, which Vaidyanatha gave to Angaraka to cure his illness.

॥ வைத்³யநாதா²ஷ்டகம் ॥

ஶ்ரீராமஸௌமித்ரிஜடாயுவேத³ ஷடா³நநாதி³த்ய குஜார்சிதாய ।
ஶ்ரீநீலகண்டா²ய த³யாமயாய ஶ்ரீவைத்³யநாதா²ய நம:ஶிவாய ॥ 1॥

ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ।
ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ஶம்போ⁴ மஹாதே³வ ॥

க³ங்கா³ப்ரவாஹேந்து³ ஜடாத⁴ராய த்ரிலோசநாய ஸ்மர காலஹந்த்ரே ।
ஸமஸ்த தே³வைரபி⁴பூஜிதாய ஶ்ரீவைத்³யநாதா²ய  நம: ஶிவாய ॥ 2॥

ஶம்போ⁴ மஹாதே³வ ....

ப⁴க்த:ப்ரியாய த்ரிபுராந்தகாய பிநாகிநே து³ஷ்டஹராய நித்யம் ।
ப்ரத்யக்ஷலீலாய மநுஷ்யலோகே ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 3॥

ஶம்போ⁴ மஹாதே³வ ....

ப்ரபூ⁴தவாதாதி³ ஸமஸ்தரோக³ ப்ரநாஶகர்த்ரே முநிவந்தி³தாய ।
ப்ரபா⁴கரேந்த்³வக்³நி விலோசநாய ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 4॥

ஶம்போ⁴ மஹாதே³வ ....

வாக் ஶ்ரோத்ர நேத்ராங்க்⁴ரி விஹீநஜந்தோ: வாக்ஶ்ரோத்ரநேத்ராங்க்⁴ரிஸுக²ப்ரதா³ய ।
குஷ்டா²தி³ஸர்வோந்நதரோக³ஹந்த்ரே ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 5॥

ஶம்போ⁴ மஹாதே³வ ....

வேதா³ந்தவேத்³யாய ஜக³ந்மயாய யோகீ³ஶ்வரத்³யேய பதா³ம்பு³ஜாய ।
த்ரிமூர்திரூபாய ஸஹஸ்ரநாம்நே ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 6॥

ஶம்போ⁴ மஹாதே³வ ....

ஸ்வதீர்த²ம்ருʼத்³ப⁴ஸ்மப்⁴ருʼதாங்க³பா⁴ஜாம் பிஶாசது:³கா²ர்திப⁴யாபஹாய ।
ஆத்மஸ்வரூபாய ஶரீரபா⁴ஜாம் ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 7॥

ஶம்போ⁴ மஹாதே³வ ....

ஶ்ரீநீலகண்டா²ய வ்ருʼஷத்⁴வஜாய ஸ்ரக்க³ந்த⁴ ப⁴ஸ்மாத்³யபி⁴ஶோபி⁴தாய ।
ஸுபுத்ரதா³ராதி³ ஸுபா⁴க்³யதா³ய ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 8॥

ஶம்போ⁴ மஹாதே³வ ....

வாலாம்பி³கேஶ வைத்³யேஶ ப⁴வரோக³ஹரேதி ச ।
ஜபேந்நாமத்ரயம் நித்யம் மஹாரோக³நிவாரணம் ॥ 9॥

ஶம்போ⁴ மஹாதே³வ ....

   ॥ இதி ஶ்ரீ வைத்³யநாதா²ஷ்டகம் ॥

॥ vaidyanāthāṣṭakam ॥

śrīrāmasaumitrijaṭāyuveda ṣaḍānanāditya kujārcitāya ।
śrīnīlakaṇṭhāya dayāmayāya śrīvaidyanāthāya namaḥśivāya ॥ 1॥

śaṃbho mahādeva śaṃbho mahādeva śaṃbho mahādeva śaṃbho mahādeva ।
śaṃbho mahādeva śaṃbho mahādeva śaṃbho mahādeva śaṃbho mahādeva ॥

gaṅgāpravāhendu jaṭādharāya trilocanāya smara kālahantre ।
samasta devairabhipūjitāya śrīvaidyanāthāya  namaḥ śivāya ॥ 2॥

śaṃbho mahādeva ....

bhaktaḥpriyāya tripurāntakāya pinākine duṣṭaharāya nityam ।
pratyakṣalīlāya manuṣyaloke śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 3॥

śaṃbho mahādeva ....

prabhūtavātādi samastaroga pranāśakartre munivanditāya ।
prabhākarendvagni vilocanāya śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 4॥

śaṃbho mahādeva ....

vāk śrotra netrāṅghri vihīnajantoḥ vākśrotranetrāṃghrisukhapradāya ।
kuṣṭhādisarvonnatarogahantre śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 5॥

śaṃbho mahādeva ....

vedāntavedyāya jaganmayāya yogīśvaradyeya padāmbujāya ।
trimūrtirūpāya sahasranāmne śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 6॥

śaṃbho mahādeva ....

svatīrthamṛdbhasmabhṛtāṅgabhājāṃ piśācaduḥkhārtibhayāpahāya ।
ātmasvarūpāya śarīrabhājāṃ śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 7॥

śaṃbho mahādeva ....

śrīnīlakaṇṭhāya vṛṣadhvajāya srakgandha bhasmādyabhiśobhitāya ।
suputradārādi subhāgyadāya śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 8॥

śaṃbho mahādeva ....

vālāmbikeśa vaidyeśa bhavarogahareti ca ।
japennāmatrayaṃ nityaṃ mahāroganivāraṇam ॥ 9॥

śaṃbho mahādeva ....

   ॥ iti śrī vaidyanāthāṣṭakam ॥

No comments:

Post a Comment