கீதைச் சங்கிலி
என்னிடமிருந்து அறிந்துகொள்.
53. தெளிந்த அறிவுடன் கூடியவனாகவும், எளிய – சாத்விக-அளவான உணவு அருந்துபவனாகவும், ஒலி முதலிய புலன்நுகர்ப் பொருட்களைத் துறந்து, தூய்மையான இடத்தில் தனித்திருந்து, சாத்விகமான உறுதியோடு உள்ளத்தையும் புலன்களையும் அடக்கி, மனம்-வாக்கு-உடல் ஆகியவற்றைத் தன்வசத்தில் நிறுத்தி, விருப்பு-வெறுப்புகளை முற்றிலும் அழித்து, திடமான வைராக்கியத்தை அடைந்தவனாகவும், அகங்காரத்தையும் வலிமையையும் கர்வத்தையும் காமத்தையும் கோபத்தையும் சொத்து சேர்த்தலையும் நீக்கி, எப்பொழுதும் தியான யோகத்தில் நிலைத்திருந்து, மமகாரமற்று, சாந்தியோடு கூடியவனாகவும் உள்ளவன், ஸத் சித் ஆனந்தமயமான பரப்பிரம்மத்தில் இரண்டறக் கலப்பதற்குத் தகுதி பெறுகிறான்.
ஸத் சித் ஆனந்தமயமான பிரம்மத்தில் ஒன்றிய மனத்தெளிவுடைய யோகி எதற்கும் வருந்தவதில்லை. அனைத்துப் பிராணிகளிடமும் சமபாவனையோடு இருந்துகொண்டு, என்னுடைய உயர்ந்த பராபக்தியைப் பெறுகிறான்.
அந்த பராபக்தியின் மூலம் அவன் பரமாத்மாவான என்னை யார் என்றும், எத்தன்மையானவன் என்றும், உண்மையில் உள்ளது உள்ளபடியே தத்துவரீதியாக அறிந்து, அக்கணமே என்னிடம் ஐக்கியமாகிறான்.
No comments:
Post a Comment