Thursday, 5 September 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 4

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 4

अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् ।
तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ ६०॥

அக²ண்ட³மண்ட³லாகாரம் வ்யாப்தம் யேந சராசரம் ।
தத்பத³ம் த³ர்ஶிதம் யேந தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 60॥

akhaṇḍamaṇḍalākāraṃ vyāptaṃ yena carācaram ।
tatpadaṃ darśitaṃ yena tasmai śrīgurave namaḥ ॥ 60॥

अखण्ड-मण्डल-आकारं   -  அக²ண்ட³-மண்ட³ல-ஆகாரம்ʼ  -  அகண்டமண்டலாகாரமான,

चराचरं  -  சராசரம்ʼ  -  சராசரம்,

येन व्याप्तं  -  யேன வ்யாப்தம்ʼ  -  எதனால்  வியாபிக்கப்பட்டிருக்கின்றதோ,

तत् पदं  -  தத் பத³ம்ʼ  -  அந்த " தத் " பதம்,

येन दर्शितं  -  யேன த³ர்ஶிதம்ʼ  -  எவரால் காட்டப்பட்டதோ,

तस्मै श्रीगुरवे नमः  -  தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉:  -  அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).

பொருள் :

4. அகண்டமண்டலாகாரமான சராசரம் எதனால் வியாபிக்கப்பட்டிருக்கின்றதோ, அந்த "தத்" பதம் எவரால் காட்டப்பட்டதோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   60

#  அத்விதீயமான ( தன்னைத் தவிர வேறொன்றல்லாத ); ஆதியும் அந்தமும் இல்லாததான; அசைகின்ற, அசையாதவைகளையும் கொண்டுள்ள இந்த சராசரம் முழுமையும் வியாபித்தும் இருக்கின்றதான எதுவோ ( தத் -  'தத் த்வமஸி' எனும் மஹாவாக்யத்திலுள்ள தத். )

#  அந்த தத் யினுடைய தன்னிலையை எவர் அடையாளம் காட்டி நாம் அறியும்படி செய்கிறாரோ, அந்த குருவை வணங்குகிறேன்.

No comments:

Post a Comment