Thursday, 26 September 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 7

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 7

निमिषान्निमिषार्धाद्वा यद्वाक्याद्वै विमुच्यते ।
स्वात्मानं शिवमालोक्य तस्मै श्रीगुरवे नमः ॥ ६३॥

நிமிஷான்னிமிஷார்தா⁴த்³வா யத்³வாக்யாத்³வை விமுச்யதே ।
ஸ்வாத்மானம்ʼ ஶிவமாலோக்ய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ ॥ 63॥

nimiṣānnimiṣārdhādvā yadvākyādvai vimucyate ।
svātmānaṃ śivamālokya tasmai śrīgurave namaḥ ॥ 63॥

यद् वाक्याद्  -  யத்³ வாக்யாத்³  -  எவரது வாக்கியத்தினால்,

निमिषात‌् निमिष-अर्धाद् वा  -  நிமிஷாத் நிமிஷ-அர்தா⁴த்³ வா  -  நிமிஷப்பொழுதிலோ அதிலும் பாதியிலோ ( நேரம் ),

वै  -  வை  -  நிச்சயமாக,

स्व-आत्मानं शिवं  -  ஸ்வ-ஆத்மானம்ʼ ஶிவம்ʼ  -  தன் ஸ்வரூபமாகிய சிவத்தை,

आलोक्य  -  ஆலோக்ய  -  அறிந்து,

विमुच्यते  -  விமுச்யதே  -  ( அஞ்ஞானத்திலிருந்து ) விடுபடுவானோ,

तस्मै श्रीगुरवे नमः  -  தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉:  -  அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).

பொருள் :

7. எவரது வாக்கியத்தினால், நிமிஷப்பொழுதிலோ அதிலும் பாதியிலோ ( நேரம் ) நிச்சயமாகத் தன் ஸ்வரூபமாகிய சிவத்தை அறிந்து ( அஞ்ஞானத்திலிருந்து ) விடுபடுவானோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   63

#  வாக்கியத்தினால் என்றால் வாக்கியங்களால் மொழியப்படுகின்ற போதனைகளால் என்று கொள்க.

#  நிமிஷப்பொழுது என்றால் கண் இமைக்கும் நேரம்.

#  சிவத்தை என்பது பரம்பொருளைக் குறிக்கிறது.

கண்கண்ணாடியைக் கயிற்றில் கட்டி கழுத்தில் தொங்கவிட்டுள்ள ஒருவன், அதை மறந்து தேடிக்கொண்டிருக்கும் போது , இதோ இருக்கிறதே என்று சுட்டிக்காட்டியவுடன், அதேகணத்தில் கண்கண்ணாடி இருப்பதை எப்படி அறிகிறானோ அப்படி.

பாடபேதம் :-

निमिषार्धार्धपादाद्वा यद्वाक्याद्वै विलोक्यते ।
स्वात्मानं स्थिरमाधत्ते तस्मै श्रीगुरवे नमः ॥

நிமிஷார்தா⁴ர்த⁴பாதா³த்³வா யத்³வாக்யாத்³வை விலோக்யதே ।
ஸ்வாத்மானம்ʼ ஸ்தி²ரமாத⁴த்தே தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥

பொருள் -  எவருடைய வாக்கியத்தால்‌ அரை நிமிஷமோ, அதில்‌ பாதியோ கால்பங்கோ தனது ஆத்மாவானது காணப்பட்டு, அது ஸ்திரமான அனுபவமாகிறதோ அந்த குருவிற்கு நமஸ்காரம்‌.

No comments:

Post a Comment