Sunday, 21 July 2019

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 6

Sri Vaidyanaatha Ashtakam - Sloka 6

॥ श्री वैद्यनाथाष्टकम् ॥

॥ ஶ்ரீ வைத்³யநாதா²ஷ்டகம் ॥

॥ ŚRĪ VAIDYANĀTHĀṢṬAKAM ॥

वेदान्तवेद्याय जगन्मयाय योगीश्वरद्येय पदाम्बुजाय ।
त्रिमूर्तिरूपाय सहस्रनाम्ने श्रीवैद्यनाथाय नमः शिवाय ॥ ६॥

வேதா³ந்தவேத்³யாய ஜக³ந்மயாய யோகீ³ஶ்வரத்³யேய பதா³ம்பு³ஜாய ।
த்ரிமூர்திரூபாய ஸஹஸ்ரநாம்நே ஶ்ரீவைத்³யநாதா²ய நம: ஶிவாய ॥ 6॥

vedāntavedyāya jaganmayāya yogīśvaradyeya padāmbujāya ।
trimūrtirūpāya sahasranāmne śrīvaidyanāthāya namaḥ śivāya ॥ 6॥

वेद-अन्त-वेद्याय   -   வேத³-அந்த-வேத்³யாய  -   வேதங்கள் அறுதியிடும் முடிவான பொருளானவருக்கு,

जगत‌्-मयाय   -   ஜக³த்-மயாய   -   நமக்கு தெரிகின்ற உலகமயமாக இருப்பவருக்கு,

योगीश्वर-ध्येय पद-अम्बुजाय   -   யோகீ³ஶ்வர-த்⁴யேய பத³-அம்பு³ஜாய   -   யோகத்தில் கரைகண்டவர்களால் தியானிக்கப்படுகின்ற பாதகமலங்களை உடையவருக்கு,

त्रिमूर्ति-रूपाय   -   த்ரிமூர்தி-ரூபாய   -   மும்மூர்த்தி ( பிரம்மா, விஷ்ணு, மஹேசர் ) ரூபமாய் விளங்குபவருக்கு,

सहस्र-नाम्ने   -   ஸஹஸ்ர-நாம்னே   -   ஆயிரம் நாமங்களை உடையவருக்கு,

श्री वैद्य-नाथाय नमःशिवाय   -  ஶ்ரீ வைத்³ய-நாதா²ய நம꞉:ஶிவாய   -  ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம். 

பொருள் :

வேதங்கள் அறுதியிடும் முடிவான பொருளானவருக்கு, நமக்கு தெரிகின்ற உலகமயமாக இருப்பவருக்கு, ஈசா வாஸ்யம் இதம் ஜகத் என்றறிகிறதான யோகத்தில் கரைகண்டவர்களால் தியானிக்கப்படுகின்ற பாதகமலங்களை உடையவருக்கு, மும்மூர்த்தி ( பிரம்மா, விஷ்ணு, மஹேசர் ) ரூபமாய் விளங்குபவருக்கு, ஆயிரம் நாமங்களை உடையவருக்கு, ஸ்ரீவைத்யநாதருமான சிவபெருமானுக்கு நமஸ்காரம்.    6

#  वेद-अन्त-वेद्याय   -   வேத³-அந்த-வேத்³யாய  -     பரம்பொருள் ஒன்றே. இத்தகைய முடிவை வேதங்களின் அடிப்படையில் தான் எடுக்க வேண்டும். நம் புலன்களால் அறிந்தோ, புத்தியால் யூகித்தோ அறிவது பிழை. வேதங்கள் அறுதியிட்டுக் கூறுவதை புரிந்துகொள்வதற்கு புலனறிவோ, அனுமானங்களோ உதவியாக இருக்கலாம். வேதங்களைக் கடைந்து, அதனினும் ஸாரமாகிய உபநிடதங்களால் கிடைக்கப்பெறுகின்ற ஸாரதமமான முடிவு, பரம்பொருளே ( அநாமம், அரூபம் ). அதுவே இங்கு வைத்தியநாதர் ( நாமம், ரூபம் ) எனும் பெயர் கொண்டுள்ளது.

#  जगत‌्-मयाय   -   ஜக³த்-மயாய   -   சரி. அப்படியானல் தெரிகின்ற பலதரப்பட்டதான இவ்வுலகம்.?! அதுவும் பரம்பொருளே. எனவே தான் பல நாமரூப பேதங்களுடன் கடவளைக் கொண்டாடி அனுபவிக்க முடிகிறது. நான் புளியோதரை சாப்பிட்டேன், நான் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டேன், நான் மோர் அருந்தினேன், நான் நீர் அருந்தினேன் என்று பலப்பல பதார்த்தங்களை, பல வகைகளில் உட்கொண்டாலும் , அப்பதார்த்தங்களிலிருந்து கிடைத்த அனுபவத்தை அனுபவித்தது நான் தான். எல்லோருள்ளும் இந்த நான் பொதுவாக இருக்கிறது. அந்த நான் என்ற அனுபவம் ஒன்றே. இவ்வாறே பரம்பொருள் ஒன்றே, உலகமயமாக இருக்கிறார் என்பது எளிமையாக விளக்குவதாகக் கொள்ளலாம்.

#  योगीश्वर-ध्येय पद-अम्बुजाय   -   யோகீ³ஶ்வர-த்⁴யேய பத³-அம்பு³ஜாய   -   இத்தகைய குழப்பக்கூடிய விஷயங்களை, " ஈசா வாஸ்யம் இதம் ஜகத் " என்று அவன் அருளாலே அறிந்து புரிந்து இயைந்து, அதிலிருந்து பிறழாமல் வசித்துக் கொண்டிருப்பவனை யோகி எனலாம். இந்த யோகத்தில் கரைகண்டவரான யோகீச்வரர்களால் ஸதா நினைக்கப்படுகின்ற பாத கமலங்களை உடையவருக்கு என்று கொள்ளலாம்.

#  सहस्र-नाम्ने   -   ஸஹஸ்ர-நாம்னே   -   ஆயிரம் நாமங்கள் மட்டும் என்றல்ல. ஆயிரமாயிரமாய் நாமங்கள் கணக்கிட இயலாதவை.

Meaning :

I salute that God Shiva,
Who is the king among physicians,
Who can be known through vedantha,
Who is spread through out the universe,
Who has a lotus feet ,
That is meditated upon by great sages,
Who is of the form of the holy trinity,
And who has thousand names.   6

No comments:

Post a Comment