॥ श्री शिवाष्टकम् ॥
|| ஶ்ரீ ஶிவாஷ்டகம் ||
|| ŚRĪ ŚIVĀṢṬAKAM ||
शरच्चन्द्रगात्रं गुणानन्द पात्रं त्रिनेत्रं पवित्रं धनेशस्य मित्रम् ।
अपर्णाकलत्रं चरित्रं विचित्रं शिवं शङ्करं शम्भुमीशानमीडे ॥ ७॥
ஶரச்சந்த்³ரகா³த்ரம்ʼ கு³ணானந்த³ பாத்ரம்ʼ த்ரிநேத்ரம்ʼ பவித்ரம்ʼ த⁴னேஶஸ்ய மித்ரம் .
அபர்ணாகலத்ரம்ʼ சரித்ரம்ʼ விசித்ரம்ʼ ஶிவம்ʼ ஶங்கரம்ʼ ஶம்பு⁴மீஶானமீடே³ .. 7..
śaraccandragātraṃ guṇānanda pātraṃ trinetraṃ pavitraṃ dhaneśasya mitram .
aparṇākalatraṃ caritraṃ vicitraṃ śivaṃ śaṅkaraṃ śambhumīśānamīḍe .. 7..
शरद्-चन्द्र-गात्रं - ஶரத்³-சந்த்³ர-கா³த்ரம்ʼ - சரத்ருதுவின் (இலையுதிர் கால) நிலவையொத்த உடலை உடையவரை,
गुण-आनन्द पात्रं - கு³ண-ஆனந்த³ பாத்ரம்ʼ - குணங்களுக்கும் அதனால் விளையும் ஆனந்தத்திற்கும் உறைவிடமானவரை,
त्रि-नेत्रं - த்ரி-நேத்ரம்ʼ - முக்கண்ணரை,
पवित्रं - பவித்ரம்ʼ - புனிதமானவரை,
धन-ईशस्य मित्रं - த⁴ன-ஈஶஸ்ய மித்ரம்ʼ - செல்வங்களுக்கு அதிபதியான குபேரனுக்கு நண்பரை,
अपर्णा-कलत्रं - அபர்ணா-கலத்ரம்ʼ - அபர்ணையை (பார்வதி தேவியை) மனைவியாய் உடையவரை,
चरित्रं विचित्रं - சரித்ரம்ʼ விசித்ரம்ʼ - வினோதமான நடத்தை (லீலை) உடையவரை,
शिवं - ஶிவம்ʼ - மங்களவடிவானவரை,
शङ्करं - ஶங்கரம்ʼ - நன்மை செய்பவரை,
शम्भुं - ஶம்பு⁴ம்ʼ - சுகத்தை அளிப்பவரை,
ईशानं - ஈஶானம்ʼ - ஈசானரை (சிவபிரானை),
ईडे - ஈடே³ - துதிக்கின்றேன்.
பொருள் :
சரத்ருதுவின் (இலையுதிர் கால) நிலவையொத்த உடலை உடையவரும், குணங்களுக்கும் அதனால் விளையும் ஆனந்தத்திற்கும் உறைவிடமானவரும், முக்கண்ணரும், புனிதமானவரும், செல்வங்களுக்கு அதிபதியான குபேரனுக்கு நண்பரும், அபர்ணா தேவியை (பார்வதி தேவியை) மனைவியாய் உடையவரும், வினோதமான நடத்தை (லீலை) உடையவரும், மங்களவடிவினரும், நன்மை அளிப்பவரும், ஸுகத்தைத் தருபவருமான ஈசானரை (சிவபிரானை)த் துதிக்கின்றேன். 7
Meaning :
I pray You, Śiva, Śańkara, Śambhu, Who has a face like the Winter-moon, Who is the subject of happiness of Gaṇa (tormentor groups), Who has three eyes, Who is pure, Who is the friend of Kubera (controller of wealth), Who is the consort of Aparṇā (Pārvatī), Who has eternal characteristics, and Who is the Lord of everyone. 7
# சரத்ருது என்பது ஐப்பசி, கார்த்திகை என்ற இரண்டு மாதங்கள் அடங்கிய காலத்தைக் குறிக்கும். இதனை இலையுதிர் காலம் எனவும் கூறுவர்.
# வெம்மை தாளாமல் பகலில் தவிக்கும் ஜீவன்களுக்கு, இரவின் சந்திர ஒளி குளிர்மை தருவது போல , ஸம்ஸார துக்கங்களால் தபித்த ஜீவன்களுக்கு இதமளிக்கும் திவ்யமங்கள விக்ரஹம்.
# சரத்ருதுவில் இலையுதிர் காலத்தில் இலைகள் தானே உதிர்வது போல, பரமேச்வரரது திவ்யமங்கள ரூப தர்ஷனம் ஏற்பட்டதும், பலவித எண்ணங்களால் அலைகளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற மனம், தானே (சிரமமின்றி) அவைகளை விட்டு பகவானிடத்தில் ஆழ்கிறது.
# சூரியன், சந்திரன் மற்றும் அக்னி என மூன்று கண்கள்.
# ‘அபர்ணை’ என்பது மலைமகளின் ஒரு பெயர். சிவனாரை அடையத் தவமியற்றியபொழுது தானாகக் கிடைத்த காய், கனி, சருகுகளைக் கொண்டு உயிர்வாழ்ந்த மலைமகள் பின்னர் அதையும் துறந்தமையால் ‘அபர்ணை’ என்றழைக்கப்பட்டாள். ‘பர்ணம்’ என்றால் இலை ‘அபர்ணம்’ என்றால் அதுவுமற்ற என்று பொருள்.
# இன்னது நடக்கும் என்று கணிக்க இயலாத விநோதமான சரித்திரங்களை நிகழ்த்துபவர்.
பாடபேதம் -
गण-आनन्द पात्रं - க³ண-ஆனந்த³ பாத்ரம்ʼ - கணங்களுக்கு (தன்னை பின்பற்றுபவர்க்கு) ஆனந்தத்தையே அளிக்கும் இயல்பினர்.
सदा सच्चरित्रं - ஸதா சச்சரித்ரம்ʼ - எப்போதும் தர்மத்தினின்றும் வழுவாதவர்.
No comments:
Post a Comment