॥ विनायक लीला स्तुतिः ॥
|| விநாயக லீலா ஸ்துதி: ||
|| VINĀYAKA LĪLĀ STUTIḤ ||
केयूरिणं हारकिरीटजुष्टं चतुर्भुजं पाशवराभयानि।
सृणिं वहन्तं गणपं त्रिनेत्रं सचामरस्त्रीयुगलेन युक्तम्॥२॥ *
கேயூரிணம்ʼ ஹாரகிரீடஜுஷ்டம்ʼ சதுர்பு⁴ஜம்ʼ பாஶவராப⁴யானி|
ஸ்ருʼணிம்ʼ வஹந்தம்ʼ க³ணபம்ʼ த்ரினேத்ரம்ʼ ஸசாமரஸ்த்ரீயுக³லேன யுக்தம்|| 2||
keyūriṇaṃ hārakirīṭajuṣṭaṃ caturbhujaṃ pāśavarābhayāni।
sṛṇiṃ vahantaṃ gaṇapaṃ trinetraṃ sacāmarastrīyugalena yuktam॥2॥
केयूरिणं हार-किरीट-जुष्टं - கேயூரிணம்ʼ ஹார-கிரீட-ஜுஷ்டம்ʼ - தோள்வளை, ஹாரம் ( முத்து மாலை ), கிரீடம் இவைகளை அணிந்தவரும்,
चतुर्भुजं - சதுர்பு⁴ஜம்ʼ - நான்கு கைகளை உடையவரும்,
पाश-वर-अभयानि सृणिं वहन्तं - பாஶ-வர-அப⁴யானி ஸ்ருʼணிம்ʼ வஹந்தம்ʼ - (அவைகளில்) பாசம் ( கயிறு ), வரம், அபயம், துறட்டி / அங்குசம் இவற்றை ஏந்தியவரும்,
त्रिनेत्रं - த்ரிநேத்ரம் - மூன்று கண்களை உடையவரும்,
सचामर-स्त्री-युगलेन युक्तम् - ஸசாமர-ஸ்த்ரீ-யுக³லேன யுக்தம் - இருபுறமும் இரு பெண்களால் சாமரம் வீசப்படுபவரும் ( ஆகிய )
गणपं - க³ணபம்ʼ - கணபதியை ( கணங்களுக்குத் தலைவரை )
{ नमामि - நமாமி - வணங்குகிறேன்
( முன் ச்லோகத்தின் 'நமாமி' சேர்த்தால் )
அல்லது
शरणं प्रपद्ये - ஶரணம் ப்ரபத்³யே - சரணடைகிறேன் ( பின்வரும் ச்லோகத்தின் 'சரணம் ப்ரபத்யே' சேர்த்தால் ). }
பொருள் :
தோள்வளை, ஹாரம் ( முத்து மாலை ), கிரீடம் இவைகளை அணிந்தவரும், நான்கு கைகளை உடையவரும், அவைகளில் பாசம் ( கயிறு ), வரம், அபயம், துறட்டி / அங்குசம் இவற்றை ஏந்தியவரும், மூன்று கண்களை உடையவரும், இருபுறமும் இரு பெண்களால் சாமரம் வீசப்படுபவருமாகிய கணபதியை ( கணங்களுக்குத் தலைவரை ) வணங்குகிறேன்
( முன் ச்லோகத்தின் 'நமாமி' சேர்த்தால் ) அல்லது சரணடைகிறேன் ( பின்வரும் ச்லோகத்தின் 'சரணம் ப்ரபத்யே' சேர்த்தால் ). 2
* பாட பேதம் --
No comments:
Post a Comment