Sunday, 7 March 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 1

Vinaayaka Leelaa Stuti - sloka 1

॥ विनायक लीला स्तुतिः ॥

|| விநாயக லீலா ஸ்துதி: ||

|| VINĀYAKA LĪLĀ STUTIḤ ||

नमामि देवं सकलार्थदं तं सुवर्णवर्णं भुजगोपवीतम्।
गजाननं भास्करमेकदन्तं लम्बोदरं वारिभवासनं च ॥१॥

நமாமி தே³வம்ʼ ஸகலார்த²த³ம்ʼ தம்ʼ ஸுவர்ணவர்ணம்ʼ பு⁴ஜகோ³பவீதம்|
க³ஜானனம்ʼ பா⁴ஸ்கரமேகத³ந்தம்ʼ லம்போ³த³ரம்ʼ வாரிப⁴வாஸனம்ʼ ச || 1||

namāmi devaṃ sakalārthadaṃ taṃ suvarṇavarṇaṃ bhujagopavītam।
gajānanaṃ bhāskaramekadantaṃ lambodaraṃ vāribhavāsanaṃ ca ॥1॥


सकल-अर्थ-दं - ஸகல-அர்த²-த³ம்ʼ - விரும்பியதனைத்தையும் தருபவரை ,

सुवर्ण-वर्णं - ஸுவர்ண-வர்ணம்ʼ - தங்கநிறம் கொண்டவரை ,

भुजग-उपवीतं - பு⁴ஜக³-உபவீதம்ʼ - பாம்பைப் பூணூலாக்கியவரை ,

गज-आननं - க³ஜ-ஆனனம்ʼ - யானை முகத்தவரை ,

भास्करं - பா⁴ஸ்கரம்ʼ - பேரொளியினரை ,

एक-दन्तं - ஏக-த³ந்தம்ʼ - ஒற்றைத் தந்தம் உடையவரை ,

लम्ब-उदरं - லம்ப³-உத³ரம்ʼ - சரிந்த வயிறுடையவரை ,

वारिभव-आसनं च - வாரிப⁴வ-ஆஸனம்ʼ ச - தாமரை மீதமர்ந்தவருமாகிய

तं देवं - தம்ʼ தே³வம்ʼ - அந்த தேவரை

नमामि - நமாமி - வணங்குகிறேன்.


பொருள் :
விரும்பியதனைத்தையும் தருபவரையும் , தங்கநிறம் கொண்டவரையும் , பாம்பைப் பூணூலாக்கியவரையும் , யானை முகத்தவரையும் , பேரொளியினரையும் , ஒற்றைத் தந்தம் உடையவரையும் , சரிந்த வயிறுடையவரையும் , தாமரை மீதமர்ந்தவருமாகிய அந்த தேவரை ( விநாயகரை ) வணங்குகிறேன். 1

No comments:

Post a Comment