॥ विनायक लीला स्तुतिः ॥
|| விநாயக லீலா ஸ்துதி: ||
॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥
शिवस्य मौलाववलोक्य चन्द्रं स्वशुण्डया मुग्धतया स्वकीयम् । *
भग्नं विषाणं परिभाव्य चित्ते आकृष्टचन्द्रो गणपोऽवतान्नः ॥ ६॥
ஶிவஸ்ய மௌலாவவலோக்ய சந்த்³ரம்ʼ ஸ்வஶுண்ட³யா முக்³த⁴தயா ஸ்வகீயம் |
ப⁴க்³னம்ʼ விஷாணம்ʼ பரிபா⁴வ்ய சித்தே ஆக்ருʼஷ்டசந்த்³ரோ க³ணபோ(அ)வதான்ன: || 6||
śivasya maulāvavalokya candraṃ svaśuṇḍayā mugdhatayā svakīyam ।
bhagnaṃ viṣāṇaṃ paribhāvya citte ākṛṣṭacandro gaṇapo'vatānnaḥ ॥ 6॥
शिवस्य मौलौ चन्द्रं अवलोक्य - ஶிவஸ்ய மௌலௌ சந்த்³ரம்ʼ அவலோக்ய - சிவபெருமானுடைய தலையில் பிறைச் சந்திரனைக் கண்டு ,
स्वकीयम् - ஸ்வகீயம் - தன்னுடைய ,
भग्नं विषाणं - ப⁴க்³னம்ʼ விஷாணம்ʼ - உடைந்த தந்தத்தை,
चित्ते परिभाव्य - சித்தே பரிபா⁴வ்ய - மனதில் சிந்தித்து,
मुग्धतया - முக்³த⁴தயா - பேதைத்தனமாக ,
स्वशुण्डया - ஸ்வஶுண்ட³யா - துதிக்கையால் ,
आकृष्टचन्द्रः - ஆக்ருʼஷ்டசந்த்³ர: - சந்திரனை இழுத்த,
गणपः - க³ணப: - கணபதி,
अवतां नः - அவதாம்ʼ ந: - நம்மைக் காக்கட்டும்.
பொருள் :
சிவபெருமானுடைய தலையில் பிறைச் சந்திரனைக் கண்டு தன்னுடைய உடைந்த தந்தத்தை மனதில் சிந்தித்து, பேதைத்தனமாக தன் துதிக்கையால் சந்திரனை இழுத்த கணபதி நம்மைக் காக்கட்டும். 6
# இது கள்ளம் கபடமற்ற குழந்தையின் லீலை. *
பாட பேதம் --
No comments:
Post a Comment