Sunday, 11 April 2021

Vinaayaka Leelaa Stuti - sloka 5

Vinaayaka Leelaa Stuti - sloka 5 

॥ विनायक लीला स्तुतिः ॥ 

|| விநாயக லீலா ஸ்துதி: || 

॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥ 


भवाख्यदावानलदह्यमानं भक्तं स्वकीयं परिषिञ्चते यः । 
गण्डस्रुताम्भोभिरनन्यतुल्यं वन्दे गणेशं च तमालनीलम् ॥ ५॥ * 

ப⁴வாக்²யதா³வானலத³ஹ்யமானம்ʼ ப⁴க்தம்ʼ ஸ்வகீயம்ʼ பரிஷிஞ்சதே ய: | 
க³ண்ட³ஸ்ருதாம்போ⁴பி⁴ரனன்யதுல்யம்ʼ வந்தே³ க³ணேஶம்ʼ ச தமாலனீலம் || 5|| 

bhavākhyadāvānaladahyamānaṃ bhaktaṃ svakīyaṃ pariṣiñcate yaḥ । 
gaṇḍasrutāmbhobhirananyatulyaṃ vande gaṇeśaṃ ca tamālanīlam ॥ 5॥ 


यः - ய: - யார், 

भवाख्य-दावानल-दह्यमानं - ப⁴வாக்²ய-தா³வானல-த³ஹ்யமானம்ʼ - ஸம்ஸாரமாகிற தீயில் வாடுகின்ற , 

भक्तं - ப⁴க்தம்ʼ - ( தன் ) பக்தனை, 

स्वकीयं - ஸ்வகீயம்ʼ - தன்னுடைய , 

गण्ड-स्रुत-अम्भोभि - க³ண்ட³-ஸ்ருத-அம்போ⁴பி⁴: - கன்னத்திலிருந்து வழியும் மதநீரால், 

परिषिञ्चते - பரிஷிஞ்சதே - நனைத்துக் குளிர வைக்கிறாரோ, 

अनन्यतुल्यं - அனன்யதுல்யம்ʼ - ( இவ்வாறு பக்தரைக் காப்பதில் ) நிகரற்றவரை, 

तमालनीलं च - தமாலனீலம்ʼ ச - பச்சிலை போல் பசுமை நிறத்தவருமாகிய, 

गणेशं - க³ணேஶம்ʼ - ( அந்த ) கணேசரை, 

वन्दे - வந்தே³ - வணங்குகிறேன். 


பொருள் : 

யார் ஸம்ஸாரமாகிற தீயில் வாடுகின்ற, ( தன் ) பக்தனை, தன்னுடைய கன்னத்திலிருந்து வழியும் மதநீரால் நனைத்துக் குளிர வைக்கிறாரோ, ( இவ்வாறு பக்தரைக் காப்பதில் ) நிகரற்றவரை, பச்சிலை போல் பசுமை நிறத்தவருமாகிய, ( அந்த ) கணேசரை வணங்குகிறேன். 5 


# பிறப்பு , இறப்பு , மேலும் வாழ்நாளில் பலவிதமான கஷ்டங்களில் உழல்வதாகிய சூழலே பவம் - ஸம்ஸாரம் எனப்படுகிறது . தீயாலும் அதனால் உண்டான வெப்பத்தாலும் தஹித்துக் கொண்டிருக்கின்ற ஒருவன் , இக்கணமே இதிலிருந்து தப்பிவிட மாட்டோமா.. என்று துடிப்பவன் மேல் தண்ணீர் தெளித்து நன்றாகத் தீ அணைக்கப்பட்டால் அவன் எத்தகைய நிம்மதி அடைவானோ, அது போல் ஸம்ஸாரத்திலிருந்து விடுபட நினைக்கும் ஜீவனுக்கு தன் மதநீராகிய அமுதத்தை அதாவது ஞானத்தைத் தந்து நிம்மதி அடையச் செய்வதில் நிகரற்றவர் என்று கொள்ளலாம். * 

பாட பேதம் -- 
तमालनीलम् > तमोऽरिनेत्रम् , தமாலனீலம் > தமோ(அ)ரினேத்ரம்.

No comments:

Post a Comment