Monday, 13 April 2020

Sri Rudraashtakam - Sloka 6

Sri Rudraashtakam  -  Sloka 6

॥ श्री रुद्राष्टकम‌् ॥

|| ஶ்ரீ ருத்³ராஷ்டகம் ||

|| ŚRĪ RUDRĀṢṬAKAṂ ||

कलातीत कल्याण कल्पान्तकारी सदा सज्जनानन्ददाता पुरारी ।
चिदानन्द संदोह मोहापहारी प्रसीद प्रसीद प्रभो मन्मथारी ॥ ६॥

கலாதீத கல்யாண கல்பாந்தகாரீ ஸதா³ ஸஜ்ஜநாநந்த³தா³தா புராரீ ।
சிதா³நந்த³ ஸந்தோ³ஹ மோஹாபஹாரீ ப்ரஸீத³ ப்ரஸீத³ ப்ரபோ⁴ மந்மதா²ரீ ॥ 6॥

kalātīta kalyāṇa kalpāntakārī sadā sajjanānandadātā purārī ।
cidānanda saṃdoha mohāpahārī prasīda prasīda prabho manmathārī ॥ 6॥

कला-अतीत  -  கலா-அதீத  -  ஹே தெளிவளிக்கும் புத்திக்கு அப்பாற்பட்டவரே,

कल्याण  -  கல்யாண  -  ஹே மங்களம் செய்பவரே,

कल्प-अन्तकारी  -  கல்ப-அந்தகாரீ  -  ஹே கல்பங்களை ( கால அளவு ) முடிப்பவரே, *

सदा सज्जन-आनन्द-दाता  -  ஸதா³ ஸஜ்ஜன-ஆனந்த³-தா³தா  -  ஹே எப்பொழுதும் சாதுக்களுக்கு ஆனந்தத்தையே அளிப்பவரே,

पुरारी  -  புராரீ  -  ஹே திரிபுரங்களை அழித்தவரே,

चिदानन्द संदोह  -  சிதா³னந்த³ ஸந்தோ³ஹ  -  ஹே சைதன்ய ஆனந்தத்தைத் தொகுத்து அளிப்பவரே,  #

मोह-अपहारी  -  மோஹ-அபஹாரீ  -  ஹே மோஹத்தை அபஹரிப்பவரே,  <<

मन्मथारी  -  மன்மதா²ரீ  -  ஹே மன்மதனுக்கு எதிரியானவரே,

प्रभो  -  ப்ரபோ⁴  -  ஹே எம்பெருமானே

प्रसीद प्रसीद  -  ப்ரஸீத³ ப்ரஸீத³  -  அருளுங்கள் ! அருளுங்கள் !

பொருள் :

ஹே தெளிவளிக்கும் புத்திக்கு அப்பாற்பட்டவரே !  ஹே மங்களம் செய்பவரே !  ஹே கல்பங்களை ( கால அளவு ) முடிப்பவரே !  ஹே எப்பொழுதும் சாதுக்களுக்கு ஆனந்தத்தையே அளிப்பவரே !  ஹே திரிபுரங்களை அழித்தவரே !  ஹே சைதன்ய ஆனந்தத்தைத் தொகுத்து அளிப்பவரே !  ஹே மோஹத்தை அபஹரிப்பவரே !   ஹே மன்மதனுக்கு எதிரியானவரே !  ஹே எம்பெருமானே ! அருளுங்கள் !  அருளுங்கள் !   6

Meaning :

6.1: (Salutations to Sri Rudra) Whose Auspicious Nature is Beyond the Elements of the gross material world and Who Brings an End to a Kalpa (a cycle of creation when all gross elements are dissolved),

6.2: Who Always Give Great Joy to the Wise Men and Who is the Enemy (signifying Destroyer) of the Tripurasuras (who represents Adharma),

6.3: By Taking Away the Great Delusion, He plunges the prepared Soul in the Fullness of Cidananda (the Bliss of Brahman or Pure Consciousness),

6.4: O, the Enemy (signifying Destroyer) of Manmatha; Please be Gracious to me; Please be Gracious to me, O Lord.

*  கல்பம் - பிரம்மாவின் ஒரு பகல் ( 1000 சதுர்யுகங்கள் ).,
கல்பம் - நம் மனத்தில் தோன்றிக்கொண்டேயிருக்கின்ற ஸங்கல்பங்களை அழிப்பவரே ! என்றும் கொள்ளலாம்.

#  நான் சிரிக்கிறேன்; நான் அழுகிறேன்; நான் தவிக்கிறேன் போன்ற பலவிதமான உணர்ச்சிகளின் கேந்த்ரியமாக இருக்கிற ' நான் ' என்னும் போதத்தைக் கறந்து ( பசு பலவண்ண வஸ்துக்களை விதவிதமாக உண்டபோதிலும் அவை செரிமானப்பட்டு, பால் மாத்திரம் கறப்பவரால், கறந்து கிடைப்பது போல ) அளிப்பவர்.

<<  ஸம்ஸார ஸுக மோஹத்தில் அழுந்தியிருக்கும் நான், மோஹத்தை விட மறுத்தபோதிலும், பலவந்தமாக அதைப் பறித்துச் செல்பவரே.

No comments:

Post a Comment