Monday, 6 April 2020

Sri Rudraashtakam  -  Sloka 5

Sri Rudraashtakam  -  Sloka 5

॥ श्री रुद्राष्टकम‌् ॥

|| ஶ்ரீ ருத்³ராஷ்டகம் ||

|| ŚRĪ RUDRĀṢṬAKAṂ ||

प्रचण्डं प्रकृष्टं प्रगल्भं परेशं अखण्डं भजे भानुकोटिप्रकाशम् । #
त्रयः शूल निर्मूलनं शूलपाणिं भजेऽहं भवानीपतिं भावगम्यम् ॥ ५॥ *

ப்ரசண்ட³ம் ப்ரக்ருʼஷ்டம் ப்ரக³ல்ப⁴ம் பரேஶம் அக²ண்ட³ம் ப⁴ஜே பா⁴நுகோடிப்ரகாஶம் ।
த்ரய: ஶூல நிர்மூலநம் ஶூலபாணிம் ப⁴ஜேঽஹம் ப⁴வாநீபதிம் பா⁴வக³ம்யம் ॥ 5॥

pracaṇḍaṃ prakṛṣṭaṃ pragalbhaṃ pareśaṃ akhaṇḍaṃ bhaje bhānukoṭiprakāśam ।
trayaḥ śūla nirmūlanaṃ śūlapāṇiṃ bhaje'haṃ bhavānīpatiṃ bhāvagamyam ॥ 5॥

प्रचण्डं  -  ப்ரசண்ட³ம்ʼ  -  ஆற்றல்மிக்கவரை,

प्रकृष्टं  -  ப்ரக்ருʼஷ்டம்ʼ  -  அனைத்திலும் சிறந்தவரை,

प्रगल्भं  -  ப்ரக³ல்ப⁴ம்ʼ  -  யாராலும் எதிர்க்க முடியாதவரை,

परेशं  -  பரேஶம்ʼ  -  பரமேச்வரரை,
अखण्डं  -  அக²ண்ட³ம்ʼ  -  நீக்கமற நிறைந்தவரை,

भानु-कोटि-प्रकाशं  -  பா⁴னு-கோடி-ப்ரகாஶம்ʼ  -  கோடி சூரியரைப்போல  பிரகாசிப்பவரை,

त्रयः शूल निर्मूलनं  -  த்ரய꞉: ஶூல நிர்மூலனம்ʼ  -  மூன்றுவிதமான துக்கங்களை வேரறுப்பவரை,

शूलपाणिं  -  ஶூலபாணிம்ʼ  -  கையில் சூலம் ஏந்தியவரை,

भावगम्यं  -  பா⁴வக³ம்யம்ʼ  -  ( பக்தி ) பாவத்தால் எளிதில் அடையப்படக்கூடியவரை,

भवानीपतिं  -  ப⁴வானீபதிம்ʼ  -  மங்களங்கள் அருளும் அன்னை பவானிக்குப் பதியானவரை,

भजे-अहम‌् भजे (अहम‌्)  -  ப⁴ஜே-அஹம் ப⁴ஜே (அஹம்)  -  நான் தொழுகிறேன், நான் தொழுகிறேன்.

பொருள் :

ஆற்றல்மிக்கவரை, அனைத்திலும் சிறந்தவரை, யாராலும் எதிர்க்க முடியாதவரும், பரமேச்வரரும், நீக்கமற நிறைந்தவரும், கோடிசூரியரைப் போலப் பிரகாசிப்பவரும், மூன்றுவிதமான துக்கங்களை வேரறுப்பவரும், கையில் சூலம் ஏந்தியவரும், ( பக்தி ) பாவத்தால் எளிதில் அடையப்படக்கூடியவருமான  மங்களங்கள் அருளும் அன்னை பவானீபதியை ( சிவபெருமான் )  நான் தொழுகிறேன், நான் தொழுகிறேன்.   5

Meaning :

5.1: (Salutations to Sri Rudra) Who is Terrible, Eminent and extremely Strong; Who is the Highest Lord,

5.2: Who is ever Unborn and Whole; and with the Effulgence of Million Suns,

5.3: Who has a Trident in Hand, the Three Spikes of which Uproots the bondages of the Three Gunas (Tamas, Rajas and Sattva),

5.4: I Worship the Consort of Devi Bhavani Who can be Attainedonly by Devotion.

மூன்றுவிதமான துக்கங்கள் :

ஆத்⁴யாத்மிகம்  -  உடலிலோ மனதிலோ தானே ஏற்படுவது.

ஆதி⁴பௌ⁴திகம்  -  வெளிக் காரணங்களால் ஏற்படுவது

ஆதி⁴தை³விகம்  -  இடி, மின்னல், பூகம்பம் போன்ற மனிதனுக்கு அப்பாற்பட்ட காரணங்களால் உண்டாவது.

பாட பேதம் - 

# अजं - அஜம் - ajaṃ  -  பிறப்பற்றவர்.

* त्रयीशूल - த்ரயீஶூல - trayīśūla  - மூன்றுவித துக்கங்கள்.

No comments:

Post a Comment