॥ विनायक लीला स्तुतिः ॥
|| விநாயக லீலா ஸ்துதி: ||
॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥
तं वामनाङ्गं शिशुभावमाप्तं केनापि सत्कारणतो धरित्र्याम् ।
वक्तारमाद्यं निगमादिकानां लोकैकवन्द्यं प्रणमामि विघ्नम् ॥ १४॥
தம்ʼ வாமனாங்க³ம்ʼ ஶிஶுபா⁴வமாப்தம்ʼ கேனாபி ஸத்காரணதோ த⁴ரித்ர்யாம் |
வக்தாரமாத்³யம்ʼ நிக³மாதி³கானாம்ʼ லோகைகவந்த்³யம்ʼ ப்ரணமாமி விக்⁴னம் || 14||
taṃ vāmanāṅgaṃ śiśubhāvamāptaṃ kenāpi satkāraṇato dharitryām ।
vaktāramādyaṃ nigamādikānāṃ lokaikavandyaṃ praṇamāmi vighnam ॥ 14॥
वामनाङ्गं - வாமனாங்க³ம்ʼ - குள்ள வடிவினரை,
केन-अपि सत्-कारणतः - கேன-அபி ஸத்-காரணத: - ஏதோ நற்காரணம் கொண்டு ,
धरित्र्यां - த⁴ரித்ர்யாம்ʼ - பூமியில் ,
शिशु-भावं-आप्तं - ஶிஶு-பா⁴வம்ʼ-ஆப்தம்ʼ - பாலனாகத் தோன்றியவரை,
वक्तारं-आद्यं निगम-आदिकानां - வக்தாரம்ʼ-ஆத்³யம்ʼ நிக³ம-ஆதி³கானாம்ʼ - வேதம் முதலானவற்றை உலகிற்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தியவரை,
लोक-एक-वन्द्यं - லோக-ஏக-வந்த்³யம்ʼ - உலகனைத்தாலும் வணங்கப்படுபவரை,
तं विघ्नम् - தம்ʼ விக்⁴னம் - அந்த விக்நேசரை ,
प्रणमामि - ப்ரணமாமி - வணங்குகிறேன்.
பொருள் :
குள்ள வடிவினரை, ஏதோ நற்காரணம் கொண்டு பூமியில் பாலனாகத் தோன்றியவரை, வேதம் முதலானவற்றை உலகிற்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தியவரை, உலகனைத்தாலும் வணங்கப்படுபவரை, அந்த விக்நேசரை வணங்குகிறேன். 14
# வக்தாரம்ʼ-ஆத்³யம்ʼ நிக³ம-ஆதி³கானாம்ʼ - வேதம், புராணம், இதிஹாஸம் முதலானவைகளில் ஆத்யமாக - முழுமுதற்பொருளாக கூறப்படுபவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
# विघ्नः - விக்⁴ன: - தடை.
இது ஆயிரம் நாமாக்களில் ஒன்று. விக்ன ரூபமானவர் என்று கொள்ளலாம். நாம் தீமையில் முடியும் கார்யங்களைத் துவங்கும் போது தடையாக ஏற்பட்டு, பின் நன்மை பயக்கும் வழியில் திருப்புபவர். தடையே இல்லாமல் வாழ்வில் வளர்ந்தவர்களுக்கு, திடீரென்று சிறு தடை வந்தாலும் துவண்டுவிடுவர். ஆகவே சிற்சில தடைகளும் கர்மானுதீனமாக ஏற்படலாம். அவை பாடம் சொல்ல வந்தவை என்று அறிந்து , பகவத் சரணம் பற்றி வாழ வேண்டியது.
No comments:
Post a Comment