॥ विनायक लीला स्तुतिः ॥
|| விநாயக லீலா ஸ்துதி: ||
॥ VINĀYAKA LĪLĀ STUTIḤ ॥
स भीष्ममातुर्निजपुष्करेण जलं समादाय कुचौ स्वमातुः ।
प्रक्षालयामास षडास्यपीतौ स्वार्थं मुदेऽसौ कलभाननोऽस्तु ॥ १३॥
ஸ பீ⁴ஷ்மமாதுர்நிஜபுஷ்கரேண ஜலம் ஸமாதா³ய குசௌ ஸ்வமாது: ।
ப்ரக்ஷாலயாமாஸ ஷடா³ஸ்யபீதௌ ஸ்வார்த²ம் முதே³ঽஸௌ கலபா⁴நநோঽஸ்து ॥ 13॥
sa bhīṣmamāturnijapuṣkareṇa jalaṃ samādāya kucau svamātuḥ ।
prakṣālayāmāsa ṣaḍāsyapītau svārthaṃ mude'sau kalabhānano'stu ॥ 13॥
भीष्म-मातुः-निजपुष्करेण - பீ⁴ஷ்ம-மாது:-நிஜபுஷ்கரேண - பீஷ்மரது அன்னையினுடைய ( கங்கையினுடைய ) ( நீர் தேங்கியுள்ள ) குளத்திலிருந்து,
जलं समादाय - ஜலம்ʼ ஸமாதா³ய - நீரை எடுத்து வந்து,
षडास्य-पीतौ - ஷடா³ஸ்ய-பீதௌ - ஆறுமுகனால் ( முருகனால் ) அருந்தப்பட்ட ,
स्वमातुः कुचौ - ஸ்வமாது: குசௌ - தன் தாயின் ஸ்தனங்களை,
स्वार्थं - ஸ்வார்த²ம்ʼ - தான் குடிப்பதற்கென,
प्रक्षालयामास - ப்ரக்ஷாலயாமாஸ - கழுவியவரான,
सः कलभ-आननः - ஸ: கலப⁴-ஆனன: - அந்த யானை முகத்தவர் ( குழந்தை கணேசர் ),
असौ मुदे अस्तु - அஸௌ முதே³ அஸ்து - நம்மீது மகிழ்ச்சியாய் இருக்கட்டும்.
பொருள் :
பீஷ்மரது அன்னையினுடைய ( கங்கையினுடைய நீர் தேங்கியுள்ள ) குளத்திலிருந்து நீரை எடுத்து வந்து ஆறுமுகனால் ( முருகனால் ) அருந்தப்பட்ட, தன் தாயின் ஸ்தனங்களைத் தான் குடிப்பதற்கென கழுவியவரான அந்த ( யானை முகத்தவர் ) குழந்தை கணேசர் நம்மீது மகிழ்ச்சியாய் இருக்கட்டும். 13
# कलभः - கலப⁴: - குட்டி யானை.
# இதுவும் ஒரு சிறு குழந்தையின் லீலை.
No comments:
Post a Comment